Sunday, November 25, 2018

இந்தியாவுக்கான இறைத்தூதர்கள் யார்?


இந்தியாவுக்கான இறைத்தூதர்கள் யார்?

உலகின் முதல் மனிதன் ஆதம் (அலை) தான் இஸ்லாத்தின் முதல் மனிதன், இஸ்லாம் தன வரலாற்றை துல்லியமாக பதிவு செய்துள்ளது, உலகின் முதல் மனிதன் யாரென்று அல்லது இந்து மதத்தின் முதல் மனிதன் யாரென்று ஒரு ஹிந்துவிடம் கேட்டால் அவருக்கு தெரியாது, காரணம் இந்து என்பது மதம் அல்ல, இன்று இந்துக்கள் என்று சொல்லக்கூடியவர் பின்பற்றும் வழிபாட்டுமுறை பார்ப்பனர்களின் வழிமுறையாகும், அதனால் தான் பல விடயங்கள் சமஸ்கிருதத்தில் உள்ளது. கிறிஸ்துவமும் யூத மதமும் ஆதமை (ஸல்) ஏற்றுக்கொள்கிறது.

குரானின் படி அல்லாஹ் உலகம் முழுமைக்கும் இறைத்தூதர்களை அனுப்பியுள்ளான், அப்படி என்றால் இந்தியாவுக்கான இறைத்தூதர் யார்?

இன்று அதிகமாக விவாதத்துக்கு உள்ளாகும் ராமர் பாலத்தை ஆங்கிலேயர்கள் ஆதம் பாலம் என்றே அழைத்தார்கள், ஆனால் இந்தியர்கள் அதை எதிர்க்கவில்லை, விக்கிபீடியா வில் கூட ராமன் (அல்லது) ஆதம் பாலம் என்றே பதிவு செய்யப்படுகிறது.




சேது சமுத்திர திட்டம் கூட ஷீத் (அலை) நபியின் பெயராக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

குரானும் பைபிளும் சொல்லும் நூஹ் (அலை) அவர்கள் காலத்து வெள்ளப்பெருக்கும், குமரிக்கண்டம் வெள்ளத்தில் மூழ்கியதும் ஒரே காலம் என்றால் இந்தியாவுக்கான நபிகள் ஆதம் (அலை), ஷீத் (அலை) மற்றும் நூஹ் (அலை) ஆகியோர்களாக இருக்கலாம், ஆக இந்தியர்கள் நபிமார்களை கடவுளின் அவதாரமாக நினைத்து வழிபடுகிறார்கள்.

Saturday, November 24, 2018

மக்களை எப்படி வகைப்படுத்தலாம்?

மக்களை எப்படி வகைப்படுத்தலாம்?

மக்களை 2 விதமாக வகைப்படுத்தலாம்.

1. இறைநம்பிக்கை உள்ளவர்கள் 
2. இறைநம்பிக்கை அற்றவர்கள்

இறைநம்பிக்கை உள்ளவர்களை - ஓரிறை கொள்கையாளர் மற்றும் பல கடவுள் கொள்கை உடையவர் என்று வகைப்படுத்தலாம்.

ஆக மக்களை பொதுவில் 3 விதமாக வகைப்படுத்தலாம்.



1. ஓரிறை கொள்கையாளர்கள். 
2. பல கடவுள் கொள்கை உடையவர்கள்.
3. இறைநம்பிக்கை அற்றவர்கள்.


கீழே ஒவ்வொன்றாக பார்ப்போம்

1. ஓரிறை கொள்கையாளர்கள்.

இவர்கள் ஒரு இறையை வணங்கக்கூடியவர்கள், இவர்களில் பெரும்பாலோர் சிலைவணக்கத்தை வெறுப்பார்கள். 

2. பல கடவுள் கொள்கை உடையவர்கள்.

இவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இறைவனை அல்லது ஆண் பெண் என்று கடவுளை பாலின அடிப்படையில் வணங்கக்கூடியவர்கள். இறைவன் மனித /மிருக அவதாரம் எடுத்து பூமிக்கு வந்து எதிரிகளை அழித்தார்கள் என்று நம்பக்கூடியவர்கள். இறைவன் எதற்கு மனித உருவத்திலும் மற்ற விலங்கு உருவத்திலும் பூமிக்கு வரவேண்டும் என்று கேட்டல் அதற்க்கான விடையை விளக்க தெரியாதவர்கள். தங்கள் கற்பனை மூலம் இறைவனை சிலைவடித்து இறைவனை கீழ்மைப்படுத்தக்கூடியவர்கள்

எப்படி இறைவனை கீழ்மைப்படுத்துகிறார்கள்?

கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்று சொல்லக்கூடிய இவர்களே இறைவனுக்கு சிலை வடிப்பார்கள்? இது அவர்கள் கொண்டுள்ள கருத்துக்கு முற்றிலும் எதிரானது, இருந்தாலும் செய்வார்கள். 

இறைவன் மனித / மிருக வடிவில் அவதாரம் எடுக்கும் போது, மனிதனின் ஆசா பாசங்களுக்கு அவர்களும் பணிய நேரிடும், இறைவன் என்பவன் உயர்ந்தவன், அவன் எப்படி மலத்தையும் மூத்திரத்தையும் சாதாரண மனிதன் போல சுமந்து கொண்டு திரிவான், பாலினம் என்பது இனப்பெருக்கத்திற்க்காக, அது எப்படி இறைவனுக்கு பொருந்தும், 

இறைவன் மணம்முடிக்கவேண்டிய அவசியம் என்ன? இந்த சாதாரண அறிவுக்கூட இல்லாமல் இறைவனை ஆண் என்றும் பெண் என்றும் சொல்லிக்கொண்டு குழப்பத்தை ஏற்படுத்தி இறைவனை சிறுமைப்படுத்துகிறார்கள்.

மேலும் காணமுடியாத ஒன்றுக்கு ஏதன் அடிப்படையும் உருவம் கொடுக்கிறீர்கள் என்றால் தெரியாது, ரிக் யஜுர் சாமம் அதர்வணம் என்று சொல்லக்கூடிய நான்கு வேதத்திலும் உருவ வழிபாடு இல்லையே, பிறகு எப்படி என்றாலும் தெரியாது. இவர்கள் சிந்தித்து செயல்படவேண்டும் என்பதே நமது கோரிக்கை.


1+1+1=1 ஆ 3 ஆ

வேறுசிலர் 1+1+1=1 என்பார்கள்

எப்படி என்றால் பிதா சுதன் பரிசுத்த ஆவி என்கிற மூன்றும் ஒன்று என்பார்கள், பைபிளில் ஏசுவுக்கு (ஏசு என்றால் தமிழில் திட்டுதல் என்று அர்த்தம், ஒரு இறைவனுக்கான பெயரா? இது என்று யாரும் கேட்பதில்லை, கேட்டாலும் பதில் இல்லை) இறைவனின் மகன் என்று இருக்கிறது என்பார்கள், பைபிள் எல்லா இறைதூதரியும் தான் இறைவனின் மகன் என்று கிறிப்பிடப்பட்டுள்ளது என்று சொன்னால், ஏசுவுக்கு அப்பா இல்லை என்பார்கள், ஏசுவுக்கு அப்பா மட்டும் தான் இல்லை, ஆதமுக்கு அம்மாவும் இல்லையே பிறகு என் அவரை இறைவன் என்று போற்றவில்லை என்றால் பதில் இல்லை, ஆக ஒன்றுக்கு மற்றொன்று முரணாக பேசி மக்களை வழிகெடுப்பதில் இவர்களை மிஞ்சமுடியாது.

3. இறைநம்பிக்கை அற்றவர்கள்


எல்லாம் அறிவியல் என்பார்கள், கடவுள் இல்லை என்பார்கள், இந்த உலகம் தானாக உண்டானது என்பார்கள், நீங்கள் வேலைக்கு போகவேண்டாம் தானாக உணவு வரும் என்றால் பசிக்கு பயந்துகொண்டு வேலைக்கு போவார்கள், இதுதான் இவர்களது நிலை. 

இதைவிட அதிகம் இவர்களை பற்றி பேசத்தேவை இல்லை என்று நினைக்கிறேன்.


மேலே உள்ள கருத்தின் மூலம் இறைவன் உண்டா இல்லையா? ஒன்றா? பலவா? என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.



Friday, November 23, 2018

உலகில் மதங்கள் உண்டா?

உலகில் மதங்கள் உண்டா?
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற திருமூலர் வாக்குக்கிணங்க உலகத்தில் தோன்றிய எல்லா இறைத்தூதர்களும் ஓரிறையைத்தான் போதித்தார்கள், காலப்போக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட கடவுளை, ஆண் பெண் கடவுளை மக்கள் படைத்தனர், கற்பனையில் தோன்றிய உருவத்தை கடவுள் என்று வணங்கினர்.
இங்கே இன்னொரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன், நமதூரில் இன்னொரு பழமொழி கூட சொல்வார்கள் விண்டவர் கண்டிலர் கண்டவர் விண்டிலர் அப்படின்னு, அதாவது உயிரோடு இருப்பவர்கள் இறைவனை காணமுடியாது என்பதுதான் இதன் பொருள். அப்படி இருக்க யார் இறைவனை கண்டது ? காணாதபோது எப்படி உருவம் வரையமுடியும்? இங்கேயும் நான் தமிழ்ப்பழமொழியைத்தான் மேற்கொள் காட்டி இருக்கேன், இஸ்லாத்தை அல்ல.

உலகில் முக்கியமான ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் மற்றும் யூத மதங்களை பற்றி பார்ப்போம்.
ஹிந்து என்பது பூகோள வரையரையே தவிர மதமல்ல, ரிக், யஜுர், சாமம் மற்றும் அதர்வண வேதங்களில் ஹிந்து என்பது மதம் என்று குறிப்பிடப்படவில்லை, மாறாக சிந்து சமவெளி நாகரீகத்தையே குறிக்கிறது, ஆக சீனாவில் வசிப்பவர் சீனர்கள் என்பதுபோல், இந்தியாவில் வசிப்பவர்கள் இந்துக்கள்.
இயேசு கிருஸ்து உயிரோடு இருக்கும் வரை கிறிஸ்துவம் என்ற மதம் இல்லை, இயேசு கிருஸ்து தன்னை கடவுள் என்று சொல்லவும் இல்லை, ஆக கிறிஸ்துவம் என்பது தவறான வாதமே. பைபிளில் எங்கேயும் கிருஸ்துவமதம் சொல்லப்படவில்லை.
அதே போல யூதர்களின் புனிதநூலான தோராவில், யூத மதம் என்று ஒன்று குறிப்பிடப்படவில்லை, அவர்கள் பல விஷயங்களில் கிருதுஸ்துவர்களோடும், முஸ்லீம்களோடும் ஒத்து போவார்கள்.
இஸ்லாம் என்பது மதமல்ல, அது இறைவனை அடையக்கூடிய மார்க்கம் என்றுதான் குரான் சொல்கிறது, யார் ஒருவன் இறைவனுக்கு கட்டுப்படுகிறானோ அவன் முஸ்லீம்.
முதலில் சொன்னது போல, இறைத்தூதர்களை மக்கள் கடவுளாக ஆக்கினார்கள், அதன் அடிப்படியில் ஹிந்து மதத்தில் பல இறைத்தூதர்களை கடவுளாக ஆக்கியுள்ளார், இதை புரிய நிறைய விளக்கம் தேவைப்படுகிறது, இங்கே நான் ரத்தினைசுருக்கமாய் சிலதை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
நான் அறிந்தவரை இஸ்லாம் சொல்லும் இறைதூதர்களே ஹிந்து மதத்தில் நம்பப்படும் அவதாரங்கள்.
அவதாரங்கள் ஏன் எதற்கு என்று கேட்டால் எந்த ஹிந்துவும் சரியாக பதில் சொல்லமாட்டார்கள் அல்லது தெரியாது, இங்கே ஒரு சிறிய கேள்வி, அவதாரமாக கடவுள் வரவேண்டிய நோக்கம் என்ன?
கடவுள் என்றால் மனிதனுக்கு மேலே ஒரு உயர்ந்தது, கடவுள் மனித உரு எடுத்தால் என்ன விபரீதம் ஏற்ப்படும்? நம்மைப்போல ஒன்றுக்கு இரண்டுக்கு போகவேண்டும், பசி கோபம் பழிவாங்குதல் போன்ற செயல்களை செய்யவேண்டி வரும், இந்த குணநலன்கள் இறைவனுக்கு கொடுத்து நம்மைப்போல் இறைவனின் புனிதத்தை பாழ்படுத்தலாமா?.
உதாரணமாக விநாயகர் சதுர்த்தியை எடுத்துக்கொள்ளுங்கள், விநாயகர் உருவான வரலாறை படியுங்கள், இது நடப்பதற்கு சாத்தியமா? ஒருவேளை கடவுளால் சாத்தியம் என்றால், பார்வதி குளிக்கச்செல்கிறார்கள், ஏன் குளிக்கவேண்டும், அசுத்தமடைந்தால் தானே குளிக்கவேண்டிவரும், நாமே கடவுளை அசுத்தமாவங்கன்னு சொல்வது சரியா?
மேலும் சதுர்த்தி முடிந்ததும் நீர்நிலைகளில் போடவேண்டிய காரணம் என்ன? எந்த ஹிந்துவுக்காவது தெரியுமா? அதே போல் எல்லா விசேஷத்தின் நாட்களும் சமஸ்கிருதத்தில் வரும், இதிலிருந்து தெரிவது என்னவென்றால், பார்ப்பனர்கள் மக்களை அடிமைப்படுத்தி கட்டுக்கதைகளை கடவுளின் பெயரில் இட்டுக்கட்டி நம்பவைத்துள்ளனர்.
இதனால் அவர்கள் சுகபோகமாக வாழ்வார்கள், எனக்கு தெரிந்து பல வேண்டுதல்கள் தீமிதிப்பது, அலகு குத்துவது பெரும்பாலும் பிராமணர் அல்லாத மக்கள்தான் செய்கிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்கு வந்து உருவமற்ற வழிபாட்டை செய்துகொண்டிருந்த மக்களை அடிமைப்படுத்தி, கடவுளின் பெயரில் கட்டுக்கதைகளை சொல்லி அவர்கள் சுகபோகமாக வாழ்ந்தனர். இன்று அதை மக்களிடம் பிரச்சாரம் மூலம் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். எல்லா சாதியினரையும் ஹிந்துக்கள் என்று சொல்லிக்கொண்டே ஒரு சாராரை கோவிலுக்குள் விடுவதில்லை.

ஆக உலகில் மதங்கள் இல்லை, மனிதர்கள் தான் தன சுய லாபத்திற்காக மக்களை மதங்களை கூறுபோட்டு கேவலப்படுத்துகிறார்கள்.

Thursday, November 22, 2018

மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கம்

மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கம்

இறைவன் மனிதனை தன்னை அறிந்து வணங்குவதற்காகத்த்தான் படைத்தான், ஆனால் இன்றோ மனிதர்கள் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று தான்தோன்றித்தனமாக வாழ்கிறார்கள். யார் இறைவன், இறைவனை எப்படி அறிவது? அவனின் சக்தி என்ன? எப்படி வணங்குவது என்று அறியாமல் உலக ஆசாபாசங்களில் மூழ்கி வாழ்கின்றனர்.

இறைவனை முறைப்படி அறியவேண்டும், அதைவிட முக்கியம் இறைவனுக்கு எதிரான விஷயங்களை அறிந்து எப்படி அதில் இருந்து விலகுவது, எப்படி இறைவனை அடைவது என்று பயிலவேண்டும்.

உலகமக்கள் அனைவரும் விருப்பு வெறுப்பு இல்லாமல், எல்லா மதங்களையும் ஆராய்ந்து எந்த வழி சரியானது என்று தெளிவுபெற்று வெற்றியடைய வாழ்த்துகிறேன் 

அல்லாஹ் என்பது அரபிக்கடவுளா?

வார்த்தைகள்
அல்லாஹ் - அரபி வார்த்தை இறைவனை குறிக்கக்கூடியது
ஹுதா -  உருது வார்த்தை இறைவனை குறிக்கக்கூடியது
பகவான் - ஹிந்தி வார்த்தை இறைவனை குறிக்கக்கூடியது
இறைவன் - தமிழ் வார்த்தை இறைவனை குறிக்கக்கூடியது
GOD  - ஆங்கில வார்த்தை இறைவனை குறிக்கக்கூடியது.

இதில் மற்ற மொழியில் இல்லாத சிறப்பம்சம் அரபிக்கு உண்டு, மற்ற மொழிகளில் இறைவனை ஒருமையில் சொல்ல வார்த்தை இருந்தாலும், பன்மையில் சொல்லவும் முடியும், ஆனால் அல்லாஹ் என்ற வார்த்தையில் அது முடியாது. உதாரணமாக GOD என்ற ஆங்கில வார்த்தையில் DESS என்று சேர்த்தால் பெண் கடவுள் ஆகிவிடும், S மட்டும் சேர்த்தால் கடவுள்கள் ஆகிவிடும்,

அதே போல் இறைவனை இறைவி என்றும் இறைவன்கள் என்றும் ஆக்கமுடியும், ஆனால் அரபியில் அல்லாஹ் என்ற வார்த்தையை அப்படி ஆக்கமுடியாது, அதனால் தானோ இறைவன் அரபி மொழியை குரானுக்காக தேர்ந்தெடுத்திருக்கலாம்.

ஆக மொத்தத்தில் அல்லாஹ் என்ற கடவுள் அரேபியருக்கான கடவுள் இல்லை, மாறாக உலக மக்களின் கடவுள், வார்த்தை மட்டுமே அரபி.

Blogger ன் நோக்கம்

இறைவன் அருளால் இந்த ப்ளாக்ஸ்பாட்டை ஆரம்பிக்கிறேன், இதில் உண்மையான கருத்துக்களை எழுதலாம் என்று நினைக்கிறேன், உங்கள் நீதமான ஆலோசனைகளை எதிர்ப்பார்க்கிறேன். கருத்துக்களும் பின்னூட்டமும் நீதமாகவும், தனிமனித தாக்குதல் இல்லாமலும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் 

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...