Thursday, March 25, 2021

லட்சத்தீவில் இஸ்லாமிய கலாச்சாரத்தை அழிக்க நினைக்கும் பாசிச அரசு - SDPI கண்டனம்

புது தில்லி, மார்ச் 1, 2021: நாட்டின் மேற்குப் பகுதியில் அமைதியான தீவுக்கூட்டமான லட்சத்தீவை மற்றொரு காஷ்மீராக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்துத்துவ சித்தாந்தத் தலைமையிலான மத்திய அரசும் தீவுகளில் அதன் கைப்பாவை நிர்வாகியும் அண்மையில் எடுத்த நடவடிக்கைகள் 96% க்கும் அதிகமான முஸ்லிம்கள் வசிக்கும் தீவுகளின் கலாச்சார அடையாளத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நோக்கம் கொண்டவை, அவை மிகவும் கண்டிக்கத்தக்கவை என்று இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (எஸ்.டி.பி.ஐ) தேசியத் தலைவர் எம்.கே.பைஸி கூறினார். அழிவுகரமான நடனடிக்கைகளான மதுபான அனுமதி வழங்குதல், கூண்டா சட்டத்தை அறிமுகப்படுத்துதல், லட்சத்தீவுகளுக்கு செல்லும் சரக்கு கப்பல் துறைமுகத்தை கேரளாவின் பெய்பூரிலிருந்து கர்நாடகாவில் மங்களூருக்கு மாற்றுதல், சுற்றுலாத் துறையில் உள்ள தற்காலிக ஊழியர்களையும் பள்ளிகளில் சமையல் வேலைகளைச் செய்பவர்களையும் பணிநீக்கம் செய்யுதல், மற்றும் பசுவதை தடை சட்டத்தை கொண்டுவருதல் போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுக்கிறது. லட்சத்தீவு என்பது மதுவிலக்கு நடைமுறையில் உள்ள ஒரு பகுதி, இந்த தடையை தளர்த்துவதன் மூலம், அதிகாரிகள் தீவில் குடிப்பழக்கத்தை ஊக்குவிக்கின்றனர். எந்தவொரு குற்றச் செயல்களும் இல்லாத தீவுகளாக புகழ்பெற்றது லட்சத்தீவு, மேலும் CAA எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற முஸ்லிம்களை குறி வைக்கவும், பாசிஸ்டுகளின் சட்டவிரோத நடவடிக்கைகளில் கருத்து வேறுபாடு கொண்டவர்களை அச்சுறுத்துவதற்கும் மவுனமாக்குவதற்கும் குற்றவாளிகளை ஒரு வருடம் வரை விசாரணையின்றி காவலில் வைக்க அனுமதிக்கும் கூண்டா சட்டத்தை அறிமுகப்படுத்தும் திட்டத்தை பாசிச அரசு செயல்படுத்த முயல்கிறது. லட்சத்தீவு பல நூற்றாண்டுகளாக கேரளா மற்றும் கேரளா கடற்கரைகளுடன் தொடர்பு கொண்டுள்ளது, மேலும், லட்சத்தீவு மற்றும் பிரதான நிலப்பகுதிக்கு பயணிகள் பயணம் மற்றும் சரக்கு போக்குவரத்து மேற்கொண்டு வருகிறார்கள். பழங்காலத்திலிருந்து கேரளாவின் பேபூரில் துறைமுகத்தின் மூலம் கேரளா மற்றும் லட்சத்தீவு வாசிகள் நல்ல உறவில் இருந்து வருகிறார்கள். கேரளாவுடனான இந்த உறவை சீர்குலைக்கவும், குஜராத்தை தளமாகக் கொண்ட சரக்கு நிறுவனங்களுக்கு உதவவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது, கர்நாடகாவில் ஆளும் பாசிச பிஜேபி அரசு சரக்கு போக்குவரத்து துறைமுகத்தை லட்சத்தீப்புக்கு பேப்பூரிலிருந்து மங்களூருக்கு மாற்றுவதன் மூலம் கேரளா மற்றும் லட்ச்சத்தீவின் ஒற்றுமையை குலைக்கவிரும்புகிறது. தற்காலிக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நோக்கம் தீவுகளில் வேலையின்மை மற்றும் அமைதியின்மையை உருவாக்குவதும், அடுத்தடுத்த சூழ்நிலையை அரசியல் ரீதியாக சுரண்டுவதும் ஆகும். பசு வழிபாட்டாளர்கள் இல்லாத இடங்களில் பசு வதைக்கு தடை என்பது மக்களைத் தூண்டிவிடுவதற்கான ஒரு முயற்சியாகும். பல நூற்றாண்டுகளாக கேள்விப்படாத இந்த நகர்வுகள் அனைத்தும் நாட்டில் முஸ்லிம் சமூகத்தை இழிவு மற்றும் அந்நியப்படுத்தவும் பிஜேபி அரசு முயற்சிக்கிறது. இது அப்பட்டமான ஆர் எஸ் எஸ் இந்த செயல்பாடுகளின் ஒன்றாகும். அதிக முஸ்லீம் மக்கள் தொகையை கொண்ட காஷ்மீரை முற்றிலுமாக அழித்த பின்னர் அடுத்த இலக்காக முஸ்லிம் பெரும்பான்மை யாக உள்ள லட்சத்தீவு தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை. ஒப்பீட்டளவில் அதிக முஸ்லீம் மக்கள்தொகை கொண்ட மாநிலமான அசாமில் உள்ள என்.ஆர்.சி., முஸ்லிம்களை துன்புறுத்துவதையும் கொடுமைப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது. ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதியான கோல்வால்கர் நினைத்தபடி, மற்ற மத நம்பிக்கைகள், முதன்மையாக இஸ்லாம் இல்லாத இந்து ராஷ்டிராவை ஸ்தாபிப்பதற்கான அவர்களின் நிகழ்ச்சி நிரலை விரைவுபடுத்துவதற்காக சங்கி அரசாங்கம் நாட்டின் மதச்சார்பற்ற தன்மையையும் வகுப்புவாத நல்லிணக்கத்தையும் முறையாக அழித்து வருகிறது. பாசிசத்தைத் தோற்கடிப்பதற்காக, நாட்டை நேசிக்கும் மக்களிடமிருந்தும், நாட்டைப் பார்க்க விரும்பும் மக்களிடமிருந்தும் வலுவான மற்றும் உறுதியான எதிர்ப்பு எழ வேண்டும். https://sdpi.in/resist-bjp-agenda-to-repeat-kashmir-in-lakshadweep-sdpi

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...