Saturday, December 29, 2018

1. பொது சிவில் சட்டம்


இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு எதற்கு தனி சட்டம்? என்று இன்று பரவலாக கேட்கப்படுகிறது, ஆகையால் எல்லா மதத்துக்கும் பொதுவாக ஒரு பொது சிவில் சட்டத்தை ஏற்படுத்தினால் என்ன என்றும், இஸ்லாமியர்களுக்கு தனி சட்டம் உள்ளதால் அவர்கள் பொது நீரோட்டத்தில் இணையாமல் தனியாக உள்ளார்கள் என்றும் குற்றச்சாட்டப்படுகிறது.

உண்மையாதெனில், இந்தியாவில் எல்லா மதத்தினருக்கு தனி சட்டம் உண்டு. ஏதோ இஸ்லாமியர்களுக்கு மட்டும் உள்ளது போல் இங்கே பிரச்சனை பெரிதாக்கப்படுகிறது. மேலும் முஸ்லிம்களாகிய நம்மைப்பார்த்து ஏன் நான்கு விசயத்துக்கு மட்டும் சிவில் சட்டத்தை தனியார் சட்டமாக பின்பற்றுகிறீர்? கிரிமினல் சட்டத்தையும் பின்பற்றலாமே என்கின்றனர். முஸ்லிமிகளாகிய நாம் கிரிமினல் சட்டத்தையும் பின்பற்ற தயார், ஆனால் முஸ்லீம் அல்லாதவர் முஸ்லிமை கொலைசெய்துவிட்டால், ஷரியாவை ஏற்கமாட்டார்கள், ஆனால் முஸ்லீம் முஸ்லீம் அல்லாதவரை கொலைசெய்தால் நாம் ஷரியாவை ஏற்கவேண்டும், ஒரே குற்றத்திற்கு மாறுபட்ட தண்டனை. அதனால் எல்லோருக்கும் இஸ்லாமிய ஷரியாவை கிரிமினல் சட்டத்தை கொண்டுவந்தால் ஏற்போம்.

ஸ்ரீரங்கம் யானைக்கு வடகலை நாமமா அல்லது தென்கலை நாமமா என்ற பிரச்சனைக்கு இன்றுவரை தீர்வு காணப்படாத போது, இறந்தவர்களை புதைப்பது அல்லது எரிப்பது போன்ற வேற்றுமைக்கு தீர்வு காணப்படாத போது, இந்தியா முழுமைக்கும் பெண்களுக்கு சொத்தில் பங்குதாராத போது (தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமே பெண்களுக்கு சொத்தில் பங்குண்டு) எல்லோருக்கும் ஒரே சட்டம் என்பது மூடத்தனத்தின் உச்சம்.

மேலும் போது சிவில் சட்டம் மூலம், சைவத்தையோ, அசைவத்தையோ சட்டமாக இயற்றமுடியாதபோது, பல கடவுளை வழிபடுவதை தடுத்து ஒரே கடவுளை வழிபடவைக்கமுடியாத போது எப்படி எல்லா மதத்தினருக்கும் ஒரே சட்டம் முடியும்?

மாட்டை கடவுளாக (?) வழிபடும் சமுதாயத்திற்கும், வெட்டி உண்ணும் சமுதாயத்திற்கும் (ஹிந்துக்களிலேயே உண்பவர்கள் உண்டு) எப்படி ஒரே சிவில் சட்டம் செல்லும்?

மாட்டின் சிறுநீரை புனிதமாக கருதும் சமுதாயத்திற்கும், உரமாக பயன்படுத்தும் சமுதாயத்திற்கும் எப்படி ஒரே சட்டம் முடியும்?

ஆகமவிதி என்ற பெயரால் ஒரே ஒரு சமுதாயம் மட்டும் கோவிலின் கருவறை வரை செல்லும் சமுதாயத்திற்கும், கோவிலுக்குள்ளே செல்லமுடியாத சமுதாயத்துக்கும் எப்படி ஒரே சட்டம் செல்லும்? கருவறையில் விபச்சாரம் செய்யும் ஆட்களுக்கும், அதே கருவறையை கடவுளின் இடம் என்று சொல்லும் ஆட்களுக்கும் எப்படி ஒரே சட்டம் நியாயம் ஆகும்?

முதலில் இல்லாத மதமான ஹிந்துமதத்தில் உள்ளவர்களுக்கு ஒரே சட்டத்தை கொண்டுவந்துவிட்டு, பிறகு எல்லா மதத்தினருக்கு பொது சிவில் சட்டம் கொண்டுவாருங்கள், பிறகு யோசிக்கலாம்.


ஹிந்துமத்தில் உள்ள சாதிகளை அகற்றிவிட்டு, உரிமைகளையும், அதிகாரத்தையும் பகிர்ந்து கொடுத்துவிட்டு பிறகு பேசுங்கள் போது சிவில் சட்டம் பற்றி.






சிலைவழிபாட்டுக்கு எதிரான ஆதிசங்கரர் கருத்து

தொலைந்த ஊசியைத் தேடுதல்

நீதி – உண்மை
உபநீதி – ஆழ்ந்த சிந்தனை, உள் நோக்குதல்
In search of a lost needle picture 1
அத்வைத குருவான ஆதிசங்கரர், ஒரு நாள் தனது ஆசிரமத்தின் குடிசைக்கு  வெளியே, நிலவு வெளிச்சத்தில் எதையோ தேடிக் கொடிண்டிருந்தார். அதைக் கண்ட அவரது சீடர்கள், இந்நேரத்தில் அவர் எதைத் தேடுகிறார் என ஆர்வத்துடன் கேட்டனர்.
ஆதி சங்கரர், தான் தொலைத்த ஊசியை தேடுவதாக பதிலளித்தார்.
சிறிது நேரம் தேடிய சீடர்கள் “குருவே!! தாங்கள் ஊசியை எங்கு தவற விட்டீர்கள்?” என்று கேட்டனர்.
அதற்கு ஆதி சங்கரர், குடிசைக்குள் படுக்கைக்கு அருகே  தவற விட்டதாகக் கூறினார்.
குழம்பிய சீடர்கள் தயங்கியவாறே, “உள்ளே தவற விட்டதை ஏன் வெளியே தேடுகிறீர்கள்” என்று வினவ,  குரு ஒன்றும் அறியாதது போல், “உள்ளே இருட்டாய் இருக்கிறது. விளக்கில் எண்ணையும் இல்லை. அதனால் வெளிச்சம் உள்ள இவ்விடத்தில் தேடுகிறேன்” என்றார்.
சீடர்கள் அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு, “உள்ளே தொலைத்ததை வெளியே தேடினால் எப்படிக் கிடைக்கும்?” என்று கேட்டனர். குரு மெளனமாக புன்னகைத்தார். “நம் உள்ளத்தில் உள்ள இறைவனைத் தொலைவில் உள்ள கோயில்களுக்கு ஓடிச் சென்றோ, மலைகளுக்கு நடந்து சென்றோ தேடுகிறோம் அல்லவா? அது போல் தான் இதுவும். உள்ளே தொலைத்ததை வெளியில் ஏன் தேடுகிறோம்? ஏனென்றால், நம் உள்ளம் இருட்டாக இருக்கின்றது.
நீதி:
இறைவன் நம் உள்ளேயே ஆத்மஸ்வரூபமாய் இருக்கிறார். நாம் உள்ளே தொலைத்ததைக் கண்டு பிடிக்க நம் உள்ளங்களில் விளக்கேற்ற வேண்டும்.  மனதில் இருள் சூழ்ந்துள்ளதால் இறைவனை வெளியே கோயில், மலை, காடு என பல இடங்களில் நாம் தேடுகிறோம்; நம் உள்ளங்களில் இருக்கும் இறைவனைப் பார்ப்பதில்லை. அவரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உண்மையாக இருந்தால், நம் உள் மனதைப் புரிந்து கொள்ளும் வகையிலும், உள்ளார்ந்த நோக்குதல் போன்ற அறிவையும் நமக்குக் கற்பிக்கும் வகையில் கடவுள் குருவை அனுப்புகிறார். உண்மையான குருவின் வார்த்தைகளுக்கு ஏற்ப, நம்பிக்கையும், ஒழுங்கு முறையாக நடந்து கொள்வதும் மிகவும் முக்கியமாகக் கருதப் படுகிறது.

Friday, December 28, 2018

1. உயர்சாதியினரும், சங்கிகளும் பெரியாரை எதிர்ப்பது ஏன்?


சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு 1929ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17, 18 தேதிகளில் செங்கல்பட்டில் நடத்தப் பட்டது. டபிள்யூ.பி.ஏ. சௌந்தரபாண்டியன் தலைமையில் பி.டி ராஜன் கொடியேற்றித் துவக்கி வைத்த அந்த மாநாட்டில் பின்வரும் கருத்துக்களைக் கொண்ட 34 தீர்மானங்கள் இயற்றப்பட்டது.

  1. இந்தியாவுக்கு வரும் சைமன் குழுவை புறக்கணிப்பது நியாயம் இல்லை.அக்குழுவின் முன் சாட்சி சொல்ல மறுப்பது பொருத்தமற்றது.
  2. நால்வருண முறையை ஏற்றுக் கொள்ளக் கூடாது. மக்களிடையே பிறப்பால் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் வேதம், சாஸ்திரம், புராணங்கள் போன்றவற்றை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
  3. தீண்டாமை ஒழிக்கப் பட்டு சாலைகள், குளங்கள், கிணறுகள், பள்ளிகள், சத்திரங்கள், தண்ணீர்ப் பந்தல்கள் முதலியவற்றில் சகலருக்கும் சம உரிமைகள் தரப்பட வேண்டும், இதை வலியுறுத்தி அரசு சட்டம் இயற்ற வேண்டும்.
  4. மக்கள் ஜாதிப் பட்டத்தையும், வகுப்புப் பட்டத்தையும், அடையாளக் குறிகளையும் பயன்படுத்தாது ஒழிக்க வேண்டும்.
  5. பெண்களுக்கு 16 வயதுக்கு மேல்தான் திருமணம் செய்யப்பட வேண்டும்.
  6. விவாகரத்து உரிமை, விதவைகள் மறுமணம், சொற்ப செலவில் திருமணம், ஒரு நாள் திருமணம் போன்றவை அமுலுக்கு வர வேண்டும்.
  7. கல்வி நிலையங்களில் தாய்மொழியிலேயே கல்வி தரப்பட வேண்டும். பிறமொழிப் பாடங்களுக்குப் பொதுப் பணத்தை உபயோகிக்கக் கூடாது.
  8. பள்ளிக்குச் செல்லத்தக்க சிறுமிகளுக்கு ஆரம்பக் கட்டாயக் கல்வி தரப் படவேண்டும்.
  9. தாழ்த்தப்பட்ட குடும்பத்துப் பிள்ளைகளுக்கு பள்ளியில் புத்தகம், உணவு, உடை போன்றவை இலவசமாக அளிக்கப் பட வேண்டும்.
  10. பெண்களுக்குச் சம சொத்துரிமை, வாரிசு பாத்யதை, ஆண்களைப் போலவே தொழில் நடத்த சம உரிமை, ஆசிரியர் பதவியில் அதிக இடம் முதலியவை வழங்கப்பட வேண்டும். ஆரம்பப் பள்ளி ஆசிரியர் பதவி முழுதும் பெண்களுக்கே வழங்கப்பட வேண்டும்.
  11. பள்ளிகளில் மூடநம்பிக்கையுள்ள புத்தகங்களைப் பாடமாக வைக்கக் கூடாது.
  12. ஜாதி வேறுபாடு காண்பிக்கும் ஹோட்டல்களுக்கு உரிமை தரக்கூடாது.


1930ஆம் ஆண்டு இரண்டாவது சுயமரியாதை இயக்க மாநாடுஈரோட்டிலும், 1931ஆம் ஆண்டு மூன்றாவது மாநாடு விருதுநகரிலும் நடைபெற்றது. இந்த இரண்டு மாநாட்டிலும் சுயமரியாதைப் பெண்கள் மாநாடு, சுயமரியாதை வாலிபர்கள் மாநாடு ஆகியவை தனியாக நடைபெற்றன. இவற்றில் முக்கியமான பல சீர்திருத்த கருத்துக்கள் தீர்மானங்களில் முன் மொழியப் பட்டன.


1. குழந்தைத் திருமணம், தேவதாசி முறை முதலியவற்றை இப்பெண்கள் மாநாடுகள் வன்மையாகக் கண்டித்த அதே நேரம் பெண்களின் திருமண வயதை முறைப்படுத்திய சாரதா சட்டத்தை மகிழ்வுடன் வரவேற்றன.

2. சொத்தில் சம உரிமை, கார்டியனாக இருப்பது, தத்து எடுத்துக் கொள்வது போன்றவற்றில் சம உரிமை, சட்டமன்றம் மற்றும் நகர்மன்றங்களுக்குப் பெண்கள் தேர்ந்தெடுக்கப் பட ஏற்பாடு செய்வது.

3. பெண் கல்வியை 11 வயதோடு நிறுத்தாமல் 30 வயது வரை படிக்க வைத்தல், பெண்களை காவல் துறை மற்றும் ராணுவத்தில் சேர்த்தல், அனாதை விடுதிகள் திறப்பு, ரயில் நிலையங்களில் பெண்கள் தங்குவதற்கென்று தனியறை, பெண் ஊழியர்கள் நியமனம்.

4. கள்ளுக்கடை ஒழிப்பு போன்றவை குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றம் குறித்த அக்கறையுடன், அவர்களுக்கென தனி மாநாடு ஏற்படுத்தித் தந்த முதல் அமைப்புசுயமரியாதை இயக்கமே ஆகும்.


இப்படியெல்லாம் தீர்மானம் நிறைவேற்றினால் எப்படி உயர்சாதியினரும், சங்கிகளும் பெரியாரை விரும்புவார்கள்?






Tuesday, December 25, 2018

வரலாற்றில் இன்று 25-12-2018

வரலாற்றில் இன்று 25-12-2018

1. கடவுள் பிறந்த தேதி(?) என்று இன்று கொண்டாடப்படுகிறது, இன்று கடவுள் பிறந்தார் என்று எடுத்துக்கொண்டாலும், அவர் தன் 33 வயது வாழ்க்கையில் பிறந்த நாள் கொண்டாடினாரா? மற்றவர்களை கொண்டாட சொன்னாரா?

மேலும் 1+1+1= எப்படி 1 ஆகும்?

2. கீழவெண்மணியில் கூலியை உயர்த்திகேட்டதின் காரணத்தால் ஏற்பட்ட புரட்சியால் 44 தொழிலாளிகள் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட கொடூரத்தை விட அதன் தீர்ப்பு தான் அதைவிட கொடூரம், அப்சல் குருவின் தீர்ப்புக்கும் அதற்கும் பெரிய வித்யாசம் இல்லை

3. உங்களுக்கு எதிராக இனி போராடமாட்டேன் என்று ஆங்கிலேயனுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்த சாவர்க்கரின் வாரிசு வாஜ்பாயின் பிறந்த நாள், மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்த ஆர் எஸ் எஸ் காரன் என்பதால் இவரின் பிறந்தநாளை மறத்தல் கூடாது.

கீழவெண்மணி: அணையா நெருப்பின் அரை நூற்றாண்டு!- செய்திகள்-25-12-2018


ராமர் பெயரில் ஆசைவார்த்தை பேசாதீர்கள் மன்னிக்கமாட்டோம்’: பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

நாளையும் வங்கிகள் செயல்படாது: ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் முடங்கும்

புதிய 20 ரூபாய் நோட்டு விரைவில் அறிமுகம்: புதிய வடிவில் வெளியாகிறது

சீன எல்லைக்கு இனி ராணுவம் வேகமாக செல்லாம்’’ -பிரம்மபுத்திராவின் குறுக்கே பிரமாண்ட பாலம்; பிரதமர் மோடி திறந்து வைத்தார்

அந்தமானில் உள்ள 3 தீவுகளின் பெயர் மாற்றம்: மத்திய அரசு திடீர் முடிவு

முகலாயர்களை போல இந்திய கலாச்சாரத்தை அழிக்க துடிக்கும் கம்யூனிஸ்ட்டுகள்’’ - திரிபுரா முதல்வர் சாடல்

கீழவெண்மணி: அணையா நெருப்பின் அரை நூற்றாண்டு!

அய்யோ அம்மான்னு சத்தம் கேட்டதுக்குப் பின்னாடி ஒரு சத்தமும் கேக்கல!' - வாழும் சாட்சி பழனிவேல் நேர்காணல்

மோடியின் மெகா ரபேல் ஊழல்; தமிழகம் முழுவதும் காங்கிரஸ் பிரசாரம்’’ - திருநாவுக்கரசர்


Monday, December 24, 2018

மக்களவை தேர்தலுக்கு முன்னதாக ராமர் கோயில் கட்டப்படும்: சு.சுவாமி- செய்திகள்-24-12-2018


மக்களவை தேர்தலுக்கு முன்னதாக ராமர் கோயில் கட்டப்படும்: சு.சுவாமி
--------------------------------------------------------------------------------------------------------------------



1.     மீண்டும் தீவிரமாகும் 3 அணி: நவீன்மம்தாவுடன் சந்திரசேகர் ராவ் சந்திப்பு


2.ஹனுமர் மீதான பாஜகவினர் கருத்திற்கு .பி. கோயில் மடாதிபதிகள்சாதுக்கள் எதிர்ப்பு


3. உலகின் மிகப்பெரிய கட்சிகளுள் பாஜக-வும் ஒன்றுவாஜ்பாய் செங்கல் செங்கலாகக் கட்டியெழுப்பிய கட்சி: பிரதமர் மோடி உரை


4.    அனைத்து கணினிகளையும் கண்காணிக்க 10 அமைப்புகளுக்கு அதிகாரம்: மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு


5.    அயோத்தியில் பாலியல் தொழிலாளர்களுக்கு 'ராமர் கதைசொற்பொழிவுசர்ச்சையில் ஆன்மிக தலைவர்


6.     காங்கிரஸைவிட பாஜக மிகவும் ஆபத்தானது: சந்திரபாபு நாயுடு


7.  தலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது: தெலங்கானாவில் மீண்டும் ஜாதி ஆணவப் படுகொலை


8. மக்களவை தேர்தலுக்கு முன்னதாக ராமர் கோயில் கட்டப்படும்: சு.சுவாமி


9. திரும்பிப் பார்க்கிறோம் 2018: உலக அளவில் வேகமாக வளரும் 3 தமிழக நகரங்கள்பணம் அனுப்புவதில் முதலிடம் வகிக்கும் இந்தியர்கள்

https://tamil.thehindu.com/business/article25819346.ece?utm_source=HP&utm_medium=hp-online 

10.   பெரியாருக்கு இருந்த ஒரே அச்சம்எம்.ஜி.ஆர் எனும் புதிர்! - அப்பப்போவில் நீங்கள் படிக்கவேண்டிய ஆறு கட்டுரைகள்! #APPAPPOClassics

https://www.vikatan.com/news/tamilnadu/145498-exclusive-stories-in-appappo-periyars-last-days-and-mgrs-success-story-in-cinema-appappoclassics.html 

11.  வேலை கொடுங்க... இல்லை எங்க நிலத்தைக் கொடுங்க!’ - 38 ஆண்டுகளாகப் பெல் நிறுவனத்திடம் போராடும் ஏழு பேர்

 https://www.vikatan.com/news/tamilnadu/145481-complaint-against-ranipettai-bhel-company.html?artfrm=home_breaking_news

  12.   கிளி ஜோசியரைக் கொன்றுதுண்டுப் பிரசுரங்களை வீசிச்சென்ற மர்ம நபர்! - திருப்பூரில் பயங்கரம்

 https://www.vikatan.com/news/tamilnadu/145478-astrologer-killed-in-tirupur.html

  13.   மினிமம் பேலன்ஸ்அபராதம் - எந்தெந்த ஆண்டில் எவ்வளவு வசூல்?

https://www.vikatan.com/news/india/145484-psbs-mopup-over-10000-crore-from-people-not-maintaining-minimum-balance-using-atms-more.html?artfrm=home_breaking_news

 14.  வரும் காலங்களில் உணவுக்காக அடுத்த மாநிலங்களிடம் கையேந்தப் போகிறதா தமிழகம்?

 https://www.vikatan.com/news/miscellaneous/145451-will-we-have-to-depend-on-other-states-in-future.html

 15.    தமிழக மக்கள் மாநிலக் கட்சிகளைத்தான் ஆதரிக்க வேண்டும்! - பா..-வுக்கு எதிராக சீறிய தினகரன்

 https://www.vikatan.com/news/tamilnadu/145445-ttv-dinakaran-slams-national-parties.html

 16.   ணக்கார வீட்டு திருமணங்களில் கலந்துகொள்ள மட்டும் நேரம் இருக்கிறதா? - திருச்சியில் ஸ்டாலின் விளாசல்

 https://www.vikatan.com/news/tamilnadu/145379-stalin-slams-pm-modi-in-trichy.html

அனைத்து கம்ப்யூட்டர்களையும் கண்காணிக்க அதிகாரம்; சாதக, பாதகம்

அனைத்து கம்ப்யூட்டர்களையும் கண்காணிக்க அதிகாரம்; சாதக, பாதகம்.

1.      நாட்டில் உலவும் தேச விரோத சக்திகளை அடியோடு அழிக்கலாம். 
2.      வங்கி கணக்குகளையும் கொஞ்சம் ஆழமாக ஆராய முடியும்.
3.      வெளிநாடுகளில் பணம் பதுக்குவதையும் தடுக்கமுடியும்.
4.      நம்முடைய ரகசியங்களை கூகுள் வைத்திருக்கும்போது, மத்திய அரசாங்கம் வைத்திருப்பதில் தவறு என்ன இருக்கிறது.
5.      கம்ப்யூட்டர்களை கண்காணிப்போம் எனக் கூறுவதால் மக்கள் மாற்று வழிகளை சிந்திக்கஆரம்பித்து விட்டால் அரசுக்குத்தான் சிக்கல் ஏற்படும். இதுபோன்ற அச்ச உணர்வு  பகிரங்கமான தகவல் பரிமாற்றத்தை தடுத்துவிடும். ஏற்கெனவே அனைத்து தகவல் பரிமாற்றங்களும் அரசாங்கத்தால் கண்காணிக்கப்பட்டு வரும் போது இந்த உத்தரவு அரைவேக்காட்டுத்தனமானது.
6.      முதலில் இந்த 10 அமைப்புகளும் ஆளுங்கட்சியின் கைப்பாவையாக செயல்படாமல் நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும்.
7.      இந்தியா ஒரு ஜனநாயக நாடா அல்லது சர்வாதிகார நாடா என்ற கேள்வி எழுகிறது.
8.      பாஜக அரசு நாட்டின் பாதுகாப்பு விஷயங்களில் பல்வேறு குளறுபடிகளை வைத்துக்கொண்டு தற்போது பாதுகாப்பு என்ற பெயரில் தனிமனித உரிமை, தனி மனித சுதந்திரத்தில் தலையீடு செய்வது சரியல்ல.
9.      ஹேக்கர்கள் போன்ற நவீன திருடர்களைக் கண்டுபிடித்து தண்டிப்பதற்காகவே தகவல் தொழில்நுட்ப சட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது அரசாங்கமே சட்ட ரீதியாக தகவல்களைத் திருடும் என்பது எந்த வகையில் நியாயம்.
10.  சினிமா, நீதித்துறை, பெண்களின் அந்தரங்கம், பத்திரிகை, தேர்தல், அரசியல்கட்சிகளின் அனைத்து விஷயங்களையும் எளிதாக கண்காணித்து இடைமறிக்க முடியும் என்பது மீண்டும் ஆங்கிலேயர்களின் காலத்தைத்தான் காட்டுகிறது.
11.   எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி அரசுக்கு எதிராக யார் கருத்துப்பதிவு செய்தாலோ அல்லது தகவல்களைச் சேகரித்தாலோ அவர்களை தொந்தரவு செய்யலாம் என்பது இன்னும்மொரு ஜனநாயகப் படுகொலையாகத்தான் பார்க்க முடியும். டிஜிட்டல்மயம் எனக்கூறி மக்களை ஏமாற்றியது இதற்காகத்தானா என்ற சந்தேகமும் எழுகிறது.


https://tamil.thehindu.com/tamilnadu/article25805789.ece

இந்தியாவில் யூதர்களுக்கான சிறுபான்மை அந்தஸ்து


இந்தியாவில் யூதர்களுக்கான சிறுபான்மை அந்தஸ்து
1 . கம்முனிசத்தை சேர்ந்த புத்த தேவ் பட்டாச்சாரியா, மேற்கு வாங்க மாநில முதல்வர் 2008  ல் யூதர்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கினார்.
2 . 2016ம் வருடம் ஜூன் 21 அன்று மஹாராஷ்டிராவை ஆளும் பா.ஜ.க. அரசு தனது மாநிலத்தில் யூதர்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கியது.
3 . 2018 , ஜூலை 7ம் தேதி குஜராத்தை ஆளும் மாநில பா.ஜ.க. அரசு 134  யூதர்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கியுள்ளது.

2014ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதியன்று பூனாவில் உள்ள ஓஹெல் டேவிட் யூத ஆலையத்தின் 150வது ஆண்டு விழாவில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் யூதர்கள் இந்தியாவின் பொன் அணிகலன்கள் என்று சொன்னது குறிப்பிடத்தக்கது.



காலித் பின் வலீத் (ரலி) அவர்களுக்கு அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் செய்த ஒரு உபதேசம்


காலித் பின் வலீத் (ரலி) அவர்களுக்கு அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் செய்த ஒரு உபதேசம் வரலாற்றிலே பதிவு செய்யப்படுகிறது.
நீ மரணிப்பதற்கு ஆசைப்படு, வாழ்வு உனக்கு பரிசாக கிடைக்கும்.’
நாம் வாழவேண்டுமென்றால் மரணத்திற்கு ஆசைப்பட வேண்டும். துணிவதற்கு தயாராக வேண்டும். சத்தியத்தை நிலைநாட்டுவதற்கு, வெற்றி பெறச் செய்வதற்கு நாம் தயாரானால் நிச்சயமாக இறை உதவி கிடைத்தே தீரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இப்படிப்பட்ட எல்லா அடிப்படைகளையும் மனதிலே கொண்டு ஒன்றிணைந்து தேசம் காப்போம்!!
இதற்காக குர்ஆனின் அடிப்படையில், ஹதீஸின் அடிப்படையில், அண்ணலம் பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில், கடந்தகால முஸ்லிம்களுடைய, இஸ்லாமிய வீரர்களுடைய வரலாற்றின் அடிப்படையில் இந்த சமூகத்தை நம்பிக்கையான சமூகமாக பயிற்றுவிக்க வேண்டும். அநீதத்தை எதிர்க்கக்கூடிய சமூகமாக பயிற்றுவிக்க வேண்டும்.
இந்த இலக்கை அடைவதற்கு உலமா சமூகம் மக்கள் சமூகத்தை பயிற்றுவித்து, ஒன்றிணைந்து ஒரே கோட்டில் அணிவகுத்தால் இன்றைக்குள்ள அநீதமான இந்தியாவை துடைத்தெறிந்து, நீதிமிக்க இந்தியாவை, சமத்துவமான இந்தியாவை, பயம் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கு முன்வர வேண்டும். நாம் முன்வந்தால் நிச்சயமாக ஒரு நம்பிக்கையான சமூகத்தை வார்த்தெடுக்க முடியும். குறிப்பாக, கடந்த கால வரலாற்றிற்கு சொந்தக்காரர்களான முஸ்லிம்கள் எதிர்கால வளமான வரலாற்றிற்கும் சொந்தக்காரர்களாக மாறுவார்கள். பிற்படுத்தப்பட்ட மக்களும் சுபிட்சமான வாழ்க்கையை மேற்கொள்வார்கள்.
-சம்சுல் இக்பால் தாவூதி
மாநில பொதுச் செயலாளர்,
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...