Wednesday, January 30, 2019

8. ஹனுமான் கோவிலில் மாட்டுக்கறியை எறிந்து கலவரத்தை தூண்டிய ஆர் எஸ் எஸ் & பிஜேபி யினர் - ஆந்திரா ஹைதராபாத் 2002 (தெலுங்கானா)


நான்கு பேர் கொண்ட குழு ஹனுமான் கோவில் மீது மாட்டுக்கறியை வீசி, கோவில் சுவற்றில் பச்சை வண்ணத்தை அடித்து ஹிந்து முஸ்லிம்களுக்கு இடையில் கலவரம் செய்ய முயன்றதை ஹைதராபாத் போலீஸ் கண்டுபிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ரீனி மற்றும் நிரஞ்சன் ஒரு உணவகத்தில் மது அருந்திவிட்டு இந்த தித்தத்தை தீட்டி, நாகராஜ், கிரண் குமார், ரமேஷ் மற்றும் தயாநிந்த் சிங் ஆகியோரை வைத்து திட்டத்தை நிறைவேற்றினர் என்று போலீசார் தெரிவித்தனர்.

நாகராஜ், கிரண், ரமேஷ் மற்றும் தயானட் ஆகியோர் சாம்பேட்டேயில் ஒரு மது கடையில் கூடி, கோவிலில் மாட்டுக்கறியை எறிவதை பற்றி  கலந்துரையாடி, பிறகு மதுபானம் சாப்பிட்டனர். பிறகு அங்கிருந்து வெளியேறி நாகராஜூ மற்றும் ரமேஷ் மாட்டுக் கால்கள் இரண்டு துண்டுகள் மற்றும் ஒரு பெயிண்ட் பாட்டில் வாங்கினர். அவர்கள் கோவிலுக்கு சென்று கோயில் சுவர்களில் பச்சை வண்ணத்தை பூசினார், மாட்டுக்காலை கோவிலுக்குள் வீசிவிட்டு சென்றனர்.

இதனால் நடந்த கலவரத்தால் 12 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், கோவில் சேதமடைந்தது. இந்த கலவரத்திற்கு முன்னும் பின்னும் பிரவின் தொகாடியா வந்துபோனது குறிப்பிடத்தக்கது. தொகாடியா ஹைதராபாத்துக்கு வந்து மாநில அரசை விமர்ச்சித்துவிட்டு சென்றவுடன், கலவரம் ஹைட்ரபாத் மற்றும் செக்கந்தராபாத் பகுதியில் கலவரம் அதிகமானது, மேலும் 144  தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 

பிஜேபி யினர் அந்த மதவெறியர்களை விடுவிக்குமாறு தர்ணா நடத்தினர்.

https://www.news18.com/news/india/4-held-for-old-city-communal-riots-469243.html

http://www.ummid.com/news/2012/April/29.04.2012/4_held_in_hyderabad_case.htm

Tuesday, January 29, 2019

அதிகாரிகளின் தடையை மீறி கல்வி உதவித்தொகை வழங்கிய பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா - ஜார்கண்ட்


பாகூர் ஜார்கண்ட்:

ஏழை மாணவர்களுக்கான உதவித்தொகையை பாப்புலர் ஃப்ரண்ட்  ஆப் இந்தியா வழங்கும் விழாவை ஜனநாயகத்துக்கு விரோதமாக தடுத்து நிறுத்திய ஜார்கண்ட் மாநில அதிகாரிகளை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது.

பாப்புலர் ஃப்ரண்ட்  ஆப் இந்தியா ஏழு வருடத்திற்கு மேலாக  இந்த தலையாய பணியை செய்து வருகிறது.

பாகூர் டவுன் ஹாலில், ஜார்கண்ட் பாப்புலர் ஃப்ரண்ட்  இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தது, ஓ.ம்.எ ஸலாம் தேசிய துணை தலைவர் மற்றும் முஹம்மது அலி ஜின்னாஹ் தேசிய பொதுச்செயலாளர் ஆகியோர் கலந்து கொள்ள இருந்த நிழ்ச்சி கடைசி நிமிடத்தில் தடை செய்யப்பட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நன்றாக படிக்கக்கூடிய 86  மாணவர்களுக்கு சுமார் 4  லட்சம் ரூபாயை உதவித்தொகையாக வழங்க நேர்முகத்தேர்வு ஏற்படு செய்யப்பட்டு இருந்தது, அவர்கள் முன்னதாக ஆன்லைன் மூலம் பதிவு செய்திருந்தது குறிப்பிட தக்கது.

ஹால் புக்கிங் மற்றும் போலீஸ் அனுமதி போன்ற எல்லா சட்ட ரீதியான நடவடிக்கையும் முன்னதாகவே எடுக்கப்பட்ட இந்த திட்டத்தை தோல்வியடைய செய்யும் முகமாக (உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக) மாணவர்கள் ஹாலுக்கு நுழய அதிகாரிகள் தடை விதித்தனர்.

இருந்த போதிலும் மைதானத்தில் வைத்து உதவித்தொகையை வழங்கிவிட்டோம், மாநில அரசு சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினரின் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட எங்கள் அமைப்பின் வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து எதிர்மறையான அணுகுமுறையுடன் தொடர்வது துரதிஸ்டவசமானது.

மாநில அரசானது மக்களையும் மக்களின் உரிமையையும் காக்காமல் ஆளும் கட்சியின் கைப்பாவையாக திகழ்கிறது.


ஏற்கனவே பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் அதன் நடவடிக்கைகளை தடைசெய்ய மாநில அரசு முயன்று நீதிமன்ற உத்தரவால் முகத்தில் கறியை பூசிக்கொண்டு நிகழ்வு எல்லோருக்கும் நினைவிருக்கலாம். மேலும் மாநில அரசு மற்றும் அதிகாரிகள் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் இயற்கை நீதிகளை ஆதரித்து, எதிர்மறையான மனோபாவத்தை விட்டுக்கொடுக்கவும், கல்வி மற்றும் சமூக ரீதியாக அபிவிருத்தி செய்ய மக்களின் முயற்சிகளை ஆதரிக்கவும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

மேலும் ஜார்க்கண்ட் மக்களை அடிப்படை உரிமைகளை பாதுகாக்கவும் இயற்க்கை நீதி மறுக்கப்படுவதற்கு எதிராகவும் ஒன்றிணைய பாப்புலர் ஃப்ரண்ட்  அழைக்கிறது.

(Released in press conference held on 21 January 2019 at Pakur, Jharkhand)
Press conference attended by:

1. O.M.A. Salam (Vice Chairman, Popular Front of India)
2. Mohammed Ali Jinnah (Gen Secretary, Popular Front of India)
3. MoulanaKaleemullaRashadi (Zonal President, Bihar Jharkhand Zone)
4. MoulanaHanzalaShiekh (State President, Jharkhand)
5. Abdul Wadood (State Gen Secretary, Jharkhand)

http://www.popularfrontindia.org/?q=thu-01242019-1052

Monday, January 21, 2019

12. ஏழு பிறவி (அல்லது) மறுபிறவி




இந்துமதத்தில் சொல்லப்படுகிற ஏழுபிறவிகள் என்பது இஸ்லாம் கூறும் ஏழு பிறவிகள், நான் தேடியவரை வேதத்தில் எந்த ஆதாரமும் ஏழு பிறவிகளுக்கு கிடைக்கவில்லை.

இஸ்லாத்தின் ஏழுபிறவிகள்


  1. ஆலமே அர்வா - ரூஹ்களின் உலகம்,
  2. தகப்பனின் நெற்றி
  3. தாயின் கருவறை
  4. உலகம்
  5. மண்ணறை
  6. மறுமை
  7. சொர்க்கம் அல்லது நரகம்.

ஆக இஸ்லாத்தின் அடிப்படையும் மற்ற வேதங்களின் அடிப்படையும் ஒன்றே, ஆகையால் இஸ்லாத்தை பின்பற்றி மோட்சம் அடைவோம். ஏன் இஸ்லாத்தை பின்பற்றவேண்டும்? ஏனெனில் இஸ்லாம் தான் லேட்டஸ்ட் வெர்சன், யாரும் சம்பளம் உயர்த்தியபின் பழைய சம்பளம் தாருங்கள் என்று பிடிவாதம் பிடிக்கமாட்டோம்.

http://www.sacred-texts.com/the/tot/chap07.htm

11. நரகத்திற்கு செல்பவர்களின் பட்டியல் - கருட புராணம்.



ஹிந்துமதத்தை பொறுத்தவரை சொர்க்கம் நரகம் இல்லை, பாவம் செய்தால் மறுபிறவி இழிபிறவியாகவும், புண்ணியம் செய்தால் மறுபிறவி நல்லபிறையாகவும் இருக்கும் என்றும் சொல்கின்றனர். ஆனால் கருட புராணத்தில் நரக்கத்திற்கு இட்டுசெல்லும் பாவங்கள் என்று ஒரு பகுதியே உள்ளது.

தவறு செய்யக்கூடியவர், நல்லதை விட்டு தூரமாகிறவர்கள் நரகத்திற்கு செல்வார்கள். நீதிமான்கள் மூன்றுவழியாக சொர்க்கத்திற்கு செல்வார்கள், ஆனால் தீயது செய்தவர்கள் செல்ல ஒரே ஒரு வழியே உள்ளது, அது வைத்திராணி ஆறு என்ற பரிதாபமான வழியே. வைத்திராணி ஆறு என்பது ரத்தத்தால் ஆனா ஆறு, இதை தாண்டியே நரகத்திற்கு செல்லவேண்டும் என்று சொல்லப்படுகிறது.
(ஆதாரம் https://en.wikipedia.org/wiki/Vaitarna_River_(mythological))


பிராமிணனை கொலைசெய்தவன், குடிகாரன், பெண்களையும் கருவையும் அழிப்பவன், சிசுவைகொல்பவன், தனிமையில் தவறுசெய்பவன்.

ஆசிரியர்களிடமும், கோவில்சொத்தையும், பெண்களின் உடமைகளையும் மற்றும் சிறுவர்களின் உடமைகளையும் திருடுபவன்,

கடனை திருப்பி தராதவன், அமானிதத்தை பேணாதவன், நம்பிக்கை மோசடி செய்பவன் மற்றும் விஷம் வைத்து மற்றவை கொல்பவன்.

பொறாமைப்படுபவன்.

புனித யாத்திரை, நல்ல மனிதர்கள், நல்ல செயல்கள், ஆசிரியர்கள் மற்றும் பிரகாசிக்கும் இடங்களை வெறுப்பவர்கள்; புராணம், வேதாஸ், மியாஸ்ஷா, நியாயா மற்றும் வேதங்களை சிதைப்பவன்.

மற்றவர் துன்பப்படும்போது அதில் சுகம்கானுபவன், மகிழ்ச்சியானவர்களை கண்டு பொறாமைப்படுபவன், எப்போதும் தீய வார்த்தை பேசுபவன்.

நல்ல ஆலோசனையையோ அல்லது ஞானமான வார்த்தைகளையோ கேட்காதவர்கள், தான் தோன்றிகள் மற்றும் முட்டாள்கள்.

பொய் சாட்சி சொல்பவன், தவறான வழியிலும் ஏமாற்றுவதன் மூலமும் சம்பாதிப்பவன் மற்றும் திருடன் 

பெரிய மரங்கள், தோட்டங்கள் மற்றும் காடுகளை அழிப்பவன், விதவைகளின் கற்பை பற்றி சந்தேக்கிறவர்கள், புனித யாத்திரை மேற்கொள்ளாதவர்கள்.

தன் கணவனை வெறுத்து இன்னொருவரை நினைத்துக்கொள்கிற மனைவி. 

கிணறுகள், குளங்கள், குளங்கள், சன்னதிகள் அல்லது மக்களின் வீடுகளை அழிக்கிறவர்கள்.

தங்கள் மனைவிகளையும், பிள்ளைகளையும், ஊழியர்களையும், போதகர்களையும் புறக்கணித்தவர்களாய் உண்பவர்கள், முற்பிதாக்களும், பிரகாசிகளுமாகிய காணிக்கைகளைப் புறக்கணித்து, இந்த நரகத்திற்குச் செல்கிறார்கள்.

மரத்தாலும், கற்களாலும், முள்ளுகளினாலும் நடைபாதையை தடுக்கிறவர்கள.

சுயநலவாதிகள், இறைவனை வணங்காதவர்கள், ஆசிரியரை மதிக்கத்தவர்கள்.

விபச்சாரம் செய்பவர்.

இணைவைப்பவர்.

சண்டை செய்பர்வர்கள், இருவரிடம் சண்டையை ஏற்படுத்துபவர்கள். 

கருக்கலைப்பு செய்யும் பெண்கள்.

மாதவிடாய் காலங்களில் பெண்களிடம் உறவு கொண்டவர்கள்.

தண்ணீரில், விளைந்த தோட்டத்தில், சாலையில் அல்லது கோட்டையில் பிங்கலை எரிப்பவர்கள். 

சவுரி முடிகளை விற்கும் பெண்கள்.

நன்மையை வெறுப்பார்கள், குற்றமற்றவரை தண்டிப்பவர்கள். 

விருந்தாளியை கண்ணியப்படுத்தாதவர்கள்.

உயிரினக்ளுக்கு தீங்கு செய்பவர்கள்.

நண்பர்களை காட்டிக்கொடுப்பவர்கள், நம்பிக்கை துரோகம் செய்பவர்கள்.

திருமணத்தைத் தடுக்கிறவர்கள்

வீட்டையோ, கிராமத்தையே அல்லது மரத்தையோ எரித்தவர். 


10. சொர்க்கத்தில் பெண்கள் கிடைப்பார்களா? ஹிந்துவேதம் சொல்வதென்ன?



உலகில் தோன்றிய மதங்களின் மூலம் இஸ்லாம் மட்டுமே, மனிதர்களால் சிலபல மாறுதலுக்கு உள்ளாகி இன்று இஸ்லாத்திற்கு எதிரான கொள்கைபோல் காட்சியளிக்கிறது, குரானில் உள்ள பல விஷயங்களில் மற்ற வேத நூல்கள் ஒத்துப்போகிறது, இந்த கட்டுரையில் மிக சுருக்கமாக மறுமை, சொர்க்கம் மற்றும் நரகம் பற்றி பார்ப்போம்

மறுமை


5. அக்னிஎங்கள் காணிக்கையுடன் உம்மிடம் பிரவேசித்தவரை பிதாவிடம் அனுப்புஅவர் புதிய வாழ்க்கையை ஆரம்பித்து சந்ததியை பெருக்கட்டும்.

சொர்க்கம்



17. சொர்க்கத்தின் இறைவனே நீ எங்களை வழி நடத்துவாயாக, மேலும் எங்கள் மனைவிகளையும் பிள்ளைகளையும் வழிநடத்துவாயாக

26. பரிசுத்தமான அழகுடையவர்கள் நம்மை சுவர்க்கத்தில் வழி நடத்துவார்கள்

42. சுவர்க்கம் மூன்றுபகுதிகளாக உள்ளது, அது ஒன்று மற்றொன்றுபோல் தோற்றமளித்து எங்களை குழப்புகிறது.


 2. நேர்மையாக நடந்துகொண்டவர்கள், ஏழைகளுக்கு தருமம் செய்தவர்கள், இறைவனின் வழியில் தியாகம் செய்தவர்கள் சொர்க்கத்திற்கு செல்லுங்கள்.

4. யார் இறைவனுக்காக அறுத்து பலியிடுகிறார்களோ அவர்களுக்கு அமிர்தமும் உணவும் நிறைந்த சுவர்க்கம் கிடைக்கும்.

10. இறைவனுக்காக அறுத்து பலியிடுபவர்கள் இறைவனோடு சொர்க்கத்தில் இருப்பார்கள், அங்கு உணவருந்தி மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.


இஸ்லாத்தின்படி சொர்க்கத்தில் ஆறுகள் உண்டு என்று சொல்லும்போது நம்மைப்பார்த்து பரிகாசித்தவர்களுக்கு அவர்களின் வேதங்களிலும் அப்படியே உள்ளது என்று தெரிந்தால் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வார்களா?

என்னென்ன சொர்க்கத்தில் கிடைக்கும்.


குரானில் சொல்வதுபோல் பாலாறு தேனாறு ஹூருலீன்கள் என்று எல்லாமே கிடைக்கும் என்று வேதங்கள் சொல்கிறது


 6. தேனை கரையாக (தடுப்பாக) கொண்ட வெண்ணை ஏரிகள் இருக்கும், அங்கே மதுவும், பாலும், தயிரும் மற்றும் சுவை மிகுந்த நீரும் ஓடிக்கொண்டு இருக்கும்.

7. எங்கும் இனிமையாக இருக்கும் இந்த சொர்க்கத்தில் உள்ள மலர்கள் நீரோடைகளை தாண்டி உன்னை நெருங்கும் அல்லது வரவேற்கும்.


5. அக்னி, சொர்க்கவாசிகளை விருந்துக்கு அழை, அவர்களுக்கு தேவையானதை சாப்பிட கொடு, அவர்கள் பெண்களோடு சந்தோஷமாக இருக்கட்டும், நல்லவிதமாக உறங்கட்டும். மேலும் அந்த பெண்கள் தூய்மையானவர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.


இங்கே பெண்கள் கிடைப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளதே தவிர அவர்கள் ஹூருலீன்களா என்று தெரியவில்லை, எப்படி குரானும் வேதமும் பல விஷயங்களில் ஒத்துப்போகிறது, அதில் இதுவும் ஒன்று.


18. தேவனே உன்னை வணங்கியவர்களுக்கு சொர்க்கத்தை தா, அவர்கள் அதில் மகிழ்ச்சியோடு இருக்கட்டும்.


நரகம் பற்றி தனி பதிவில் பார்ப்போம்

இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக சாகும்வரை உண்ணாவிரதம் அறிவித்த காந்தி - காந்தி இன்றைக்கும் தேவைப்படுகிறார்…

1948ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி அதிகாலை 3.30 மணி. தனது உதவியாளரை அழைத்த காந்திஜி ‘எல்லா முக்கிய கடிதங்களையும் இன்றே கொடுத்து விடுங்கள். இன்றே அவை எல்லாவற்றையும் நான் முடித்து விட வேண்டும்’ என்றார். அவரது பணிகளோடு அவரது வாழ்க்கையும் அன்று முடிவுக்கு வந்தது.
நல்லிணக்கவாதி

சாதி, மத வேறுபாடுகளைக் களைந்து அனைவரும் இணக்கத்துடன் வாழவேண்டும் என விரும்பிய மகத்தான மனிதர் காந்திஜி. சுதந்திரத்துக்கு இரண்டு நாட்களே இருந்தன. 1947 ஆகஸ்ட் 13 அன்று மாலை நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் அவர் பேசும்போது ‘இந்தியா -& பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு மக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்கக்கூடிய பொறுப்பு நமக்கு உண்டு. எனவே, ஆகஸ்ட் 15ஆம் நாள் முழுக்க உண்ணாநோன்பிருந்து இந்தியாவும் பாகிஸ்தானும் நலம்பெறுவதற்காக பிரார்த்தனை செய்வோம்’ என்று கேட்டுக்கொண்டார்.
ஆகஸ்ட் 15 அன்று தேசமே உற்சாகத்திலிருந்தது. ஆனால் காந்தி கல்கத்தாவில் கலவரத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பெலியகட்டா பகுதியில் இருந்தார். அவரது அமைதிச்செய்தி அங்கே பரவி தெருக்கள் தோறும் இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து மதநல்லிணக்க ஊர்வலங்களை நடத்தினர்.
அரசியல் சுதந்திரம் கிடைத்தது. ஆனால் அது காந்தி விரும்பிய சுதந்திரமாக இல்லை. 1.9.1947 அன்று பத்திரிகையாளர்களை அழைத்தார் காந்தி. கல்கத்தாவின் பல பகுதிகளில் கலவரம் ஓய்ந்தபாடில்லை என்று மிகுந்த வேதனையோடு குறிப்பிட்ட அவர், உண்ணாவிரதத்தைத் தொடங்க இருப்பதை அறிவித்தார். கல்கத்தாவில் அமைதி திரும்பினால் மட்டுமே உண்ணாவிரதத்தை முடிப்பேன் என்றும் திட்டவட்டமாக அறிவித்தார். ராஜாஜி காந்தியைச் சந்தித்தார். “சிறிது காலம் பொறுக்கக் கூடாதா?” கேள்வி எழுப்பினார் ராஜாஜி. ‘முடியாது. காலங்கடந்துவிடும். முஸ்லிம்களை அபாயகரமான நிலையில் விட்டுவிடக் கூடாது” என்று உஷ்ணமாகச் சொன்னார் காந்தி.
மீண்டும் 1948 ஜனவரி 12ஆம் தேதியன்று இந்து, இஸ்லாம் மக்களிடையே ஒற்றுமையை கொண்டு வருவதற்காக சாகும்வரை உண்ணாவிரதத்தை அறிவித்தார் காந்தி. மறுநாளே அவர் உண்ணாவிரதத்தை தொடங்கினார். காந்தி தன் முடிவை மாற்றிக்கொள்ளவேண்டும் என சமூக நல்லிணக்கத்தை விரும்பிய ஒட்டுமொத்த மக்களும் வேண்டுகோள் விடுத்தனர். “அனைத்து மதங்களுக்கு இடையேயும் நல்லிணக்கம் இருப்பதாக நான் உறுதியுடன் நம்பினால் மட்டுமே எனது உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவருவேன்” என்றார்.
“இந்து, இஸ்லாம் மற்றும் சீக்கிய மதங்களுக்கு இடையே ஒரு காலத்தில் சகோதரத்துவம் இருந்தது. அதை இனி காணமுடியாது என்பதை அறியும்போது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது” என்றார் காந்தி. (ஸ்டான்லே வால்பெர்ட் எழுதி ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட “காந்தியின் பேரார்வம்” என்ற நூலில்)
காந்தியின் உண்ணாவிரதம், காங்கிரஸ் ஆட்சியாளர்களையே அதிரவைத்தது. “நாட்டில் வகுப்பு கலவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நான் தகுதியற்றவன் என பாப்பு (காந்தி) கருதினால் நான் எனது பதவியை ராஜினாமா செய்யத் தயார்” என்றார் சர்தார் வல்லபாய் படேல். வகுப்பு கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்து நல்லிணக்கத்தை உறுதி செய்வோம் என நாடு முழுவதிலும் இருந்து நூற்றுக்கும் அதிகமான தலைவர்கள் மீண்டும் மீண்டும் காந்தியிடம் உறுதியளித்தனர். இதையடுத்து ஜனவரி 18 ஆம் தேதி தனது உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.
ஜனவரி 20-ஆம் தேதி காந்தி பிர்லா ஹவுஸுக்கு வந்தடைந்தார். ஒரு சிறிய மேடை காந்திக்காக தயாராக இருந்தது. அந்த மேடையில் இருந்து பேசத் துவங்கினார், மைக் வேலை செய்யவில்லை. இருப்பினும் அவர் தனது பேச்சை தொடர்ந்தார். “இஸ்லாமியர்களுக்கு யாரெல்லாம் எதிரியோ அவர்கள் எல்லோரும் நாட்டுக்கும் எதிரிகளே” என்றார். உடனடியாக மேடைக்கு அருகே குண்டு வெடித்தது.
‘குண்டுவெடிப்பு நிகழ்ந்தவுடன் பெருங்குழப்பம் ஏற்பட்டது. மக்கள் சிதறி ஓடத் துவங்கினர். மகாத்மா காந்தி மட்டும் தனது இடத்தில் அமைதியாக அமர்ந்திருந்தார். கை குண்டை வீசிய மதன்லால் பஹாவேவை காவல்துறையினர் கைது செய்தனர். இருப்பினும் அவரது கூட்டாளி தப்பிவிட்டான்’ என, ‘லெட்ஸ் கில் காந்தி’ (Let’s kill Gandhi) எனும் நூலில் துஷார் காந்தி பதிவு செய்திருக்கிறார்.
கொலை முயற்சிகளும் கொலையும்

இதற்கு முன்னரே காந்தியைக் கொலை செய்யும் முயற்சிகள் நடந்தன. 1934ஆம் ஆண்டு ஹரிஜன் யாத்திரைக்காக காந்தி புனே வந்தார். காந்தியும் அவரது நண்பர்களும் இரண்டு கார்களில் பயணம் செய்தனர். காந்தியின் வாகனம் நகராட்சி மன்றத்துக்கு தாமதமாக வந்தது. காந்தி முதல் காரில் வந்ததாக நினைத்துக் கொண்டு அந்த வாகனம் மீது கையெறி குண்டை வீசினார்கள். அந்த குண்டு காருக்கு அருகே வெடித்தது. அந்த தாக்குதலில் யாரும் காயமடையவில்லை. இது முதல் முயற்சி.
1944 ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாத நிலையில் ஓய்வுக்காக அவர் பஞ்ச்கனிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே தில்குஷ் என்ற பங்களாவில் தங்கியிருந்தார். ஒவ்வொரு மாலையும் அவர் உள்ளூர் கிராமவாசிகளுடன் பிரார்த்தனையில் ஈடுபட்டுவந்தார். ஒருமுறை பிரார்த்தனையில் இருந்தபோது இளைஞன் ஒருவன் பட்டா கத்தியுடன் காந்தியை நெருங்கினான். காந்தியின் பாதுகாவலர் பில்லாரே குருஜி சரியான நேரத்தில் அவனது கையில் இருந்து கத்தியைப் பறித்தார். காந்தி அந்த இளைஞனை விட்டுவிடச் சொன்னார். இதனால் அவன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த இளைஞன் நாதுராம் கோட்சேதான் எனக் கூறியுள்ளார் பில்லாரே குருஜி. இது இரண்டாவது முயற்சி.
காந்தியை கொல்ல மூன்றாவது முயற்சி சேவாகிராமில் நடந்தது. 1944 ஆம் ஆண்டு வர்தா நிலையத்தில் காந்தி ரயிலில் ஏறினார். அந்த சமயத்தில் ஒரு சிறுவன் காந்தியை தாக்கினான். காவல்துறை உடனடியாக அவனை பிடித்தது. முதல்கட்ட விசாரணைக்கு பிறகு அந்த சிறுவன் விடுவிக்கப்பட்டான். ‘இந்த நிகழ்வு எங்கும் பதிவு செய்யப்படவில்லை” என்கிறார் காந்தியின் வாழ்கை வரலாற்றை எழுதிய பியாரிலால்.
நான்காவது முயற்சி 1945 ஆம் ஆண்டு நடந்தது. மும்பையில் இருந்து புனேவுக்கு ரயிலில் காந்தி வந்துகொண்டிருந்தார். மஹாராஷ்டிராவில் ரயில் கசராவை அடைந்தபோது கற்கள் மற்றும் மரக்கட்டைகள் ரயில் பாதையில் குவிக்கப்பட்டிருந்தன. ரயில் ஓட்டுநர் இந்த கற்களை பார்த்ததும் உடனடியாக தன்னால் முடிந்த வலு கொண்டு பிரேக் போட்டார். இரயில் எஞ்சின்கள் கற்கள் மீது மோதியது. இருப்பினும் பெரும் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டன. காந்தி புனேவை சென்றடைந்ததும் “என்னை யார் கொல்வதற்கு விரும்புகிறீர்களோ தாராளமாக செய்யுங்கள். ஆனால் என்னுடன் வரும் மக்களுக்கு எந்த தீங்கும் இழைக்காதீர்கள்” என்றார்.
1948 ஜனவரி இருபத்தைந்தாம் தேதி காந்தி ஒரு கடிதத்தில் ‘யாராவது ஒருவன் என்னைக் கொல்வானானால் அந்தக் கொலையாளியின் மீது எனக்கு எந்தவிதமான கோபமும் ஏற்படக்கூடாது. நான் ராமநாமத்தை உச்சரித்தபடியே மரணமடையவேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார். அடுத்த ஐந்து நாட்களில் காந்தியை அவரது பிரார்த்தனைக்கூட்டத்தில் சுட்டுக்கொன்றான் கோட்சே. ‘ஹே ராம்’ எனச் சொல்லாமலேயே சரிந்தார் காந்திஜி.
சதி

ஜனவரி 30, 1948 அன்று நாதுராம் கோட்சே காந்தியைச் சுட்டவுடன் தகவல் அறிந்து முதலில் படேல் வந்தார்; சற்று நேரத்திலேயே நேரு வந்தார். கவர்னர் ஜெனரல் மவுன்ட்பேட்டன் வந்தபோது கூட்டத்திலிருந்த ஒருவன் “காந்தியை ஒரு முஸ்லிம் கொன்றுவிட்டான்” என்று கத்தினான். அதிர்ந்து திரும்பிய மவுன்ட்பேட்டன் பதிலுக்கு “நீ என்ன முட்டாளா? காந்திஜியைக் கொன்றவன் ஒரு இந்து!” என உரக்கச் சொன்னார். இந்திய வரலாற்றில் காந்தியின் மரணம் பல உயிர்களைப் பலிவாங்கும் ரத்தக்களரியாக உருமாறாமல் தடுக்கப்பட்டது.
‘காந்தி படுகொலைக்கு எந்தவொரு தனி மனிதரும் பொறுப்பு அல்ல, ஆனால் அதற்கு பின்னால் ஒரு பெரிய சதியும், ஒரு அமைப்பும் உள்ளது’ என்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் சோசலிஸ்ட் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோஹியா மற்றும் கம்லாதேவி சட்டோபாத்யா ஆகியோர் குறிப்பிட்டதை கபூர் ஆணையம் சுட்டிக்காட்டியது.
காந்தியைக் கொல்வது என்பது நாதுராம் கோட்சே என்ற தனிமனிதனின் திட்டமல்ல. அது ஒரு கூட்டத்தின் பெருந்திட்டத்தின் ஒரு பகுதி. மதக் கலவரங்களைத் தூண்டிவிடுவதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது அதன் செயல்திட்டம். மதக் கலவரங்கள் மூலம் மக்கள் மனத்தில் மதவெறியைத் தூண்டி, முஸ்லிம்களை இந்தியாவை விட்டே துரத்தும் திட்டத்தையும் கூடுமானவரை காந்தி முறியடித்தார். ஒவ்வொரு சந்திப்புகளிலும் “மத மோதல்கள் வேண்டாம், மனிதனை மனிதன் வேட்டையாடக் கூடாது” என்று மன்றாடினார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகவே அமையும் என்பதில் காந்தி மிகத் தெளிவாக இருந்தார். இவைதான் அவருடைய கொலைக்கு வழிகோலியது.
கோட்சேயும் ஆர்.எஸ்.எஸ்.சும்

நாதுராம் என்பதற்கு மராட்டியில் மூக்குத்தி என்பது பொருள். கோட்சே சிறுவயதில் மூக்குத்தி அணிந்திருந்தார். அதே பெயரால் அழைக்கப்பட்டார். அவரது இயற்பெயர் ராமச்சந்திரா. 2016 செப்டம்பர் எட்டாம் தேதியன்று எகனாமிக் டைம்ஸிற்கு பேட்டியளித்த கோட்ஸேவின் குடும்ப உறுப்பினர்கள், ‘கோட்ஸே ஆர்.எஸ்.எஸ்.ஸை விட்டு ஒருபோதும் விலகவுமில்லை அல்லது அவர் அங்கிருந்து வெளியேற்றப்படவும் இல்லை’ என்று கூறியிருந்தார்கள்.
கோட்சே நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் காந்தியை கொலை செய்ததை முற்றாக நியாயப்படுத்தினான். காந்தியின் தொடர்ந்த நிலையான முஸ்லிம்களுக்கு ஆதரவான போக்கே தன்னை கொலை செய்ய தூண்டியதாக கூறிய அவன், கடைசிவரை முஸ்லிம்களுக்கு ஆதரவாக அவர் மேற்கொண்ட உண்ணாவிரதமே உடனடியாக அவரைக் கொல்ல வேண்டும் என்ற முடிவுக்கு தன்னைத் துரத்தியதாகக் கூறியிருக்கிறான்.
‘காந்தி கொலைசெய்யப்பட்டது ஏன்? ’ என்ற புத்தகத்தை நாதுராம் கோட்ஸேவின் சகோதரர் கோபால் கோட்ஸே எழுதியுள்ளார். அதில் நாதுராம் கூறியதாக அவர் எழுதியிருப்பது, ‘தேசபக்தி பாவம் என்றால், நான் பாவம் செய்ததாக ஒத்துக்கொள்கிறேன். அது பாராட்டுக்கு உரியது என்றால், அந்த புகழுக்கு உரியவன் நான் என்று நம்புகிறேன். மனிதர்களுக்கான நீதிமன்றம் இருந்தால், நான் செய்தது குற்றமாக கருதப்படாது. நமது நாட்டிற்கும், மதத்திற்கும் நன்மை செய்யும் செயலையே நான் செய்தேன். இந்துக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய, பெருமளவிலான இந்துக்கள் கொல்லப்படுவதற்கு காரணமான கொள்கைக்கு சொந்தக்காரரை நான் துப்பாக்கியால் சுட்டேன்.’
நாதுராம் கோட்சே மற்றும் விநாயக் தாமோதர் சாவர்க்கர் ஆகியோரின் வழிவந்த சத்யாகி கோட்ஸே, எகனாமிக் டைம்ஸிற்கு அளித்த பேட்டியில் ‘சங்லியில் நாதுராம் இருந்தபோது, 1932ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்.ஸில் சேர்ந்தார். தனது வாழ்நாள் முழுவதும், அவர் சங்கத்தின் அறிவார்ந்த செயல்பாட்டாளராக இருந்தார். அவர் அமைப்பில் இருந்து வெளியேறவோ, வெளியேற்றப்படவோ இல்லை’ என்று கூறினார்.
1994 ஜனவரி 28ஆம் தேதி, பிரண்ட்லைன் பத்திரிகைக்கு பேட்டியளித்த நாதுராம் கோட்ஸேவின் சகோதரர் கோபால் கோட்ஸே, “சகோதரர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்.ஸில் இருந்தோம். நாதுராம், தத்தாத்ரேயா, நான், கோவிந்த் அனைவரும் வளர்ந்தது எங்கள் வீட்டில் அல்ல, ஆர்.எஸ்.எஸ்.ஸில்தான். எங்கள் குடும்பமே ஆர்.எஸ்.எஸ். தான். ஆர்.எஸ்.எஸ்.ஸில் அறிவார்ந்த ஆர்வலராக நாதுராம் இருந்தார். ஆர்.எஸ்.எஸ்.ஸை விட்டு வெளியேறுவதாக தனது அறிக்கையில் நாதுராம் கூறியிருந்தார். ஏனெனில் காந்தியின் படுகொலைக்குப் பிறகு, கோல்வால்கர் மற்றும் ஆர்.எஸ்.எஸ்.க்கு சிக்கல்கள் ஏற்பட்டதால், அவர்களை காப்பாற்றுவதற்காக நாதுராம் இப்படி அறிவித்தார். ஆனால், ஆர்.எஸ்.எஸ். ஒருபோதும் அவரை வெளியேற்றவில்லை” என்று கூறியிருந்தார். இந்து மகாசபையின் தற்போதைய பொதுச் செயலாளரான முன்னகுமார் ஷர்மா, பிபிசியிடம் பேசுகையில் “கோட்ஸே எங்களை சார்ந்தவர், அதோடு அவர் ஆர்.எஸ்.எஸ்.ஸை சேர்ந்தவர் என்பதையும் ஒப்புக்கொள்கிறோம்” என்கிறார்.
ஆர்.எஸ்.எஸ்.ன் பங்கு

காந்தியின் இறுதிக் காலத்தில் அவரது தனிச் செயலாளராக பணிபுரிந்த ப்யாரேலால் நையர், தான் எழுதிய ‘மகாத்மா காந்தி: கடைசி கட்டம்’ என்ற புத்தகத்தில் ‘வெள்ளிக்கிழமையன்று நல்ல செய்தி வரும், எனவே ரேடியோவை தொடர்ந்து கேட்கவும் என்று ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் சில இடங்களில் ஏற்கனவே கூறியிருந்தார்கள். அதுமட்டுமல்ல, காந்தி கொல்லப்பட்ட செய்தி வெளியானதும், ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் பல இடங்களில் இனிப்புகளை விநியோகித்து கொண்டாடினார்கள்’ என்கிறார்.
“துரோகிகள் தேசியத் தலைவர்களாக முடிசூட்டப்படுவதும், தேச பக்தர்கள் இழிவுபடுத்தப்படுவதும் விசித்திரமானது, மிக மிக விசித்திரமானது” என 1939இல் கோல்வால்கர் சொன்னார். இந்து & முஸ்லிம் ஒற்றுமை மிகவும் இன்றியமையாதது என்பதில் அழுத்தமான நம்பிக்கை கொண்டிருந்த காந்தியைத்தான் இவ்வாறு ஜாடை பேசினார் அவர்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பத்திரிகையான ‘ஆர்கனைசர்’ 1970 ஜனவரி 11ஆம் தேதி எழுதிய தலையங்கத்தில், ‘நேரு பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதும், காந்தியின் உண்ணாவிரதமும் மக்களிடையே பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது. அத்தகைய சூழ்நிலையில், மக்களின் சீற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் நாதுராம் கோட்ஸே செயல்பட்டார். காந்தியின் படுகொலை என்பது பொது மக்களின் வெறுப்பின் வெளிப்பாடு’ என்று கூறப்பட்டிருந்தது.
கபூர் ஆணையத்தின் விசாரணை அறிக்கையில், அல்வர் நகரில் இருந்த ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தின் நடவடிக்கைகளின் விவரம் பற்றியும் விவரிக்கப்பட்டிருந்தது. வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் சாமியார் வேடத்தில் அல்வர் இந்து மகாசபையின் செயலாளர் கிரிதார் சித்தாவுடன் தங்கியிருந்தது பற்றிய குறிப்புகள் அதில் உள்ளது. கபூர் ஆணையத்திடம் அந்த வெளிநாட்டு நபர் கூறிய தகவல்களின்படி, ‘காந்தி கொலை செய்யப்பட்ட தகவல் கொண்ட துண்டுப்பிரசுரங்கள் மாலை மூன்று மணிக்கே அல்வரில் அச்சடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் கொலை நடந்தது மாலை 5.00 மணி 17 நிமிடத்தில்தான். (துஷார் காந்தி, பக்க எண்.770)
1948 செப்டம்பர் 11ஆம் தேதியன்று கோல்வால்கருக்கு பதிலளித்த சர்தார் படேல், ‘ஆர்.எஸ்.எஸ். இந்து சமுதாயத்திற்கு சேவை புரிந்துள்ளது. ஆனால் அதன் பழிவாங்கும் உணர்வு முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தத் தூண்டுகிறது. உங்களுடைய ஒவ்வொரு உரையிலும் இனவாத நச்சு நிறைந்துள்ளது. இதற்கான விலையாக நம் நாடு காந்தியை தியாகம் செய்ய வேண்டியிருந்தது. இதனால்தான் ஆர்.எஸ்.எஸ்.ஸை தடை செய்யும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது’ என்றார்.
“அனைத்து சாதியை சேர்ந்தவர்களும் அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் காந்திக்கு அஞ்சலி செலுத்த ஒன்றாக வந்தார்கள். தனது இறப்புக்கு பின்னரும் மக்களை ஒன்றிணைக்கும் பணியை அவர் செய்திருந்தார்” என்கிறார் துஷார் காந்தி. இந்த நாட்டின் மகத்தான விழுமியமான மதசார்பின்மையின் உன்னதத்தை உணர்த்த வேண்டிய தருணமிது. காந்தி இன்றைக்கும் தேவைப்படுகிறார்.
-ப. திருமலை

Saturday, January 19, 2019

7. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை உயிரோடு எரித்து கொன்ற துர்கா வாஹினியினர் - ஆந்திரா வடோலி கலவரம் 2008


வடோலி கலவரம்:

11  ந்தேதி அக்டோபர் 2008  ஆம் ஆண்டு இன்றைய தெலுங்கானாவில் உள்ள வடோலி என்ற ஊரில் ஹிந்து வாஹினி என்ற அமைப்பினரால் நடத்தப்பட்ட கலவரம் தான் வடோலி கலவரம்.

காரணம்:

11  அக்டோபர் 2008 ன் முந்தைய நாளான வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையில் போது, தண்ணீரின் கரைக்க துர்கா தேவியின் சிலையை பள்ளிவாசல் வழியாக கொண்டுசென்று பிரச்னையை ஏற்படுத்தினார்.

(நாம் பலதடவை சொன்னதுபோல், ஹிந்து சாமிகளின் சிலைகள் தலித்துகள் என்ற ஹிந்துவின் தெருவழியாக செல்லாமல் சம்பந்தம் இல்லாமல் முஸ்லிம்கள் தெரு வழியாகத்தான் செல்லும், காரணம் கலவரம் ஏற்படுத்தி ஹிந்து முஸ்லீம் பிரிவினையை ஏற்படுத்தி அரசியல் லாபம் பெற)

அதேபோன்ற நிகழ்வுதான் இதுவும், இதில் சாதாரண ஹிந்துக்கள் ஈடுபடவில்லை, ஹிந்து வாஹினி என்ற பயங்கவாதக்கும்பல் தான் இதில் ஈடுபட்டுள்ளது.

உயிர்சேதம்:

இந்த சம்பவத்தை காரணம் காட்டி ஒரே குடும்பத்தை சேர்ந்த மஹபூப் கான் (55), சபியா கான் (50), ரிஸ்வானா பேகம்  (22), அரசும் கான் (6), நுமான் கான் (3) மற்றும் ஸபத் கான் (2) ஆகிய 6  முஸ்லிம்களை விடியற்காலையில் 2  மணியளவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் வேளையில் உயிரோடு எரித்து கொன்றது இந்த பயங்கரவாத கும்பல்.

இந்த கலவரத்தில் நீட்சியாக பைன்சா என்ற இடத்தில் மூவர் அடித்தே கொல்லப்பட்டனர், 25  க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

ஏப்ரல் 2018 ல் கைதுசெய்யப்பட்ட சரியான ஆதாரம் சிபிஐ ஆல் சமர்பிக்கமுடியாத காரணத்தால் துர்கா வாஹினியை சேர்ந்த 9  பேரும் விடுதலை  செய்யப்பட்டனர்.  உண்மையான குற்றவாளியை இதுவரை கண்டுபிடிக்கவில்லை, எரிந்துபோன குடும்பத்திற்க்கான நியாயமும் கிடைக்கவில்லை.

ஆதாரங்கள்:

https://www.indiatoday.in/latest-headlines/story/4-killed-in-communal-riots-in-andhra-town-31377-2008-10-10

https://www.indiatoday.in/latest-headlines/story/curfew-in-andhra-town-after-communal-violence-31389-2008-10-11

https://en.wikipedia.org/wiki/Vatoli_communal_violence_2008

https://timesofindia.indiatimes.com/india/6-burnt-alive-in-riot-hit-Andhra-area/articleshow/3586738.cms

https://www.siasat.com/news/9-hindu-vahini-accused-freed-2008-bhainsa-riot-case-where-muslim-family-burnt-alive-1343374/

Friday, January 18, 2019

9. தலாக் தலாக் தலாக்


இறைவனுக்கு பிடிக்காத பல செயல்களில் முக்கியமானது தலாக் என்ற மணமுறிவு. பல்வேறு கட்டங்களில் கணவன் மனைவிக்கு இடையில் மனக்கசப்பு ஏற்பட்டாலும் அதை பேசி சரி செய்து வாழவேண்டியது கணவன் மனைவி இருவருக்கும் உண்டான கடமை.

கணவனை பார்த்து இஸ்லாம் சொல்கிறது, நீ உன் மனைவியிடம் அதிருப்தியடைய சில விஷயங்கள் இருந்தால் சந்தோசப்பட சில விஷயங்களை இருக்கும், அந்த சந்தோசமான விஷயத்தை வைத்து அதிருப்தியான விஷயத்தை விட்டுவிடு என்று.

இனிமேல் சேர்ந்து வாழமுடியாது என்ற நிலை வரும் போது பிரிந்துவிடவே இஸ்லாம் சொல்கிறது, அதற்கும் வழி முறைகளை வகுத்துள்ளது. மற்ற சமுதாயம் போல் அல்லாமல் இஸ்லாம் கணவனுக்கும் மனைவிக்கும் விவாகரத்து செய்யும் உரிமையை கொடுத்துள்ளது.

கணவன் விவாகரத்து செய்தால் அதற்க்கு தலாக் என்றும், அதே மனைவி செய்தால் குலா என்றும் சொல்லப்படுகிறது.

தலாக்

2:228 தலாக் விடப்பட்டப் பெண்கள் மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையாகும் வரை (தம் கணவருக்காக) காத்திருப்பார்கள். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் அவர்கள் நம்பிக்கைக் கொண்டவர்களாக இருந்தால் தங்கள் கர்பப்பைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை (குழந்தை உருவாகி இருந்தால்) மறைப்பது ஆகுமானதல்ல. அவர்களின் கணவர்கள் (இத்தாவிலிருக்கும் தம் மனைவியோடு சேர்ந்துக் கொள்ள) நல்லிணக்கத்தை நாடினால் (அந்த கால கெடுவுக்குள்) அழைத்துக் கொள்ளும் உரிமை அவர்களுக்கு உண்டு.

2:229 (இத்தா கால கெடுவுக்குள் சேர்ந்துக் கொள்ளும் வாய்ப்புள்ள) இத்தகைய தலாக் இரண்டுத் தடவைகள்தான். இந்த வாய்ப்புகளில் அவளுடன் அழகிய முறையில் சேர்ந்து வாழலாம் அல்லது அழகிய முறையில் அவளை விட்டு விடலாம்.

2:230 பின்னர்(மூன்றாவதாகவும்)தன் மனைவியை அவன் தலாக் சொல்லிவிட்டால் அதன் பிறகு அவனல்லாத வேறொரு கணவனை அவள் திருமணம் முடிக்காத வரை முதல் கணவனுக்கு அவள் அனுமதிக்கப் பட்டவளாக ஆகமாட்டாள். (இப்போது இரண்டாம்) கணவனும் அவளை தலாக் சொல்லி விட்டால் (அதன் பிறகு முதல் கணவனும் சேர்ந்து வாழ ஆசைப்பட்டால்) அவ்விருவரும் இறைவனின் வரம்பை நிலை நிறுத்த முடியும் என்று கருதினால் (திருமணத்தின் மூலம்) மீண்டும் இணைந்துக் கொள்வது அவ்விருவர் மீது குற்றமில்லை. இவைகள் அல்லாஹ்வின் வரம்புகளாகும். அறிவுள்ள சமூகத்தாருக்கு இறைவன் இவற்றை தெளிவு படுத்துகிறான்.


65:4 ”கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய (இத்தாவின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையிலாகும்.


மூன்று தடவை தலாக் சொல்லலாம், ஒரு தடவையில் இருந்து இன்னொரு தடவைக்கு மூன்று மாதம் கெடு உள்ளது, மொத்தம் மூன்று தாக்கும் சேர்த்து 9  மாதம், இதில் 9  மாதத்திற்கு  முன் ஒருவன் மீட்டுக்கொண்டு மனைவியுடன் சேரலாம். 9 மாதம் முடிந்துவிட்டால் அதவாது மூணாவது தடவை தலாக் சொல்லி 3 மாதம் நிறைவடைந்துவிட்டால் பிரிந்துதான் ஆகவேண்டும்.

முத்தலாக்

இன்று இஸ்லாத்தின் எதிரிகள் இந்த வார்த்தையை பயன்படுத்து இஸ்லாத்தை அழித்துவிடலாம் என்று (பூனை கண்ணைமூடிக்கொண்டால் பூலோகம் இருண்டுவிடும் கதையாக) நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

மூன்று தவணை வழக்கப்பட்டதே முறித்துக்கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான், அதை அறியாத மூடர்கள் இஸ்லாமிய பெண்ணுக்கு நன்மை செய்கிறோம் என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்.

தலாக் சொல்லும்முன்

ஒரு கணவன் அவன் மனைவியை தலாக் சொல்லும்முன் அறிவுரை வழங்கவேண்டும், பிறகு அவர்கள் வீட்டாரை வைத்து பேசிப்பார்க்கவேண்டும், படுக்கையில் இருந்து விலக்கவேண்டும் போன்ற செயல்களுக்கு பிறகே தலாக் என்று சொல்லவேண்டும்.

மாறாக சப்பாத்தி கருகுவதுக்கு எல்லாம் தலாக் சொல்வது கூடாது, உண்மையில் கணவன் தான் மனைவிக்கு உணவு தரவேண்டும், மனைவி சமைக்கமுடியாது என்றால் கணவன் அவளை தண்டிக்கமுடியாது, இன்று பல மனைவிகள் புண்ணியத்துக்காக சமைத்து கொடுக்கிறார்கள். ஓசிக்கு கிடைத்த மாட்டை பல்லை பிடித்து பதம் பார்க்கக்கூடாது.

மூன்று தடவை சொன்னாலும் ஒரே தடவை சொன்னது போல் தான்.

நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் அபூபக்கர் (ரலி) அவர்கள் காலத்திலும் உமர்(ரலி) அவர்களின் ஆரம்ப இரண்டு கால ஆட்சியிலும் முத்தலாக் என்பது ஒரு தலாக்காகவே கணிக்கப்பட்டு வந்தது. (முஸ்லிம், அஹ்மத்)

ருகானா என்பவர் தம்மனைவியை ஒரு இடத்தில் வைத்து மூன்று தலாக் சொல்லி விட்டார் பிறகு வருந்தினார் இதை அறிந்த நபி-ஸல்- அவர்கள் உன் மனைவியை திருப்பி அழைத்துக் கொள் என்றார்கள். அதற்கு அவர் நான் என் மனைவியை மூன்று தலாக் சொல்லி விட்டேனே என்றார். அதை நான் அறிவேன் நீ உன் மனைவியை திருப்பி அழைத்துக் கொள் என்றார்கள். (அஹ்மத், அபூதாவூத், ஹாகீம்)

ஒரு மனிதர் தம் மனைவியை ஒரே நேரத்தில் மூன்று தலாக் சொன்ன செய்தியைக் கேள்விப்பட்ட நபி(ஸல்) அவர்கள் பெரும் கோபம் அடைந்து, நான் உயிரோடு உங்கள் மத்தியில் இருக்கும் போதே அவர் அல்லாஹ்வின் வேதத்தோடு விளையாடுகிறாரா.. என்றுக் கேட்டார்கள்.(நஸயீ).


எதெற்க்கெல்லாம் தலாக் கூடாது

சமீபத்தில் பத்திரிகை செய்திகளில் படித்ததுபோல் (இன்றைய பத்திரிகை செய்திகள் எப்படிப்பட்டவை என்று நமக்கு எல்லோருக்கும் தெரியும்) தோசை கருகிவிட்டது, சப்பாத்தி கருகிவிட்டது, சமமாக நடந்து வந்ததால், வரதட்சணை வேண்டி என்று இஸ்லாம் அனுமதிக்காத காரணங்களுக்காக எல்லாம் தலாக் கூடாது.

குலா

கணவன், மனைவியருக்கிடையே ஏற்பட்டுவிட்ட பிணக்கைப் போக்கி சமாதானம் செய்து வைக்க முற்படும் இரு வீட்டார் சார்பான நடுவர்கள் சமாதானம் செய்து வைக்க முயலும் போது,

கணவன் சமாதானத்துக்கு முன்வந்த போதும் மனைவி அதை ஏற்காத நிலையில் கணவன்-மனைவி இருவரும் அல்லாஹ்வின் வரம்புக்குள் நிலைத்திருக்க மாட்டார்கள் என்று நடுவர்களும் அஞ்சும் போது,

மனைவியானவர் கணவனிடமிருந்து பெற்றதை திரும்பக் கணவனிடமே கொடுக்கச் செய்து பிரித்து விடுவதில் தவறில்லை

என்பதை குர்ஆன் 2:229 மூலம் அறிய முடிகிறது.

இப்படிக் கணவனிடமிருந்து பெற்றதை மனைவி திரும்பக் கணவனிடமே கொடுத்துத் திருமண ஒப்பந்தத்தை தானாகவே முறித்துக் கொள்ள முன் வருவது தான் குலா என்பதாகும்.

அல்குர்உ, குல்உ, குலா என்று கூறப்படும் சொல்லுக்கு அகராதியில் கழற்றிவிடுதல் என்பது பொருளாகும். மனைவியிடமிருந்து ஈட்டுத் தொகை பெற்றுக் கொண்டு அவளிடமிருந்து பிரிந்து விடுவதற்குக் கணவன் சம்மதம் தெரிவிப்பதையே வழக்கத்தில் “”குலா” என்பர்.

கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பாத மனைவி கணவனிடமிருந்து பெற்ற மஹர் தொகையை திரும்பக் கொடுத்தோ அல்லது மஹராக கொடுக்க ஒப்புக் கொண்டதை விட்டுக் கொடுத்தோ, மேலும் புதிதாக ஒரு தொகையையோ, பொருளையோ கொடுக்க சம்மதித்து பிரிவினையைக் கோருவதே “”குலா” என்பதாகும்.


ஆக மேற்கண்டவற்றில் இருந்து இஸ்லாம் விவாகரத்துக்கு அறிவான அழகான சட்டங்களையே வகுத்துள்ளது. இன்று நீதிமன்றங்களுக்கு வரும் விவாகரத்து வழக்குகள் பல ஆண்டுகள் காரணம் இல்லாமல் இழுக்கும் நிலையும், வேறு வழி இல்லாமல் பெண்ணை தவறானவளாக சித்தரித்து விவாகரத்து பெறவேண்டிய கொடூரமும் நடந்தேறுகிறது.

அதைவிட அறிவுக்கு முரணான சட்டம்  ஜீவனாம்சம், பிடிக்காத மனைவி தன்னைவிட்டு பிரிந்தபிறகும் அவளுக்கு ஜீவனாம்சம் தரவேண்டும், சிலபெண்கள் ஜீவனாம்சம் பெற்றுக்கொண்டு வேறு திருமணம் செய்துகொள்ளாமல் மற்ற ஆண்களுடன் ஜாலியாக இருப்பததற்கு இந்த சட்டம் பயன்படுகிறது. ஆனால் இஸ்லாத்தை பொறுத்தவரை ஜீவனாம்சம் இல்லை. இலை வயது பெண் என்றால் வேறுமணம் முடிக்கவேண்டும், வயது முதிந்தவர் என்றால் அவரின் பிள்ளைகள் பார்த்துக்கொள்ளவேண்டும், பிள்ளைகள் இல்லையென்றால் அவர் சார்ந்த பள்ளியின் பைத்துல்மால் என்ற பொதுப்பணத்தில் இருந்து அவரை பாதுகாக்கவேண்டும்.

தன் மனைவியை தலாக்கும் விடாமல் சேர்ந்தும் வாழாமல் இருப்பவர்கள் எதற்கு அடுத்த பெண்களைப்பற்றி கவலைப்படுகிறார்கள்?


https://www.islamkalvi.com/?p=403

http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=6090:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE&catid=84:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=822

பொருளாதார அடிப்படையில் வழங்கப்படும் 10% இட ஒதுக்கீடு ஜனநாயக படுகொலை - பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கண்டனம்


பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினர்க்கு வழங்கப்படும் 10 % இட ஒதிக்கீடு என்பது ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயல் மட்டுமல்லாது சமூக நீதியை ஒழித்துக்கட்டும் செயலும் ஆகும் என்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் சேர்மன் இ அபூபக்கர் அவர்கள் தெரிவித்தார்கள்.

ஆர்டிகிள் 15  மற்றும் 16  ன் படி இட ஒதுக்கீடு என்பது சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கியவர்களுக்காத்தான். ஆனால்  பொருளாதாரத்திலும் பின் தங்கியவர்களுக்கும் இட ஒதிக்கீடை தரும் வண்ணம் மத்திய அரசு அதில் சில திருத்தங்களை செய்துள்ளது. இது போன்ற திருந்தங்களால் இட ஒதிக்கீட்டையே ஒழிக்க திட்டமிட்டுள்ளது மத்திய அரசு. இதனால் பொதுப்பிரிவினரின் வறுமை ஒழியாது. ஆயிரக்கணக்கான வருடம் அடிமைப்பட்டு இருந்த சமுதாயம் கொஞ்சம் முன்னேறிவரும் இந்த நேரத்தில் இது போன்ற சட்டங்களால் அவர்கள் திரும்பவும் பழைய நிலைக்கே திரும்பக்கூடிய அபாயம் உள்ளது.

பொருளாதாரம் என்பது சமூகம் மற்றும் சாதி போன்று மாறாத விஷயம் இல்லை, பொருளாதாரம் மாறக்கூடியதே. அதனால் தான் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு ஒரு தவறான விஷயம். இன்னும் நமது நாட்டில் வறுமை என்பது சமூகம் அல்லது சாதி சார்ந்ததாகவே உள்ளது.

பொருளாதார இட ஒதுக்கீடு 1992  ல் உச்ச நீதிமன்றத்தால் இந்திரா சவ்னி வழக்கில் தள்ளுபடி செய்யப்பட விஷயம் ஆகும். சாதி மதம் பார்க்காமல் வறுமையில் வாடுபவருக்கு தேவையான நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும், அப்படி எடுக்கப்படும் நடவடிக்கை ஏற்கனேவே உள்ள இட ஒதிக்கீடை நீர்த்துப்போகசெய்யாமல் இருப்பது அவசியம்.

இந்த செயல் பொதுப்பிரிவினரின் வாக்கை பெறவும், 4 .5 ஆண்டு ஆட்சியில் செய்த மூடத்தனத்தை மறைப்பதற்கான வேலையே. மேலும் காங்கிரசும் கம்ம்யூனிஸ்டும் இதை ஏற்பதற்கு காரணம் அதில் உள்ள தலைவர்கள் பெரும்பாலானோர் பொதுப்பிரிவினர் என்பதே என்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் சேர்மன் இ அபூபக்கர் அவர்கள் தெரிவித்தார்கள்.

http://popularfrontindia.org/?q=tue-01082019-1559

6. அத்வானி ர(த்)த யாத்திரையால் பிஜேபி பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட கலவரம் - ஆந்திரா ஹைதராபாத் கலவரம் 1990


ஹைதராபாத் கலவரம்

1990  ல் அத்வானி நடத்திய ரத யாத்திரையால் ஹைதராபாத்தில் உள்ள ஹிந்து மற்றும் முஸ்லீம்களுக்கு இடையே கலவரம் நடந்தது

சர்தார் என்ற ஆட்டோ ஓட்டுனரை நில பிரச்சனைக்காக இரண்டு ஹிந்துத்துவாக்கள் கொன்றுவிட்டனர், ரத யாத்திரை காரணாமாக பிறகு அதை ஹிந்து முஸ்லீம்க்கான கலவரமாக மாற்றிவிட்டனர்.

மாஜித்கான் சென்ற முஸ்லீம் தலைவர் காய்கறி மார்க்கெட்டில் வைத்து பிஜேபி பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டார், அதன் காரணமாகவும் கலவரம் நீண்டது.

10  வாரங்கள் நடந்த இந்த கலவரத்தில் 300  க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர், 1000  க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இந்த கலவரத்தில் ஈடுபட்ட எவரும் தண்டிக்கப்படவில்லை.


ஆதாரம்

https://en.wikipedia.org/wiki/1990_Hyderabad_riots

https://www.hindustantimes.com/india/hyderabad-ap-december-8-1990-over-200-dead/story-sN3L97xlBwVdIQDqkypWiI.html

https://www.nytimes.com/1990/12/10/world/muslim-hindu-riots-in-india-leave-93-dead-in-3-days.html

Thursday, January 17, 2019

5. சிறுவனை கொன்று, முஹம்மது ஸல் அவர்களை பற்றி கார்ட்டூன் வரைந்து இந்துத்வாவினர் கலவரம் - குஜராத் பரூச் கலவரம் 2015


முஹம்மது ஸல் அவர்களின்  கார்ட்டூன்

இஸ்லாத்தை பொறுத்தவரை நபி ஸல் அவர்களின் உருவப்படத்தை வரைய தடை என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, பல ஹிந்துக்களுக்கு ஏன் ஹிந்துத்துவாக்களுக்கு தெரியும், இருந்தும் நம்மை வம்பிழுக்கும் வண்ணமாக நபி ஸல் அவர்களின் படத்தை (இதுவரை பார்த்ததில்லை என்பது வேறு) வரைந்து கலவரத்திற்கு வித்திட்டார். அதன் காரணமாக நடந்ததுதான் பரூச் கலவரம்.

குஜராத், பரூச் மாவட்டம் ஹன்சாட் தாலுகாவில் 2015  ல் நடந்ததுதான் பரூச் கலவரம்.

காரணங்கள்


  1. டிசம்பர் 9 -11 அம்பெட்ட கிராமத்தில் சுனில் படேல் என்பவனால் முகம்மது நபி ஸல் (நவூதுபில்லாஹ்) அவர்களின் கார்ட்டூன் வரைந்து மக்களிடம் பரப்பப்பட்டது. 
  2. 14  டிசம்பர் 2014  - 5  ஜனவரி 2015 , கடப்பூர் கிராமத்தில் முஹம்மது குலாம் ஹாபிஸ் என்பவரை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்ய இந்துத்துவ தெரிவாதிகள் முயன்றனர். மதமாற்ற பயங்கரவாதிகளால் சஜுத், ஐலவ் மற்றும் சேரா உட்பட பல மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான மிரட்டல்கள் தொடர்ந்தன.
  3. 14  ஜனவரி 2015 , உத்தராயனில் பட்டம் பறக்கவிடும் கொண்டாட்டத்தில், முஸ்லீம் சிறுவன் ஒருவன் இந்துத்துவ பயங்கரவாதிகளால் அடித்து கொல்லப்பட்டான்.


மேலே உள்ள காரணங்களால் கலவரம் ஆரம்பித்தது.

பின்விளைவுகள் மற்றும் சேதங்கள்

மூன்று முஸ்லிம்களும், இரண்டு ஹிந்துக்களும் கொல்லப்பட்டனர், சிலர் இருபுறமும் காயமடைந்தனர்.

போலீஸ் காவலில் இருந்த ஆம்புலன்சில் இருந்த நோயாளி முஸ்லிமின் மண்டை ஓட்டை உடைத்து இந்துத்வ தீவிரவாதிகள் கொன்றனர்.

ஹிந்து மற்றும் முஸ்லீம் கடைகள் சேதப்படுத்தப்பட்டன. பல முஸ்லிம்கள் வீடுகள் எரிக்கப்பட்டன.

பல முஸ்லிம்கள் குடும்பங்கள் அகதிகளாக வெளியேறி சூரத்துக்கு சென்று விட்டனர்.

ஆதாரங்கள்

https://en.wikipedia.org/wiki/2015_Bharuch_riots

https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/NGO-blames-govt-police-for-2015-riots-in-Bharuch/articleshow/51603555.cms

https://indianexpress.com/article/india/india-others/communal-clashes-spark-after-kite-fight-in-bharuch-claim-two-lives/

https://www.indiatvnews.com/news/india/three-killed-10-injured-in-riot-in-gujarat-bharuch-district-46432.html

Wednesday, January 16, 2019

4. உச்சநீதிமன்ற தடையை மீறி தர்காவை இடித்து முஸ்லிமை காரோடு எரித்த BJP/RSS/ VHP பயங்கரவாதிகள் - குஜராத் பரோடா தர்கா கலவரம் 2006


கலவரம் செய்து ஆட்சியை பிடித்தவுடன், ஆட்சியை தக்கவைக்க அல்லது அகண்டபாரதம் அமைக்க முஸ்லீம் அடையாளங்களை அகற்றி முஸ்லிம்களை கொல்வது போன்ற ஆர் எஸ் எஸ் பிஜேபி யின் செயல்பாடுகளின் வரிசையில் உள்ளதுதான் தர்கா கலவரம்.

தர்கா கலவரம்

2006  ல் வதோதரா என்ற பரோடாவில் நடந்த கலவரத்தின் மற்றொரு பெயர் தர்கா கலவரம், 200 -300  வருடங்கள் பழமையான சயீத் சிஸ்தி ரஷீதுதீன் என்ற சூபியின் தர்காவை முனிசிபாலிட்டி அப்புறப்படுத்த முடிவு செய்தது, இதனால் ஏற்பட்ட கலவரத்தால் 6 -8  பேர் கொல்லப்பட்டனர், 42  பேர் காயமடைந்தனர்.

2006 ல் மேயர் சுனில் சோலங்கி தலைமையில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 20  கோவில்களும் 3  தர்க்காக்களும் அப்புறப்படுத்தப்பட்டன.

ஏப்ரல் 2  ந்தேதி குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்புப்படி, சாலைகளை ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கும் கட்டடங்களை அப்புறப்படுத்தியாகவேண்டும், அதற்க்கு இடையூறாக இருப்பவர்களை கைதி செய்வோம். ஆனால் ஏப்ரல் 4  ந்தேதி அந்த தீர்ப்புக்கு தடை வாங்கப்பட்டது.

சோலங்கி எப்படியாவது அந்த தர்காவை அப்புறப்படுத்தவேண்டும் என்றார், ஆனால் போலீஸ் கமிசனர் உச்சநீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி இடிக்கமுடியாது என்றார். ஆனால் சோலங்கி போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எங்களின் பஜ்ரங்தள் பையன்கள் செய்வார்கள் என்று சூளுரைத்து தர்காவை இடிக்க முயன்றார்.

அதனால் ஏற்பட்ட கலவரத்தில் 18  பேர் காயமடைந்தனர், 38  பேர் கைது செய்யப்பட்டனர். கண்ணீர் புகையை கொண்டு கூட்டத்தை கட்டுக்குள் கொண்டுவரமுடியாத காவல்துறை சுட உத்தரவு இட்டது, இதனால் பஜ்ரங்க்தள் பயங்கரவாதிகள் மே 2  ம் தேதி ஹிந்து முஸ்லீம் கலவரத்தை தூண்டினார். கலவரத்தை கட்டுப்படுத்தமுடியாத காரணத்தால், மே 3  ம் தேதி மாநில அரசு கூடுதல் காவலர்களை கேட்டது. அந்த நேரத்தில் 1500  பேர்கள் கொண்ட பயங்கவாத கும்பல் காருடன் சேர்த்து ஒரு முஸ்லிமை எரித்து கொன்றது. பாதுகாப்புக்காக மக்கள்  அஜாப்தி மில்லில் தங்கவைக்கப்பட்டனர்.

பின்விளைவு 

பிரண்ட்லைன் பத்திரிக்கையின் படி, இது 2002  நடந்தது போன்ற கலவரம் இல்லை, இரண்டு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலே இது. இரண்டு பக்கமும் அப்பாவிகள் காயம்பட்டனர், கொல்லப்பட்டனர். 2002 இனப்படுகொலை என்பது முன்கூட்டியே திட்டமிட்ட, மாநிலத்தில் உதவியால் நிகழ்த்தப்பட்டது.

கலவரத்திற்கு பிறகான ஆய்வுப்படி காவலர்கள் முஸ்லிம்களை குறிவைத்து தாக்கப்பட்டார்கள்.

ராணுவத்தின் உதவியால் 5 மாவட்ட கலவரம் கட்டுக்குள் வந்தது என்று  குஜராத்தின் அன்றைய உள்துறை அமைச்சரான அமித்சா கூறினார்.

மேலும் சில தகவல்கள்

  1. 1969  ல் பிஜேபி ஆர் எஸ் எஸ் ஹிந்து மகா சபை பயங்கவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்த தர்கா சேதமடைந்தது. அதன் பின்னால் அது சரிசெய்யப்பட்டது.
  2. சுமார் 3 .5  சதுர  மீட்டர் தர்காவே சாலையில் இருந்தது. 
  3. முஸ்லிம்கள் மேயர் சோலங்கியிடம் தர்காவை இடிக்கவேண்டாம் என்றும், இதை பாதுகாக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
  4. பிஜேபி ஆர் எஸ் எஸ் பலமுறை அந்த தர்காவை இடிக்கமுற்பட்டனர், ஆனால் அதை சுற்றி முஸ்லிம்கள் வசித்ததால் அவர்களால் முடியவில்லை.
  5. தர்காவை நீங்கள் அப்புறப்படுத்தாவிட்டால், நாங்கள் அப்புறப்படுத்துவோம் என்று விசுவ ஹிந்து பரிஷத் பகிரங்கமாக காவல்துறைக்கு கடிதம் எழுதியது.
ஆதாரங்கள்



Sunday, January 13, 2019

3. முஸ்லீம் இன அழிப்பு - குஜராத் கலவரம் 2002


பிஜேபி யை பொறுத்தவரை கலவரம் செய்து ஆட்சியை பிடிப்பார்கள், கலவரம் செய்து ஆட்சியை தக்கவைப்பார்கள், கலவரம் செய்து முஸ்லீம் மற்றும் தாழ்த்தப்பவர்களை கொல்வார்கள், அதுதான் அவர்களின் அகண்டபாரத நோக்கம்.

மொத்தத்தில் அவர்களின் தொழில் கலவரம்,  கலவரம், கலவரம்

உலக அரங்கில் இந்தியாய் தலைகுனியவைத்த சம்பவங்களின் மிக முக்கியமான சம்பவம் குஜராத்தை கலவரம் 2002 .
1969  ல் ஆரம்பித்த கலவரத்தின் விளைவாக முஸ்லிம்கள் தனியாக வாழத்தொடங்கி இருந்தனர், முஸ்லிம்கள் தனியாக வாழத்தொடங்கியதன் விளைவு, எளிதில் அவர்கள் கொன்று குவிக்கலாம், இதுதான் இந்துத்துவ பாசிச பிஜேபி ஆர் எஸ் எஸ் குறிக்கோள்.

காரணம்

2002  பிப்ரவரி 27  ம் தேதி அயோத்தியில் இருந்து திரும்பிக்கொண்டு இருந்த சபர்மதி விரைவுவண்டியின் S2 கோச்சை  கோத்ரா என்ற இடத்தில் தீக்கிரையாக்கினார். எரித்தவர்களை இன்றுவரை முஸ்லிம்கள் என்றுதான் சொல்கிறார்கள், ஆனால் எதற்க்காக அவர்களை முஸ்லிம்கள் எரிக்கவேண்டும் என்று இதுவரை சொல்லவில்லை.

எரிந்த கோச்சை கழட்டிவிட்டு விட்டு ரயில் பரோடா சென்றது, பரோடா சென்ற ரயிலில் இருந்து இறங்கிய ஒருவரை கட்டையால் அடித்து கொன்றனர், மற்றவரை அடித்து காயப்படுத்தினர் ஆர் எஸ் எஸ் பிஜேபி கலவரக்காரர்கள். மேலும் ஆண்ட்ரே இரண்டு பேருந்துகளை எரித்தனர்.

ஆஸ்திரேலியாவில் இருந்த பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தனது பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார். நாட்டு மக்கள் சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டி கொண்டார். விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரை, ராமர் கோவில் கட்டுவதை தவிர்க்குமாறு வாஜ்பாய் மற்றும் அத்வானி வலியுறுத்தினர்.எனினும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணியை 15 மார்ச் அன்று தொடங்கப்போவதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அறிவித்தது. இதற்காக 3000 உதவி ராணுவ அணிகள் அயோத்திக்கு அனுப்பப்பட்டனர்.

70,000 காவலர்கள் மற்றும் பாதுகாவலர்கள் மாநிலமெங்கும் அமர்த்தப்பட்டனர் அன்று இரவே, கோத்ரா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.குஜராத் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் கோர்தன் சடாஃபியா வன்முறையை தடுக்க எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விவரித்தார். இதில் கண்டவுடன் சுட உத்தரவு போன்ற கடுமையான நடவடிக்கைகள் இஸ்லாமியர்கள் அதிகமுள்ள இடங்களில் அமல்படுத்தப்பட்டதை சுட்டிக் காட்டினார். மற்றும், இந்து - முஸ்லிம்கள் ஒன்றாக வாழும் இடங்களுக்கு அதிக பாதுகாப்பு போடப்பட்டது. கடைகளைச் சூறையாடிய மற்றும் வீடுகளை தீயிட்டு கொளுத்திய கும்பலின் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 17 வயது வாலிபர் மரணமடைந்தார்.

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தொடர்வண்டி எரிப்பு நிகழ்வை கண்டித்தார். இவரைத் தவிர, வேறெவரும் அந்நிகழ்வை கண்டிக்கவில்லை. குஜராத்தின் அண்டை மாநிலங்களான மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்திலும் எச்சரிக்கை எழுப்பப்பட்டது.

காங்கிரசால் அமைக்கப்பட்ட கமிட்டியின் தலைவர் உமேஷ் சந்திரா பனர்ஜீயின் வாக்குப்படி, ரயில் உள்ளிருந்து எரிக்கப்பட்டுள்ளது, ஆனால் அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. அதன்பின்னர் ரயிலை எரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம்கள் 11  பேருக்கு தூக்கும், 20  பேருக்கு ஆயுள் தணடனையும் தீர்ப்பளிக்கப்பட்டது.

மேலும் அன்றைய முதல்வராக இருந்த இந்நாள் பிரதமர் மோடி, எரிந்த பிணத்தை ஊர்வலமாக மக்களிடம் எடுத்து செல்ல உத்தரவிட்டார், ஹிந்துக்களை கொன்ற முஸ்லிம்களை பழிவாங்க உத்தரவு இட்டார். உங்களுடன் நான் இருக்கிறேன் இன்றைய நாட்கள் உங்களோடது என்று அவர்களுக்கு ஆர்வமூட்டினார்.

ஆர் எஸ் எஸ் இந்த 2000  க்கும் அதிகமான யூனிட்டுகள் இந்த கலவரத்தில் பங்குபெற்றனர். அதிகமான தலித்துகள் இந்த கலவரத்தில் பயன்படுத்தப்பட்டனர்.

கோத்ரா ரயிலை எரித்தவர்ககளை(?) பழிவாங்க ஆர் எஸ் எஸ் பிஜேபி பயங்கரவாத கும்பல் கொன்று குவித்த மக்களின் எண்ணிக்கை 3000.

வீடுகளையும் கடைகளையும் இழந்த மக்கள் 5000  க்கும் மேல், சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக வாழும் மக்களின் எண்ணிக்கை 50,000  க்கும் மேல்.

கலவரத்திற்கு பிறகு முஸ்லிம்களின் நிலையை பற்றி கேட்டபோது மோடி சொன்னது அவர்களுக்கு என்ன அகதிகள் முகாமில் இனப்பெருக்கம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்ற கேவலமான பதிலை சொன்னார், மனைவியை வைத்து காப்பாற்ற வக்கற்ற மோடி.

மிகவும் கொடூரமாக காட்டுமிராண்டித்தனமாக பெண்களை கற்பழித்தனர், கொன்று குவித்தனர், கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து சிசுவை எடுத்து தீயிலிட்டு கொளுத்தினர்.

3 நாட்களுக்கு மேலாக கட்டுக்குள் கொண்டுவரப்படாத இந்த கலவரம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது, சொந்த கட்சியை சேர்ந்த வாஜ்பாயே மோடியைப்பார்த்து ராஜ தர்மத்தை மீறிவிட்டார் என்றார்.

ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுக்குள் ஒன்றாக பழகிவந்தனர், ஆனால் ஆர் எஸ் எஸ் ஆல் வெறியூட்டப்பட்ட அதே ஹிந்துக்கள் பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு அப்பாவிகளை கொன்று குவித்தனர்.

காங்கிரசை சேர்ந்த இஹஷான் ஜாப்ரி என்ற MP உடலுறுப்புகள் வெட்டப்பட்டு எரித்துக்கொல்லப்பட்டார், அதுவும் அவரின் மனைவியின் முன்னாலே, காரணமான பயங்கரவாதிகள் தண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லோருக்கும் அதிகம் தெரிந்த கலவரம் என்பதால் அதிகம் விவரிக்கத்தேவை இல்லை என்று நினைக்கிறேன்.

3 முக்கிய விடை தெரியாத கேள்விகள்.


  1. ஏன் முஸ்லிம்கள் (அப்படித்தான் சொல்கிறார்கள்) ரயிலை எரித்தார்கள்? காரணம் என்ன?
  2. எரித்தவர்களை கண்டுபிடித்து தண்டனை வாங்கித்தர தகுதியற்ற மோடி ஏன் பினத்தை வைத்து அரசியல் செய்து அப்பாவிகளை கொல்ல காரணமாக இருந்தார்?.
  3. ஏன் மோடி மூன்று நாட்களுக்குள் கலவரத்தை கட்டுப்படுத்தவில்லை?


கொலை செய்பவனை விட கொலை செய்ய தூண்டியவனுக்கே தண்டனை, ஆனால் இந்த இன அழிப்புக்கு காரணமான மோடியை ஏன் நீதிமன்றம் தண்டிக்கவில்லை?.


பிரெட்லைன் பத்திரிக்கைப்படி பரவலாக்கப்பட்ட, மாநிலத்தால் நடத்தப்பட்ட, திட்டமிட்ட இனப்படுகொலை தான் 2002  படுகொலை.

https://www.quora.com/What-was-Narendra-Modis-role-in-Godhra

http://edition.cnn.com/2002/WORLD/asiapcf/south/05/15/gujarat.camps/index.html

https://en.wikipedia.org/wiki/2002_Gujarat_riots

https://timesofindia.indiatimes.com/india/Atal-Bihari-Vajpayees-2002-letter-returns-to-haunt-Narendra-Modi/articleshow/10011704.cms

https://frontline.thehindu.com/politics/modi-is-accountable/article6185289.ece

https://en.wikipedia.org/wiki/2006_Vadodara_riots

Saturday, January 12, 2019

2. SC & MBC க்களின் இட ஒதுக்கீட்டை எதிர்த்து BJP செய்த கலவரம் - குஜராத் கலவரம் 1981 & 1985


நாம் ஏற்கனவே சொன்னதுபோல கலவரம் செய்து ஆட்சியை பிடிக்க பிஜேபி ஆல் நடத்தப்பட்ட கலவரம் தான் 1985  ல் அகமதாபாத்தில் நடந்த கலவரம். ஏதாவது ஒரு சிறிய காரணம் கிடைத்தாலும் அதை பெருசாக்கி எப்படியாவது ஆட்சியை பிடித்து மக்களை கொடுமைப்படுத்தவேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படும் பிஜேபி 1985  ல் கையிலெடுத்த விஷயம் இட ஒதுக்கீடு. காங்கிரஸ் முதல்வர் மாதவ் சிங் சோலங்கி ஆட்சியை பிடித்தவுடன் ஷத்ரியர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தினார். அதை பொறுத்துக்கொள்ளாத ஆர் எஸ் எஸ் மற்றும் பிஜேபி ஷத்ரியர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் எதிராக செய்த கலவரம் தான் இது.


கலவரத்திற்க்கான காரணங்கள்.


  1. ) தாழ்த்தப்பட்டவருக்கான இடஒதுக்கீட்டை 10 % ல் இருந்து 28 % ஆக ஆக்கியது.
  2. ) குஜராத் சட்டமன்றத்தில் 20  மந்திரிகளின் 14  மந்திரிப்பதவி ஷத்ரியர்களுக்கு ஒதுக்கப்பட்டது.

  • முதலில் இந்துக்களின் பிரிவுகளுக்கு இடையேயான கலவரம் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிராக திரும்பியது. முதலில் அரசின் சொத்துக்களை செத்தப்படுத்திய ஆர் எஸ் எஸ் பிஜேபி கும்பல் பின்னர் முஸ்லிம்களின் சொத்துக்களை சேதப்படுத்த தொடங்கியது.


  • 1981  ல் இதே காரணத்துக்காக தலித்துகளுக்கு எதிராக ஒரு கலவரம் நடத்தப்பட்டது. அந்த கலவரத்தில் தக்குதலுக்கு உட்பட்ட பிஜேபி யை சேர்ந்த இந்த கலவரத்தில் தலித்துக்கு உதவிசெய்தனர் எதற்கு என்றால் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்த. 


  • கடைசியில் இந்த இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. 


பிப்ரவரி 1985 ல் ஆரம்பித்த இந்த கலவரம் அக்டோபர் 1986 ல் தான் முடிந்தது, கிட்டத்தட்ட 21 மாதங்கள் இந்த கலவரம் நடந்தது.

இழப்பு

275  பேர் கொல்லப்பட்டனர், ஆயிரத்துக்கும் அதிகமாக காயமடைந்தனர்,          10 ,000  க்கும் அதிகமானோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த பயங்கரவாத தாக்குதல் பற்றிய தகவலை திரட்ட கமிசன் எதுவும் அமைக்கப்படவில்லை என்பது கூடுதல் தகவல், வாசிப்பாளர்கள் இதுபற்றி தகவல் அறிந்தால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தலாம்.

ஆதாரம்

https://www.academia.edu/21910721/Bootlegging_politics_and_corruption_state_violence_and_the_routine_practices_of_public_power_in_Gujarat_1985-2002_

https://www.thehindu.com/2000/11/09/stories/02090004.htm

https://en.wikipedia.org/wiki/1985_Gujarat_riots

https://www.revolvy.com/page/1985-Gujarat-riots

http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/186461/16/15%20chapter%208.pdf

Friday, January 11, 2019

1. ஜெய் ஜெகன்நாத் சொல்ல மறுத்த முஸ்லீம் எரித்து கொலை - குஜராத் கலவரம் 1969


நாசகார ஆர் எஸ் எஸ் ன் அரசியல் பிரிவு பிஜேபி:

ஆர் எஸ் எஸ் என்ற நாசகார அமைப்பின் அரசியல் பிரிவுதான் பிஜேபி,

கலவரம் செய் ஆட்சியை பிடி

கலவரம் செய் ஆட்சியை தக்கவைத்து கொள்

என்பதுதான் இவர்களின் தாரக மந்திரம்  (அமித்ஷா பார்முலா).

இருந்தும் தென் மாநிலங்களில் இவர்களின் கொடூர அரசியல் அந்த அளவுக்கு எடுபடவில்லை, ஆனால் படிப்பிலும், கலாச்சாரத்திலும், பொருளாதாரத்திலும் பின்தங்கிய வடமாநிலங்களில் ஆட்சியை பிடிக்க அமித்ஷா பார்முலா பயன்பட்டது. இந்த கட்டுரை தொடரில் சங்கபரிவார பாசிச கும்பல் எப்படி கலவரம் செய்து ஆட்சியை பிடித்தது என்று பார்ப்போம்.

பிஜேபி யின் அரசியல் வரலாறு:

1954  ல் பாரதிய ஜன சங்கம் என்று ஆரம்பித்த கட்சி, 1980  ல் பிஜேபி யாக உருவெடுத்து 1984  ல் நடந்த பொதுத்தேர்தலில் வெறும் 2  இடங்களை கைப்பற்றியது,  ஆனால் வளர்ச்சி என்ற பொய் பிரச்சாரத்தின் மூலம் 2014  ல் 282  இடங்களை அறுதி பெரும்பான்மையோடு பெற்றது.

இவர்கள் ஆட்சியை பிடித்தால் ஒன்று கலவரம் நடக்கும் அல்லது பிடித்தபின் கலவரம் நடக்கும் என்று நாளொரு கலவரம் பொழுதொரு மக்கள் விரோத அரசாக இன்று விருட்சமாக வளர்ந்து நிற்கின்றனர்.

இவர்களின் ஆட்சியில் நடந்த கலவரங்களை மாநிலவாரியாக பார்ப்போம். இந்த கட்டுரையில் 1969  ல் நடந்த குஜராத் கலவரம் பற்றி தெரிந்துகொள்வோம்.

அமித் ஷா ஜீ நியூஸுக்கு அளித்த பேட்டி:

நாங்கள் ஏன் மீண்டும் மீண்டும் வெற்றி பெறுகிறோம்? 27 ஆண்டுகளாக குஜராத்தை ஆள்கிறோம். ம.பி., சட்டிஸ்கரில் 15 ஆண்டுகளாக ஆள்கிறோம். எங்களை மதவாத கட்சி என்று குற்றம் சாட்டுகிறார்கள்.  ஆனால், குஜராத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு மதக்கலவரம் கூட நடக்கவில்லை. மத்திய பிரதேசத்திலும் சரி, சட்டிஸ்கரிலும் சரி ஒரு மதக்கலவரம் கூட நடக்கவில்லை. உத்தர பிரதேசத்தில் எங்கள் ஆட்சி அமைந்தவுடனே மதக்கலவரங்கள் நின்று விட்டன.” (அமித் ஷா, நவ 23, 2018 அன்று ஜீ நியூஸுக்கு அளித்த பேட்டியில் கூறியது)

ஆனால் உண்மை என்பது வேறு, இவர்களின் மூலதனத்தின் முக்கிய ஒன்று பொய், பொய், பொய்யை தவிர வேறில்லை. அதிலும் கொஞ்சம் கூட வெட்கப்படாமல் பொய் சொல்லக்கூடியவர் தான் இந்த கட்சியை சேர்ந்த தொண்டர்கள் மட்டுமல்ல, தலைவர்களுமே.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பசுக் குண்டர்கள் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் தொடுக்காத நாள் இல்லை. ஏதேனும் ஒரு முகாந்திரத்தை வைத்து சிறுபான்மை மக்கள் மீது அன்றாடம் இந்து வெறியர்கள் தாக்குதல் நடத்தும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இருந்த போதிலும் இப்படி ஒரு பொய்யைத் துணிந்து சொல்வதற்கு அமித் ஷா சிறிதும் தயங்கவில்லை. அதனை அப்படியே ஒளிபரப்புவதற்கும் ஜீ தொலைக்காட்சி தயங்கவில்லை.

“Factchecker ஃபாக்ட் செக்கர்” என்ற இணையதளம் அமித் ஷாவின் இந்தப் பொய்யை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருக்கிறது.

1998 முதல் 2016 வரையில் குஜராத்தில் பா.ஜ.க. ஆட்சி செய்த காலத்தில் அங்கே நடைபெற்ற கலவரங்களின் எண்ணிக்கை 35,568. 2014 -16 காலத்தில் மட்டும் மதவெறித் தாக்குதலில் 305 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இது நேஷனல் கிரைம் ரிகார்ட்ஸ் பீரோ (NCRB) வெளியிட்டிருக்கும் கணக்கு

மோடி ஆட்சிக்காலத்தில் 2002-ல் நடைபெற்ற படுகொலையின் போது அரசு கணக்கின்படியே 1044 பேர் கொல்லப்பட்டனர். 223 பேர் காணாமல் போயினர். 2500 பேர் படுகாயம் அடைந்தனர். இது மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த கணக்கு. உண்மையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட மிகவும் அதிகம் என்பதே பல்வேறு அமைப்புகளின் மதிப்பீடு.

குஜராத் கலவரம் - 19 -24  செப்டம்பர் 1969:

செப்டம்பர் 18 , 1969  ல் அகமதாபாத்தில் உள்ள ஜமால்பூர் பகுதியில் உள்ள புஹாரி சாஹிப் என்ற தர்காவில் கடைசிநாள் உர்ஸ் நடந்துகொண்டிருந்த போது ஜெகன்நாத் மந்திரின் பசுக்களை சாதுக்கள் உர்ஸ் நடக்கும் தெருவின் வழியாக ஓட்டிக்கொண்டு வந்தனர் (எப்படி தலித்துகள் பகுதிக்கு செல்லாத விநாயகர், முஸ்லிம்கள் பகுதிக்கு மட்டும் செல்வாரோ அதுபோல்), அப்பொழுது அந்த பசுக்கள் முட்டியதால் பல பெண்கள் காயம் அடைந்தனர், பல கடைகள் சேதமடைந்தன. அதனால் இரண்டு தரப்பினருக்கு வாக்குவாதம் ஏற்பட்டு கலவரம் மூண்டது, பிறகு பலர் கொல்லப்பட்டனர், சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.


  1. 19 -24  செப்டம்பர் வரை கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை 514 .  
  2. சேதப்படுத்தப்பட்ட கடைகள் மற்றும் வீடுகளின் எண்ணிக்கை 6 ,123. 
  3. இந்த கலவரத்தை முன்னின்று நடத்தியது ஆர் எஸ் எஸ், ஹிந்து மகா சபை மற்றும் ஜனசங்கம் என்று காங்கிரஸ் அமைத்த நீதிபதி ரெட்டி கமிசன் சொல்கிறது.


இந்துத்துவ ஆட்களால் பாதிக்கப்பட்ட ஒரு முஸ்லீம், உங்களை பழிக்கு பழி வாங்குவேன் என்று சூளுரைத்திட்டார், அதை தங்கி கொள்ள முடியாத  ஒரு  சங்கி அந்த முஸ்லிமை ஜெய் ஜெகன்நாத் என்று சொல்ல வற்புறுத்தினார், ஆனால் அந்த முஸ்லிமோ ஜெய் ஜெகன்நாத் சொல்வதை விட இறப்பதே மேல் என்றார், கூட்டம் கூடியது, அந்த முஸ்லீம் பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்டார், ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது, முனிசிபல் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது, ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட முதல் நாளில் 3  மணி நேரத்தில் 30  பேர் கொல்லப்பட்டார்கள்.


கீழே உள்ள லிங்கின் படி 15 ,000  லிருந்து 20 ,000  பேர் கொல்லப்பட்டனர்.

http://manvenrakesh.blogspot.com/2011/09/who-would-apologise-for-1969-and-1985.html


பின்விளைவுகள்:

1971 ல் நீதிபதி ஜகன்மோகன் ரெட்டியின் அறிக்கை குஜராத் உள்துறையால் வெளியிடப்பட்டது, அந்த அறிக்கையின் சாராம்சம்.

  • போலீஸ் நிலையத்திற்கு பக்கத்தில் உள்ள ஆறு இடங்களின் வாழும் முஸ்லிம்களை கலவரக்காரர்களிடம் இருந்து போலீஸ் பாதுகாக்கவில்லை, போதுமான போலீஸ் இல்லாத காரணம் என்று காவல்துறை அறிவித்தது.

  • 37 பள்ளிகள் 50 தர்காக்கள் 6 மையவாடியில் மற்றும் 3  கோவில்கள் அடித்து நொறுக்கப்பட்டன.   


  • 3  நாட்கள் கலவரத்தை கட்டுப்படுத்தாமல் காவல்துறை இந்துத்துவாவிற்கு உதவி செய்தது என்று பத்திரிக்கையாளர் அஜித் பட்டாச்சாரியார் குற்றம் சாட்டினார். மேலும் இது காவல்துறையின் மெத்தனப்போக்கு அல்ல மாறாக இது அவர்களின் கொள்கை என்றும் சாடினார்.


  • பெயர் சொல்லவிரும்பத காங்கிரஸ்காரரின் வாக்குப்படி, அடுத்த தேர்தலில் ஜனசங்கம் பதவிக்கு வந்த எங்களை பழிவாங்கிவிடுவார்கள் என்று காவல்துறையினர் பயந்தார்.


  • எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர் Achyut  Yagnik என்பவரின் கூற்றுப்படி 1969 ல் நடந்த இந்த கலவரம் தான் ஹிந்து முஸ்லீம் பிரிவினைக்கும்,  சகிப்பு தன்மை குறைவதற்கும் முக்கிய புள்ளியாக இருந்தது, மேலும் 1992 -93  மற்றும் 2002  கலவரத்திற்க்கான விதையாகவும் இருந்தது. 


  • 1969  கலவரத்திற்கு பிறகு முஸ்லிம்கள் தனியாக வாழத்தொடங்கியதும் ஆரம்பித்தது.


  • இந்துத்வ சக்திகள் வலிமைப்பெற செய்யப்பட கலவரம் தான் இது என்று அன்றைய முதலமைச்சர் ஹிதேந்திர தேசாய் சொன்னது இங்கே குறிப்பிடத்தக்கது. 
  • ஜக்மோகன் அறிக்கைப்படி கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1100,  இருந்து துரதிஷ்டமாக அடுத்து வந்த ஆட்சியாளர்கள் இந்த கலவரத்திற்கு காரணமான ஆர் எஸ் எஸ், ஹிந்து மகா சபை மற்றும் ஜனசங்கம் அமைப்பினரை தண்டிக்கவில்லை.


ஆதாரங்கள்


http://www.gujaratriots.com/index.php/2008/09/gujarats-bloody-history-of-violence/

https://en.wikipedia.org/wiki/1969_Gujarat_riots

https://www.outlookindia.com/website/story/history-of-communal-violence-in-gujarat/217988

https://www.outlookindia.com/website/story/hindutva-the-growth-of-violent-hindu-nationalism/217969

https://factchecker.in/fewer-riots-minorities-safer-under-modi-regime-kiren-rijiju-data-right-on-riots-but-claim-on-safer-minorities-without-foundation/

https://www.vinavu.com/2019/01/11/amith-shah-lied-about-communal-violence/

8. இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறதா?-2

இஸ்லாமிய பெண்களைப்பற்றி கவலைப்படாத எதிரிகள், அதாவது இஸ்லாமிய பெண்களை கற்பழித்து, வயிற்றில் இருந்த குழந்தையை வயிற்றை கீறி எடுத்து தீயில் இட்டு பொசுக்கியவர்கள் இஸ்லாமிய பெண்களைப்பற்றி கவலைப்படுவதுபோல சில விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்.

அதில் முக்கியமானவை


  1. பள்ளிவாசலுக்குள் அனுமதிப்பதில்லை
  2. இமாமாக நியமிப்பதில்லை
  3. சொத்தில் பாதியே பெண்களுக்கு
  4. சாட்சி கையெழுத்துக்கு இரண்டு பெண்கள் தேவை
  5. மற்றவரோடு கை குலுக்குவதில்லை


1. பள்ளிவாசலுக்குள் அனுமதிப்பதில்லை

இஸ்லாம் ஒருபோதும் பெண்களை பள்ளிக்குள் சென்று தொழ தடை விதிக்கவில்லை, மாறாக சென்று தொழத்தான் செல்கிறது, ஆனால் வீடுகளே சிறந்தது என்று கூறுகிறது, மக்கா மதினாவில் பெண்கள் திரளாக தொழுகையில் கலந்து கொள்வதை காணலாம், நமது ஊர் பள்ளிவாயில்களிலும் ஏராளமாக காணலாம். பல பள்ளிவாயில்கள் அனுமதிக்காததற்கு காரணம், போதிய கழிப்பறை வசதி பெண்களுக்கென தனியாக இல்லாத காரணத்தாலும், ஆண் பெண் கலப்பு இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்ற காரணத்தாலும் தான்.


2. இமாமாக நியமிப்பதில்லை

இஸ்லாத்தில் ஆண் பெண் கலப்படம் கூடவே கூடாது, அந்நிய பெண்ணுடன் தனித்திருப்பதைவிட இரும்பால் ஆன ஆணியால் கீறிக்கொள்வதையே விரும்புகிறேன் என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஒரு பெண் மணமுடிக்கக்கூடாத ஆணுடனும், கணவனனுடனும் தான் தனித்திருக்க இஸ்லாம் அனுமதிக்கிறது, இன்று பல பெண்கள் கற்பழிக்கப்படுவது தெரிந்தவர்கள் மற்றும் சொந்தக்காரர்களால் தான் என்பது மறுக்கமுடியாத உண்மை, அந்த வெறுக்கத்தக்க விஷயத்தை களையவே இஸ்லாம் ஆணையும் பெண்ணையும் கலக்க அனுமதிப்பதில்லை. 

யாரை திருமணம் செய்யலாம், யாரை செய்யக்கூடாது

4:23. உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்: உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும்; உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள்; அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது; ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது - இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான்.

86 % வல்லுறவுக்கு காரணம் தெரிந்தவர்ர்களும் சொந்தக்காரர்களுமே என்று ஒரு ஆய்வு சொல்கிறது, வேலியில் போற ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டுடவிட்டு குத்துதே குடையுதேன்னு சொல்றமாதிரி, தெரிந்தவர்தானே, சொந்தக்காரத்தானே என்று நம் பெண்களை பழகவிடுவதால் இதுபோன்ற துக்ககரமான சம்பவங்கள் நடக்கின்றன, இதை முளையிலேயே கிள்ளியெறியத்தான் இஸ்லாம் ஆன பெண் கலப்பை தடுக்கிறது.

https://timesofindia.indiatimes.com/india/86-of-rapes-were-committed-by-people-known-to-victims-NCRB/articleshow/48544137.cms


இப்படி இருக்கின்ற சூழ்நிலையில் பெண்ணை ஆணுடன் கலக்கச்செய்யும் செயலான பெண்ணை இமாமாக நியமித்தல் தகுமோ?

3. சொத்தில் பாதியே பெண்களுக்கு

பெண்களுக்கான சொத்துரிமை இன்னும் எட்டாக்கனியாக இன்று இருக்கிறது, ஆனால் 1400  வருடங்களுக்கு முன்னே சொத்தில் பங்கு தந்தது இஸ்லாம் மட்டுமே, இன்றும் இந்தியாவில் ஐந்து மாநிலங்கள் தவிர (தமிழ்நாடு, ஆந்திர, கேரளா, மஹாராஷ்டிரா, கர்நாடக) மற்ற மாநிலங்களில் பெண்களுக்கு சொத்துரிமை இல்லை, சமூகநீதி பேசக்கூடிய பெரியாரும், அம்பேத்காரும் கலைங்கரும் தான் இதற்க்கு பாடுபட்டனர், ஆனால் இன்று அவர்களை ஏன் சங்க பரிவார கும்பல் எள்ளி நகையாடுகிறது என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

பெண்களைப்பொறுத்தவரை, தந்தையின் சொத்தில் பாதி பங்குண்டு, அதே நேரத்தில் கணவனாகப்போறவனிடம் மஹரை கேட்டுப்பெறலாம், பல நேரங்களில் பரம்பரை சொத்தைவிட பல மடங்கு மஹராக கிடைக்க சாத்தியமுண்டு.

ஆனால் பெண்களை தெய்வமாக மதிக்கும் சமுதாயம், பெண் பிள்ளைகளை கள்ளிப்பால் கொடுத்து கொன்றதே வரதட்சணை கொடுக்கமுடியாததால் தான் என்பது நிதர்சனம். வரதட்சணை வாங்கி திருமணம் செய்யுபவருக்கு இஸ்லாம் சொல்லும் சொத்துரிமையை பற்றி விமர்சிக்க தகுதி ஏது?

4. சாட்சி கையெழுத்துக்கு இரண்டு பெண்கள் தேவை

அதாவது ஒரு ஆணுக்கு பதில் இரண்டு பெண்கள் சாட்சிக்கு தேவை என்று இஸ்லாம் கூறுகிறது,

(நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது; (2 :282).


இங்கே இறைவன் கூறும் காரணம் ஒருவள் மறந்துவிட்டால் மற்றவர் நினைவூட்டக்கூடும் என்பதால். சரி இங்கே பெண்கள் ஆணைவிட நியாபகசக்தியில் குறைந்தவர்களா என்ற கேள்வி எழக்கூடும், ஆம் பெண்களுக்கு நியாபகசக்தி ஆண்களைவிட குறைவே.



https://projects.iq.harvard.edu/files/banaji/files/1987_loftus_mqr.pdf

சிறிய சிறிய விஷயங்களைத்தான் பெண்கள் நியாபகம் வைத்திருப்பார்கள், ஆனால் கொடுக்கல் வாங்கல், கொலை போன்ற சாட்சி போன்ற விசயத்திற்கு ஆண்களே நியாப சக்தியில் சிறந்தவர்கள் என்பதற்கு மேலே ஆதாரம் உள்ளது.


5. மற்றவரோடு கை குலுக்குவதில்லை

புகாரி ஷரீபில் வரும் ஹதீஸ் இதற்கு ஆதாரமாகும். அன்னை ஆயிஷh(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 ’பெருமானாரின் கை, தனக்குச் சொந்தமான மனைவியரின் கையைத்தவிர்த்து எந்த பெண்ணின் கையையும் தொட்டதில்லை’

இன்றும் பல பெண்கள் இஸ்லாத்துக்காக வேலையையும் பொருளாதாரத்தையும் இழக்க தயாராக இருக்கிறார்கள். கூட வேலைபார்ப்பவர்களோடு கைகுலுக்க சொன்னதற்காக வேலையை விட்ட சம்பவமும் நடந்துள்ளது, ஆதாரம் கீழே


https://www.independent.co.uk/news/world/europe/muslim-woman-leaves-job-after-being-told-to-shake-hands-with-male-colleagues-a7324591.html


பிற்சேர்க்கை






Thursday, January 10, 2019

7. இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறதா?-1


உலகில் தோன்றிய மதம் அல்லது சமுதாயத்தில் பெண்களை எவ்வாறு நடத்தினார்கள் என்று பார்த்தால் எப்படி இஸ்லாம் பெண்களை உயர்வு படுத்துகிறது என்று புரிந்து கொள்ளலாம்.

கிரேக்கர்கள்:

கிரேக்கர்கள்  பெண்களை விற்பனைப் பொருட்களாகவே கருதினர். அவர்களுக்கென எந்த உரிமையும் வழங்கப்படவில்லை. உரிமைகள் அனைத்தும் ஆண்களுக்கே வழங்கப்பட்டன. அங்கு பெண்களுக்கு சொத்துரிமை, கொடுக்கல் வாங்கல் போன்ற உரிமைகள் தடுக்கப்பட்டிருந்தன.
அவர்களில் பிரபல்யமிக்கவராகத் திகழ்ந்த சோக்ரடீஸ் என்பவர், 'பெண்கள் இருப்பது உலகின் மிகப் பெரிய அழிவிற்கு மூல காரணம். நிச்சியமாக பெண்கள் விஷ மரத்திற்கு ஒப்பானவர்கள். அம்மரத்தின் புறத்தோற்றம் அழகாக இருக்கிறது என்றும், அதிலுள்ளதை சிட்டுக் குருவிகள் சாப்பிட்டவுடனேயே மரணித்து விடுகின்றன' என்றார்.

இந்தியர்கள்:

 பெண்களின் விஷயத்தில் இந்தியர்களின் கண்ணோட்டம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. கணவன் மரணித்து விட்டால் அவனோடு சேர்த்து அவனது மனைவியும் எரித்து விடுவார்கள். இதற்கு 'உடன்கட்டை' ஏறுதல் எனப்படுகிறது.
அதேபோல், கணவன் இறந்து விட்டால் போதும்! விதவைப் பெண்ணுக்கு, சமுதாய மக்கள் மொட்டையடித்து விடுவர். வெள்ளாடை உடுத்தி ஒரு மூலையில், மூளி என்று முடக்கி வைத்தனர். பாயில் படுக்க விடாமல், கூலாங் கற்களில் படுக்க வைப்பார்கள்.ருசிகரமான உணவும் உடுத்த உடையும் வழங்காமல் இருட்டறையில் அடைத்துவிடுவார்கள்.
ஒரு பெண் கணவனுடன் வாழ்ந்தால் சுமங்கலி! கணவனை இழந்து விட்டால் அமங்கலிளூ தாலி அறுத்தவள். நல்ல காரியத்திற்குச் செல்வோருக்கு முன்னால் அவள் குறுக்கே வந்து விட்டால் அது துற்குறி, சாபக்கேடு, கெட்ட சகுனம் என்றெல்லாம் விதவைப் பெண்களை வதை செய்கின்ற கொடுமை இந்திய நாட்டில் தற்போதும் நடந்து கொண்டிருக்கிறது.
மொட்டை அடித்து, வதை செய்யும் கொடுமையுடன் நின்று விடுவதில்லை. இறந்த கணவனை எரிக்கும் போது அந்த நெருப்பி(சிதையி)ல் மனைவியையும் தள்ளி விட்டு, உடன் கட்டை ஏறுதல் என்ற பெயரில் கொழுந்து விட்டு எரியச் செய்து சாம்பலாக்கிவிடுவர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் டியோராலா என்ற கிராமத்தில் ஒரு கோரச் சம்பவம் நடந்தது. ராஜபுத்திர இனத்தைச் சேர்ந்த மால்சிங் என்பவர் இறந்து விடுகிறார். அவருடைய உடலுக்குச் சிதை மூட்டப்படுகிறது. இறுதிச் சடங்கில் ஊர் பொதுமக்கள் கூடி நிற்கிறார்கள். இறந்த கணவனின் தலை, அவனது இளம் மனைவியின் மடியில் இருக்க சிதைக்கு தீ மூட்டப்படுகின்றது. பிணம் மட்டும் அந்தக் கோரத் தீயின் பசிக்கு இரையாகவில்லை. கொழுந்து விட்டு எரிந்த அந்த நெருப்பில் 18 வயது இளம் பெண் ரூப் கண்வாரும் சேர்ந்து எரிகின்றாள்.
தன்னைக் காப்பாற்றும்படி கதறிய கதறல், மவ்ட்டீக சிந்தனையில் ஊறிப் போன அந்த மக்களின் செவிட்டுக் காதுகளில் விழவில்லை. மறுமணம் புரிந்து மறு வாழ்வு காண வேண்டிய ஒரு மலர் குருட்டு நம்பிக்கையின் கோரத் தீயில் பலியாகிப் போகின்றாள். புத்திரிகைகள் இந்தக் காட்டுமிராண்டித்தனத்தைப் படம் பிடித்துக் காட்டின. பாரதீய ஜனதா கட்சி மட்டும் அப்போது இந்த அநியாயத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது.

உடன்கட்டை ஏறவில்லை என்றால், கணவனை இழந்த கைம்பெண் இப்படிச் சாகவில்லை என்றால், அவளைச் சாகடிப்பதற்குச் சமுதாயம் வேறொரு முறையைக் கையாளும்.
ஆண்களோ அல்லது திருமணம் முடித்த பெண்களோ பார்க்காதவாறு விதவைப் பெண் ஒரு கருப்புத் திரையில் மூடப்பட்ட, ஆட அசைய முடியாமல் சதுர வடிவில் அமைக்கப்பட்ட ஒரு தனியறையில் அடைக்கப்படுவாள்.
நாள் முழுவதும் தரையில் தான் உட்கார வேண்டும். அதுவும் தன் இரு முட்டுக்கால்களை நெஞ்சுக்கு நேராகக் கொண்டு வந்து குத்த வைத்து உட்கார வேண்டும். ஒரு வேளை மட்டும் உப்பில்லாத உணவு சாப்பிட வேண்டும். இதிலேயே அவள் மெலிந்து சாக வேண்டும். இதுவும் ராஜஸ்தானில் நடைபெறும் கொடுமையாகும்.
இவை விதவைப் பெண்கள் அனுபவிக்கும் விதவிதமான கொடுமைகள். ஏற்கனவே கணவனை இழந்து தவிக்கும் அவளுக்குச் சமுதாயம் ஆறுதல் வழங்குவதற்குப் பதிலாக, அரங்கேற்றும் அக்கிரமங்கள், இழைக்கும் அநியாயங்கள் இவை.
உடன் கட்டை ஏற்றி, உயிருடன் ஒரு பெண்ணைக் கொலை செய்யும் கொடுமை இந்திய நாட்டில் பார்ப்பனிய மதத்தில் உள்ள நடைமுறையாகும்.

சீனர்கள்:

பண்டைய கால சீனர்கள் பெண்களை விற்கவும், உயிரோடு எரிக்கவும் செய்தனர்.

யூதர்கள்:

 யூதர்கள் பெண்களை சாபத்துக்குரியவர்கள் என கருதினார்கள். ஏனெனில், அவள் ஆதம் (அலை) அவர்களை வழிகெடுத்து, தடுக்கப்பட்ட கனியை சாப்பிடச் செய்தாள் என்று எண்ணினர்.இச்சிந்தனைக்கு பைபிள்தான் காரணம். பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டால், வீட்டையும் பாத்திரங்களையும் அவள் தொட்டால் அசுத்தமாகி விடும் என்று கருதி ஒதுக்கி வைத்தனர்.

யூத மதத்தில் விதவையின் பரிதாப நிலை

யூத மதம் மிகவும் மோசமாகப் பெண்னை நோக்ககிறது. கணவனை இழந்த கைம்பெண்ணுக்குக் குழந்தை இல்லையெனில் அவள் கண்டிப்பாகக் கணவனின் தம்பியைத் திருமணம் முடித்தாக வேண்டும் என்று அந்த மதம் நிபந்தனை விதிக்கிறது. கணவனின் சந்ததி தழைப்பதற்காக இந்த ஏற்பாடு! இதை பைபிளின் பழைய ஏற்பாட்டில் பார்க்கக் கூடியதாக உள்ளது.
'அப்பொழுது யூதா ஓனானை நோக்கி: நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவனை மைத்துனச் சுதந்தரமாய்ப் படைத்து, உன் தமையனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான்.
ஆதியாகாமம் 38:8
இதில் வேடிக்கை என்னவெனில், இறந்தவனின் சகோதரனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தாலும் அவன் தன் அண்ணியைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும். விதவையான அந்தப் பெண்ணிடம் சம்மதம் கூடப் பெறப்படாது. காரணம், அவள் இறந்தவனின் மனைவியாக, ஒரு பெண்ணாக நடத்தப்படமாட்டாள். மாறாக, அவள் இறந்தவனின் சொத்தாகவே கருதப்படுவாள்.

அது மட்டுமன்றி விதவை களையும், விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களையும் யூத உயர் குலத்தோர் மற்றும் மத குருமார்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்றும் பழைய ஏற்பாடு தெரிவிக்கின்றது.
கன்னிகையாயிருக்கிற பெண்ணை அவன் விவாகம் பண்ண வேண்டும்.விதவையானாலும் தள்ளப்பட்டவளையானாலும் கற்பு குலைந்தவளையானாலும் வேசியையானாலும் விவாகம் பண்ணாமல், தன் ஜனங்களுக்குள்ளே ஒரு கன்னிகையை விவாகம் பண்ணக் கடவன்.
அவன் தன் வித்தைத் தன் ஜனங்களுக்குள்ளே பரிசுத்தக் குலைச்சலாக்காமல் இருப்பானாகளூ நான் அவனைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்.' லேவியராகமம் 21:13-15
இவ்வாறு யூத மதம் விதவைப் பெண்களுக்கு அநீதி இழைக்கிறதுளூ கொடுமையைக் கட்டவிழ்த்து விடுகின்றது.

கிறிஸ்தவர்கள்:

 கிறிஸ்தவர்கள் பெண்ணை ஷைத்தானின் 'ஏஜண்ட'; எனக் கருதினர். கிறிஸ்தவ பாதிரியொருவர், 'பெண் மனித இனத்தைச் சேராதவள்' எனக் கூறினார். செம்பூனா, பென்தாரா என்ற கிறிஸ்தவன் 'நீங்கள் பெண்களைக் கண்டால் அவளை மனித இனத்தைச் சார்ந்தவள் எனக் கருதி விடாதீர்கள். ஆவளை ஓர் உயிருள்ள ஜீவனாய்க் கூடக் கருதாதீர்கள். நிச்சியமாக நீங்கள் காண்பது ஷைத்தானின் உருவத்தைத் தான். இன்னும் நீங்கள் செவியேற்கும் சத்தம் பாம்பின் சீற்றம்தான்' என்றான்
.
அதேபோல் பைபிளின் உன்னதப்பாட்டு பெண்ணைக் கேவலப்படுத்தி, கள்ள உறவை ஆதரிக்கிறது. டொரண்டோவில் ஒரு கிறிஸ்தவன் பைபிளின் எசக்கியேல் என்ற அத்தியாயத்தை அச்சிட்டு விற்றான்.உடனே அவனை காவல் துறை மஞ்சல் பத்திரிகை வெளியட்டதாக கைது செய்தது. அவன் நீதி மன்றத்தில் இது எனது கைச்சரக்கல்ல.பைபிள் வாசகங்கள் என்றவுடன் நீதி மன்றம் வெட்கித் தலை குனிந்து அவனை விடுதலை செய்தது.

ஆங்கிலேயர்:

 19ம் நூற்றாண்டில் நடுப்பகுதி வரை ஆங்கிலேயர் பொதுச் சட்டப்படி பெண்கள் பிரஜா உரிமை கொடுக்கப்படாதவர்களாகவே இருந்தனர். இது போன்றே பெண்களுக்கு எந்தவித மனித உரிமைகளும் கிடைக்கவில்லை. அவள் அணியும் ஆடை உட்பட எந்தப் பொருளையும் சொந்தப்படுத்திக் கொள்ள உரிமை வழங்கப்படவில்லை.

ஸ்காட்லாந்துப் பாராளுமன்றம்:

 1567ம் ஆண்டு ஸ்காட்லாந்துப் பாராளுமன்றம் பெண்களுக்கு எந்த அதிகாரமும் கொடுக்கக் கூடாது என்று சட்டமியற்றியது. இவ்வாறே 8வது ஹென்றியின் காலத்தில் ஆங்கிலேயப் பாராளுமன்றம் பெண்கள் அசுத்தமான இருப்பதர் பிஞ்சிலே படிப்பது கூடாது என்று சட்டமியற்றியது.

பிரஞ்சு நாட்டவர்: 

பிரஞ்சு நாட்டவர் 1586ம் ஆண்டு பெண்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்களா இல்லையா என ஆய்வு செய்து முடிவெடுக்க ஒரு சபையை அமைத்தனர். 1805ம் ஆண்டு வரை ஆங்கிலேயரின் சட்டத்தில் ஒரு கணவன் தன் மனைவியை விற்பது கூடும் என்றே உள்ளது. மேலும், மனைவியின் விலையை 6 பென்ஷி, அரை ஷிலின் (ஆங்கிலேய நாணயத்தின் பெயர்) என்று நிர்ணயித்தார்கள். பெண்ணடிமைத்தனம் உலகம் முழுதும் இவ்வாறு கோலோச்சிக் கொண்டிருந்தது.

பெண்ணினம் மீதான அரேபிய ஆணாதிக்கம்

அரபுக்கள் திருமணம் என்ற பெயரால் விபச்சாரம் புரிந்து வந்தனர். நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அறிவிக்கும் பின்வரும் செய்தி அறியாமை சமூகத்தின் ஆணாதிக்கத்தை அப்பட்டமாக அடையாளப்படுத்தகிறது.
அறியாமைக் காலத்தில் நான்கு வகைத் திருமணங்கள் நடைபெற்றன.
அவை:

 முதல் வகை –
இன்று மக்களிடையே வழக்கிலுள்ள திருமணத்தைப் போன்றதாகும். ஒருவர் மற்றொருவரின் பொறுப்பிலுள்ள ஒரு பெண்ணையோ, அல்லது அவரின் மகளையோ பெண் பேசி 'மஹர்' (விவாக (மண)க் கொடை) கொடுத்து மணந்து கொள்வார்.

 இரண்டாம் வகை -
 ஒருவர் தம் மனைவியிடம், 'நீ உன் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்தவுடன் இன்ன பிரமுகருக்குத் தூதனுப்பி (அவர் மூலம் கருத்தரித்துக் கொள்வதற்காக) அவருடன் உடலுறவு கொள்ளக் கேட்டுக்கொள்!' என்று கூறிவிட்டு, அவளுடன் உடலுறவு கொள்ளாமல் அவளை விட்டு அந்தக் கணவர் விலகி இருப்பார். அவள் உடலுறவு கொள்ளக் கேட்டுக்கொண்ட அந்த மனிதர் மூலம் அவள் கருவுற்றிருப்பது தெரிகிறவரை கணவர் அவளை ஒருபோதும் தொடமாட்டார். அந்தப் பிரமுகர் மூலம் அவள் கருத்தரித்துவிட்டாளெனத் தெரியவந்தால், விரும்பும்போது அவளுடைய கணவர் அவளுடன் உடலுறவு கொள்வார். குலச் சிறப்புமிக்க குழந்தை பிறக்க வேண்டுமென்ற (அற்ப) ஆர்வத்தினாலேயே இப்படிச் செய்து வந்தனர். இந்தத் திருமணத்திற்கு 'நிகாஹுல் இஸ்திப்ளாஉ' (விரும்பிப் பெறும் உடலுறவுத் திருமணம்) என்று பெயர்.

மூன்றாம் வகை
பத்துப்பேருக்குக் குறைவான ஒரு குழுவினர் ஓரிடத்தில் ஒன்றுகூடி அவர்கள் அனைவரும் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். அவள் கருத்தரித்து பிரசவமாகி சில நாள்கள் கழியும்போது, அவர்கள் அனைவரையும் அவள் தம்மிடம் வரச் சொல்வாள். அவர்களில் எவரும் மறுக்க முடியாது. அனைவரும் அவளிடம் ஒன்று கூடுவார்கள். அப்போது அவர்களிடம், 'நீங்கள் செய்தது உங்களுக்கே தெரியும். (இப்போது) எனக்குக் குழந்தை பிறந்துவிட்டது', என்று கூறிவிட்டு (அவர்களில் ஒருவரை நோக்கி) 'இவன் உங்கள் மகன், இன்னாரே!', என்றே விரும்பிய ஒருவரின் பெயரை அவள் குறிப்பிடுவாள். அவ்வாறே குழந்தை அந்த நபரிடம் வழங்கப்படும்;. அவரால் அதனை மறுக்க முடியாது.

நான்காம் வகை
 அதிகமான ஆண்கள் (ஓரிடத்தில்) ஒன்று கூடி ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். தன்னிடம் வரும் யாரையும் அவள் தடுக்கமாட்டாள். இந்தப் பெண்கள் விலைமாதுகள் ஆவர். அவர்கள் தங்களின் வீட்டு வாசலில் பல அடையாளக் கொடிகளை நட்டு வைத்திருந்தனர். அவர்களை விரும்பியவர்கள் அங்கே செல்வார்கள். இந்தப் பெண்களில் ஒருத்திக்குக் கருத்தரித்து குழந்தை பிறந்தால், அவளுடன் உடலுறவு கொண்ட அனைவரும் அவளுக்காக ஒன்றுகூட்டப்படுவார்கள். அங்க அடையாளங்களை வைத்து தந்தை லி பிள்ளையைக் கண்டறியும் நிபுணர்களை அழைத்து வருவார்கள். தாம் (தந்தையெனக்) கருதிய ஒருவனுடன் அந்தக் குழந்தையை அந்த நிபுணர்கள் இணைத்துவிடுவார்கள். அந்தக் குழந்தை அந்தத் தந்தையிடம் சேர்க்கப்பட்டு 'அவரின் மகன்' என்று பெயர் சொல்லி அழைக்கப்பட்டு வந்தது. (அவன் தன் குழந்தையல்ல என்று) அவனால் மறுக்கமுடியாது.


தலாக் சொல்வதில் முறைகேடு 

ஆரம்ப மக்கள் தம் மனைவியை எவ்வளவு தடவை தலாக் விட விரும்பினார்களோ அத்தனை தடவை தலாக் கூறி வந்தனர். இத்தாவில் இருக்கும் போதே அவளை மீட்டிக்கொண்டால் அவள் அவளது மனைவியாக நீடிப்பாள். இவ்வாறு நூறு தடவை அலலது அதை விட அதிகமான தலாக் கூறினாலும் சரியே. அப்போது ஒரு மனிதர் தன் மனைவிடம், 'நீ என்னிடமிருந்து பிரிந்து செல்லும் விதமாக தலாக் கூறவும் மாட்டேன். உன்னோடு வாழவும் மாட்டேன்', என்றார். 'அது எப்படி முடியும்?', என்று அவரது மனைவி கேட்ட போது, 'உன்னை தலாக் விடுவேன் உன் இத்தா முடியும் தருவாயில் உன்னை மீட்டிக்கொள்கிறேன்', என்று அவர் கூறினார். உடனே அப்பென் ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்து இதை தெரிவித்தார்கள். நுபி(ஸல்) அவர்களும் மவுனமாக இருந்தார்கள். அப்போது பின் வரும் வசனம் இறங்கியது.

தலாக் என்பது இரண்டு தடவைதான். அதன் பிறகு நல்லமுறையில் மீட்டிக்கொள்ள வேண்டும் அல்லது நல்ல முறையில் விட்டு விட வேண்டும். இதன் பிறகு ஏற்கனவே தலாக் விட்டவர்களும் விடாதவர்களும் பழைய கணக்கை எடுத்துககொள்ளாமல் புதிதாக கணக்கு கொள்ளானார்கள்.
அறிவிப்பவர்: உர்வா (ரழி) (நூல் : திர்மிதி 1113)

பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்தனர்

'வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன்' என்று (முஹம்மதே!) கூறுவீராக! அது, 'நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது' என்பதே. பெற்றோருக்கு  உதவுங்கள்! வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள்! அல்லாஹ் தடை செய்துள்ளதால் எவரையும் (அதற்கான) உரிமை இருந்தால் தவிர கொல்லாதீர்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான். (திருக்குர்ஆன் 6: 151)

அரேபியாவில் அருதலிகளின் அவல நிலை

பண்டைய காலம் முதல் அரபியர்களிடம் விதவைகளை மணம் முடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. எனினும், அவர்கள் ஒரு கொடுமையை அரங்கேற்றி வந்தனர்.
சகோதரர்களின் மனைவிகளை சொத்துக்களைப் போல் பாவிப்பது யூதர்களின் நடைமுறை என்றால், அரபியர்கள் தங்கள் தந்தையரின் மனைவியரைச் சொத்தாகப் பாவித்து அவர்களைக் கட்டிக் கொள்வார்கள்.
இவ்வாறு விதவைகள் மற்றும் விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் விஷயத்தில் உலக மதங்கள் அனைத்தும் அநீதியையும், அக்கிரமத்தையும் இழைப்பதைப் பார்க்கிறோம். அல்குர்ஆன் இறங்கி அந்த அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்ளூ அறிந்தவன். (அல்குர்ஆன் 24:32)

கைவிடப்பட்ட கைம்பெண்களை திருமணம் முடித்து வைக்க இந்த வசனம் சொல்கிறது. யூத, கிறித்தவ, இந்து மதங்கள் போன்று விதவைகளையும், விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களையும் சாபக்கேடுகளாக, சமுதாயச் சுமைகளாக இஸ்லாம் கருதவில்லை.

கைம்பெண்களின் சம்மதம் கேட்காமலேயே அவளைக் கொழுந்தனுக்குக் கட்டி வைக்கும் பழக்கத்தை யூத மதம் கொண்டிருப்பதைக் கண்டோம். கணவனின் சொத்துக்களில் ஒன்றாக அவளையும் பாவிக்கும் பொழுது, அந்தப் பெண்ணிடம் எப்படி சம்மதம் கேட்கச் சொல்ல முடியும்?
இதோ இஸ்லாம் மார்க்கத்தின் இனிய தூதர், இது தொடர்பாக வழங்கும் உரிமை முழக்கத்தைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள், 'கன்னி கழிந்த பெண்ணை அவளது (வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒரு முறையில்) அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம்' என்று சொன்னார்கள். மக்கள், 'அல்லாஹ்வின் தூதரே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்து கொள்வது)?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், 'அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்)' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஹன்ஸா பின்த் கிதாம்(ரலி) நூல்: புகாரி 5136
எவ்வளவு பெரிய விடுதலை உணர்வை இஸ்லாம் வழங்குகிறது என்று பாருங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மணம் முடித்த பெண்களில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர மற்ற அனைவரும் விதவையர் தான் என்றால், விதவைகளின் மறு வாழ்வுக்கு இஸ்லாம் கொடுத்த முக்கியத்துவத்தையும், முன்னுரிமையையும் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

இறந்து விட்ட தந்தையின் மனைவியரை, தந்தையின் சொத்தாகப் பாவித்து, பிள்ளைகள் மணமுடிக்கும் இழிந்த வழக்கம் அரபியர்களிடம் இருந்ததைக் கண்டோம். இந்த இழிவான பழக்கத்தை அல்குர்ஆன், அரபியர்களிடமிருந்து அடியோடு வேரறுத்து எறிந்து விடுகின்றது.

'உங்கள் தந்தையர் மணமுடித்த பெண்களை மணக்காதீர்கள்! ஏற்கனவே நடந்து முடிந்ததைத் தவிர. இது வெட்கக்கேடானதும், வெறுப்புக்குரியதும், கெட்ட வழியுமாகும்.' (அல்குர்ஆன் 4:22)


மாதவிடாய்

மாதவிடாய் என்பது மாதந் தோறும் பெண்களுக்கு ஏற்படுகின்ற இயற்கைக் கூறாகும். கரு முட்டைகள் உடைந்து வெளிவரும் கழிவாகும்.
பெண்களுக்கு இவ்வாறு மாதவிடாய் ஏற்படும் போது மக்கள், அப்பெண்ணைத் தீண்டத் தகாதவளாகப் பார்க்கின்றனர். அவர்களைத் தீட்டுப்பட்டவர்கள் என்று சொல்வதுடன் நிறுத்திக் கொள்வதில்லை. வீட்டுக்குத் தூரமானவர்கள் என்றும் குறிப்பிட்டு, அவ்வாறே நடத்தவும் செய்கின்றனர். அப்படி ஓர் அருவருப்பான தோற்றத்தை மதங்கள் மக்களிடம் உருவாக்கி விட்டிருக்கின்றன.

யூத மதம் இதில் முன்னிலை வகிக்கின்றது.அதற்கான ஆதாரத்தை அவர்களின் வேதநூலே விவரிக்கிறது.
 'சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்ளூ அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப் பட்டிருப்பானாக.
அவள் விலக்கலாயிருக்கையில், எதின் மேல் படுத்துக் கொள்ளுகிறாளோ எதின் மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும்.
அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
அவள் உட்கார்ந்த மணையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
அவள் படுக்கையின் மேலாகிலும், அவள் உட்கார்ந்த மணையின் மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.'
லேவியராகமம் 15:19-23


யூத மதத்தின் கொள்கைகளை மையமாகக் கொண்டு அமைந்த பார்ப்பன மதத்தின் மனு தர்மமும் இது போன்றே குறிப்பிடுகின்றது.
சண்டாளன், விலக்கானவள், பிணம், பிணத்தைத் தொட்டவர் ஆகியவர்களைத் தொட்டால் நீராடுக! தீட்டுக்கு மாற்று என்ற தலைப்பின் கீழ் 111வது வசனத்தில் மனு தர்மம் இதைக் கூறுகின்றது.

இஸ்லாம் தான் இந்தக் கொடுமைகளைக் களைந்து எறிகின்றது. இது பற்றி திருக்குர்ஆன் கூறுகின்றது.

'மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். 'அது ஓர் தொல்லை. எனவே, மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 2:222)

இந்த வசனம் அருளப்பட்டதன் பின்னணியைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது.

யூதர்கள் தங்களுடைய இனத்தில் ஒரு பெண் மாதவிலக்காகிவிட்டால், அவளை வீட்டிலிருந்து வெளியேற்றி விடுவார்கள். அவளுடன் சேர்ந்து, அவர்கள் உண்ணவும், குளிக்கவும் மாட்டார்கள். எனவே, இதைப்பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது,

'மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். அது ஒரு தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்!'  (அல்குர்ஆன் 2:222)

என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கி அருளினான். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'வீடுகளில் அவர்களுடன் ஒன்று கலந்திருங்கள். உடலுறவைத் தவிர அனைத்தையும் செய்து கொள்ளுங்கள்' என்று கூறினார்கள். உடனே யூதர்கள், 'இவர் (நபி (ஸல்) அவர்கள்) நம்முடைய காரியத்தில் எதையுமே நமக்கு வேறுபாடு காட்டாமல் விட்டு வைப்பதில்லை' என்று பேசிக் கொண்டனர்.... அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 455, அபூதாவூத் 225


மாதவிடாய் பெண்களிடம் இல்லறத்தைத் தவிர மற்றவை அனைத்தும் ஆகும் என்று அறிவித்து, பெண்களின் மீது பூட்டப்பட்டிருந்த இரும்புச் சங்கிலிகளை இஸ்லாம் உடைத்தெறிகின்றது.

இப்படி இஸ்லாத்தை தவிர எல்லா மதங்களும், சமுதாயமும் பெண்களை இழிவாகவோ அல்லது பொருளாகவோ மட்டுமே பார்க்கிறது, இஸ்லாம் மட்டுமே பெண்களை உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்கிறது.

இஸ்லாம் எப்படி பெண்களை பெருமைப்படுத்துகிறது

1. எவர் ஒருவர் இரண்டு பெண்குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து திருமணம் செய்து கொடுக்கிறாரோ அவரும் நானும் சொர்க்கத்தில் நெருக்கமாக இருப்போம் என்று இரு விரல்களை காட்டினார்கள் நபி (ஸல்)

2. வயதுக்கு வந்த பெண் எல்லா வணக்க வழிபாடுகளையும் கட்டாயமாக செய்ய வேண்டும்.

3. மாதவிடாய் மற்றும் மகப்பேறு காலங்களில் தொழத்தேவை இல்லை, ஆனால் நோன்பை மற்ற நாட்களில் நோற்று பூர்த்தி செய்யவேண்டும்.

4. மணமகனை தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்ணுக்கு உண்டு, மணமாகப்போகும் பெண் ஒப்புதலோடுதான் திருமணம் நடக்கும்.

5. மணமுடிக்கப்போகும் ஆணிடம் மஹர் தொகையை கேட்டு பெற இஸ்லாம் வலியுறுத்துகிறது.

6. தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது.

7. ஒரு மனிதன் மிகவும் நேசிக்கக்கூடியராக அம்மா தான் இருக்கவேண்டும், பிறகு தான் அப்பா.

 8. கடமை அல்லாத தொழுகையின் போது அம்மா அழைத்தால் முறித்துவிட்டு போகவேண்டும்.



தாயைப்பற்றி இஸ்லாம் 

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.” அல் குர் ஆன் -31:13.

மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அல் குர் ஆன் -46:15.

எவருக்கு பெற்றோர்களில் இருவரோ அல்லது அவர்களில் ஒருவரோ  இருந்து,அவர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளவில்லையென்றால் அவர் நரகத்தில் நுழைவார்.மேலும்,அல்லாஹ் அவனைத் தனது அருளை விட்டு தூரமாக்கிவிடுவான்.தப்ரானீ-346....

ஆயிஷா ரலி அறிவிக்கிறார்கள்;-

நான் கேட்டேன்:இறைவனின் தூதரே!!!பெண் மீது யாருக்கு
                                  அதிகமான உரிமை இருக்கின்றது?”

அண்ணல் நபிகளார் கூறினார்கள்: அவளுடைய கணவனுக்கு’.

நான் கேட்டேன்: ஆண் மீது யாருக்கு அதிகமான உரிமை இருக்கின்றது?’’

அண்ணல் நபிகளார் விடையளித்தார்கள்;அவனுடைய தாய்க்கு’’
ஹாகிம்-7244


அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் 
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து,
இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'பிறகு, உன் தந்தை' என்றார்கள்.
புகாரி-5971.

அன்னையரைப் புண்படுத்தவது, (அடுத்தவருக்குத் தரவேண்டியதைத்) தர மறுப்பது, (அடுத்தவருக்கு உரியதைத்) தருமாறு கேட்பது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றை அல்லாஹ் தடை செய்துள்ளான். புகாரி-5975.

மனைவியை பற்றி இஸ்லாம் 

நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்;
உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
அல் குர்ஆன்- 30:21.

அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை; ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்.
அல்குர் ஆன் -4:19.

முஃமின்களே!) நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும், மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த சாத்தியமாகாது; ஆனால் (ஒரே மனைவியின் பக்கம்) முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில் தொங்க விடப்பட்டவள் போன்று ஆக்கிவிடாதீர்கள்; நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து சமாதானமாக நடந்து கொள்வீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.
அல் குர் ஆன் -4:129 

உங்களில் எவர் தம் மனைவியிடம் நல்லவராக 
இருக்கின்றாரோ அவர்தாம் உங்களில் நல்லவர். திர்மிதீ-1195.

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...