Saturday, May 15, 2021

மாநிலத்திலும் மத்தியிலும் சட்டங்கள் எப்படி இயற்றப்படுகின்றன?

சட்டம் இயற்றப்படும் முறையை அறியும் முன் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தின் அவைகளை பற்றி தெரிந்துகொள்வோம்.

நாடாளுமன்றம்

மேலவை கீழவை என்று இரு அவைகள் உள்ளன.

மேலவை : நாடாளுமன்றத்தில் உள்ள இருஅவைகளில் ஒன்று மேலவை, மாநிலங்கள் அவை அல்லது ராஜ்ய சபா என்ற பெயரும் இதற்க்கு உண்டு. இந்த அவையின் (MP) உறுப்பினர்களின் எண்ணிக்கை 250. பதவிக்காலம் 6  ஆண்டுகள். இவர்களை மாநிலங்களில் உறுப்பினர்களான MLA க்கள் தேர்ந்தெடுப்பார்கள். 

கீழவை : நாடாளுமன்றத்தின் மற்றொரு அவை கீழவை, இதன் மொத்த (MP ) உறுப்பினர்கள் 552. இவர்களை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுப்பார்கள். இதை லோக் சபா என்றும் அழைக்கலாம்.

சட்டமன்றம்: 

ஒன்றிய அரசு செயல்பட சட்டமியற்ற நாடாளுமன்றம் இருப்பது போல, ஒவ்வொரு மாநில அரசும் செயல்பட மாநில சட்டமன்றங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் 22 மாநிலங்களின் சட்டமன்றம் ஒரு அவையை மட்டும் கொண்டது, மற்ற 6 மாநிலங்களில் இரண்டு அவைகள் உள்ளன. 

ஆந்திரபிரதேஷ் , பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் உத்தரபிரதேஷ் ஆகிய ஆறு மாநிலங்களின் சட்டமன்றத்தில் இரண்டு அவைகள் உள்ளன. 

Legislative Assembly (Vidhan Sabha) - சட்டமன்ற கீழவை - தேர்தல் மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள். 

Legislative Council (Vidhan Parishad) - மாநிலச் சட்டமன்ற மேலவை. இது ஒரு நிரந்தர மன்றமாகும், ஆட்சிக் கலைப்பினால் இந்த மன்றம் கலைக்கப்படுவதில்லை. இதன் உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 வருடங்கள் இதல் மூன்றில் 1 பங்கு உறுப்பினர்கள் ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இம்மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கீழவை சட்டமன்றங்களின் அல்லது கீழவை சட்டப் பேரவைகளில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கையை மிகாமல் இருக்கை இருக்கவேண்டும்.

இந்திய மாநிலங்களவையைப் போன்று இங்கும் சட்டப் பேரவை கீழவையில் முன் மொழிந்த மசோதா, தீர்மானங்கள் மற்றும் திட்டங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு விவாதிக்கவும், விமர்சிக்கவும் படுகின்றன. அரசின் செயல்பாடுகள் விமர்சிக்கவும் படுகின்றன. மேலவை தன்னிச்சையாக சட்டங்களை இயற்றும் உரிமை கிடையாது. கீழவையால் நிறைவேற்றப்பட்ட சட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் உரிமை மட்டுமே அளிக்கப்பட்டிருந்தது. இரு அவைகளுக்கும் முரண்பாடு ஏற்படும் போது கீழவையின் முடிவே இறுதியானதாக ஏற்றுக்கொள்ளப்படும்.

சட்டம் இயற்றும் முறை 

மாநிலமாக இருந்தாலும் ஒன்றிய அரசாக இருந்தாலும் சட்டம் இயற்றும் முறை ஒன்றுதான். 

ஒன்றிய அரசு சட்டமியற்றும் முறை 

புதிய சட்டத்தை உருவாக்க அல்லது திருத்தம் செய்ய துறை அமைச்சரோ அல்லது தனி MP  யோ வரைவை கொடுக்கலாம். துறை அமைச்சர் செய்வதை பொது சட்டம் என்றும் தனி ஒரு MP செய்வதை தனி சட்டம் அல்லது தனி நபர் மசோதா என்றும் சொல்லலாம். 

சட்டம் இயற்றி ஒப்புதல் பெரும் வரை மூன்று கட்டமாக நடக்கும்.

முதல் கட்டம் : கீழவையில் துறை அமைச்சரோ அல்லது தனி ஒரு MP யோ சட்டத்தின் வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்.

இரண்டாம் கட்டம்: சட்டம் பற்றி விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும். மொன்றில் இரண்டு மடங்கு MP க்கள் வாக்கு செலுத்தும் போது அது மேலவையின் ஒப்புதலுக்கு போகும், அங்கும் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடக்கும். அந்த அவையில் ஏற்றுக்கொள்ளப்படும் போது அது மூன்றாவது கட்டமான ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

மூன்றாவது கட்டம்: இரண்டு அவையிலும் ஒப்புதல்பெறப்பட்ட சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அல்லது மறுபரிசீலனைக்கு பிறகு சட்டமாக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்படும்.


சட்டமன்றத்தில் / மாநிலங்களில் சட்டம் இயற்றும் முறை:

ஆறு மாநிலங்களில் நாடாளுமன்றத்தில் நடந்தது போன்று நடக்கும், பிறகு அது ஆளுநர் மற்றும் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு சட்டமாகும், மற்ற மாநிலங்களில் ஒரே ஒரு அவை இருப்பதால், பெரும்பான்மை வாக்கெடுப்புக்கு பிறகு ஆளுநர் மற்றும் குடியரசு தலைவரின் ஒப்புதலோடு சட்டமாகும். 

ஆனால் மாநில அரசு இயற்றும் சட்டத்தை உடனே நடைமுறைப்படுத்தாமல் முட்டுக்கட்டை போட மத்திய அரசு முயலும், அதற்க்கு வழிவகை செய்யும் படியாகத்தான் நம் நாட்டின் சட்டங்கள் இருக்கிறது. 

மாநில அரசு இயற்றும் சட்டங்கள் குறித்து முடிவெடுப்பதில் ஆளுநர்களுக்கு நான்கு விதமாக அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. 

1. அச்சட்ட வரைவுக்கு ஒப்புதல் அளிக்கலாம். 

2. விளக்கம் கேட்டு மாநில அரசுக்கு அனுப்பலாம். 

3. குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு அனுப்பிவைக்கலாம். 

4 . மறுபரிசீலனை செய்யச் சொல்லி சட்டத்தைத் திருப்பியனுப்பலாம்.

விளக்கம் கேட்டு அனுப்பிவைக்கும்போது சில திருத்தங்களுடன் அந்தச் சட்ட வரைவு ஏற்றுக்கொள்ளப்பட வாய்ப்புள்ளது. குடியரசுத் தலைவரின் கருத்து கேட்டு அனுப்பிவைப்பது காலதாமதப்படுத்துவதற்கான சட்டரீதியான ஒரு வாய்ப்பு. ஒப்புதலுக்கான காத்திருப்புக் காலத்தில் சட்டத்தைத் திருப்பியனுப்புவது என்பது சட்டரீதியில் அந்தச் சட்ட வரைவு இறந்துவிட்டது என்பதையே குறிக்கும். மீண்டும் ஒரு முறை அது ஆளுநருக்குப் புதிதாகவே அனுப்பப்பட வேண்டும். ஆளுநரின் இந்தத் தன்விருப்புரிமை அதிகாரம் கேள்விக்கு உட்பட்டது அல்ல.

சில எடுத்துக்காட்டுகள்:

1. கடந்த பிப்ரவரி 26 (26-02-2021) அன்று தேர்தல் அறிவிக்கப்படுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்னதாக அவசரம் அவசரமாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்தினருக்குத் தற்காலிகமாக 10.5% உள் இடஒதுக்கீட்டுக்கு வகைசெய்யும் அந்தச் சட்ட வரைவுக்கு அடுத்த இரண்டாவது நாளிலேயே ஆளுநர் ஒப்புதல் அளித்து, அதே நாளில் அரசிதழிலும் வெளியாகிவிட்டது. இந்த சட்டத்தின் நோக்கம் தேர்தல் அரசியலுக்கானது என்ற விமர்சனத்தை ஒதுக்கிவைத்துவிட்டுப் பார்த்தால், ஆளுநர் ஒப்புதல் அளிக்கத் தயாராக இருந்தால் மாநிலச் சட்டமன்றங்கள் எந்தவொரு சட்டத்தையும் ஒருசில மணி நேரங்களில் இயற்றி நடைமுறைப்படுத்திவிட முடியும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

2. நான்கு மாதங்களுக்கு முந்தைய நிகழ்வொன்றையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் அவ்வளவு எளிதில் ஒப்புதல் அளித்துவிடவில்லை. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக எதிர்க்கட்சி ஆளுநரை வலியுறுத்தியபோதும் பயனில்லை. ஒன்றரை மாத இழுத்தடிப்புக்குப் பிறகு நிர்வாகரீதியில் அந்த முடிவைச் செயல்படுத்துவதற்கு அரசாணை வெளியானது. உடனே, ஆளுநரிடமிருந்து ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தாமதங்கள்

1. குடியரசுத் தலைவரின் கருத்து கேட்டு அனுப்பப்பட்ட சட்ட வரைவுகளுக்கு உடனடியாக அவர் ஒப்புதல் அளிக்கலாம் அல்லது நிறுத்திவைக்கலாம். குறிப்புகளுடன் மீண்டும் திருப்பியனுப்பவும் செய்யலாம். குடியரசுத் தலைவரால் அவ்வாறு திருப்பியனுப்பப்பட்ட சட்ட வரைவுகளை ஆறு மாத காலத்துக்குள் மாநில சட்டமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு, புதிய சட்ட வரைவை நிறைவேற்ற வேண்டும். இந்தக் கால வரையறை என்பது சட்டமன்றங்களுக்குத்தானேயொழிய ஆளுநருக்கோ அல்லது குடியரசுத் தலைவருக்கோ அல்ல. மறுமுறை இயற்றப்பட்ட சட்ட வரைவுகளுக்கான ஒப்புதல்களுக்கும்கூட இதே வழியில் தாமதங்கள் நேரலாம்.

2. பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தபோது தமது கருத்து கேட்டு ஆளுநர்களிடமிருந்து வந்த சட்ட வரைவுகளில் சுமார் 80% வரைவுகளுக்கு அனுமதியளித்தார். ஒப்புதலை நிறுத்திவைத்துக்கொண்டது 10%, குறிப்புகளுடன் திருப்பியனுப்பியதும் உண்டு. பிரணாப் முகர்ஜியின் காலத்தில் அவ்வாறு கருத்து கேட்டு அனுப்பப்பட்ட மாநிலங்களில் முதலிடம் வகித்தது மஹாராஷ்டிரம், இரண்டாவது கர்நாடகம், மூன்றாவது தமிழ்நாடு. ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருக்கும் டெல்லியிலிருந்து அனுப்பப்பட்ட சட்ட வரைவுகள் எதுவுமே குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற முடியாமல் போனது.

3. சட்ட வரைவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர்கள் விளக்கங்கள் கேட்டு அனுப்புவது அவ்வப்போது நடப்பதுண்டு. தங்களது விருப்புரிமை அதிகாரத்தைப் பயன்படுத்தித் திருப்பியனுப்புவது வழக்கமில்லை என்றாலும், அதுவும்கூட நடக்கத்தான் செய்கிறது. கடந்த 2018-ல் கேரளத்தில் தொழிற்கல்வி கல்லூரிகள் (மருத்துவக் கல்லூரி சேர்க்கைகளை வரன்முறைப்படுத்துதல்) சட்டத்தை ஆளுநர் தன்னுடைய விருப்புரிமை அதிகாரத்தைப் பயன்படுத்தித் திருப்பியனுப்பிவிட்டார்.


அவசரச் சட்டம்

இந்த நேரத்தில் தமிழகம் தழுவிய அளவில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டமும் அதையொட்டி பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டமும் நினைவுக்கு வந்தால் மகிழ்ச்சி. ஒன்றிய அரசின் மிருக வதைத் தடுப்புச் சட்டத்துக்கு மாநில அளவில் கொண்டுவரப்பட்ட திருத்தத்துக்கு உடனடியாக ஆளுநரும் குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்தனர். ஆனால், அதற்காக அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் முகாமிட்டு, பிரதமரின் ஆதரவையும் உள் துறை அமைச்சகத்தின் ஆதரவையும் பெற வேண்டியிருந்தது. 2014-ம் ஆண்டிலேயே இத்தகைய அவசரச் சட்டம் ஒன்றுக்கான முயற்சிகள் நடந்தாலும் அதற்கு குடியரசுத் தலைவரிடமிருந்து ஒப்புதல் கிடைக்கவில்லை என்பதையும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அப்போது நினைவுபடுத்தினார்.


ஆக என்னதான் மாநிலங்கள் தனக்கான சட்டங்களை இயற்றினாலும், ஒன்றிய அரசின் அனுமதி இல்லாமல் சட்டங்களை நடைமுறைப்படுத்தமுடியாது, அதுபோல மாநில பட்டியலில் உள்ள விடயத்தில் மட்டும் தான் மாநிலங்கள் சட்டங்களை இயற்றமுடியும். 

Reference : சட்டமியற்றும் அதிகாரம் எதுவரை? | power of cm - hindutamil.in

Thursday, May 13, 2021

தமிழ்நாட்டில் மதுவிலக்கு சாத்தியமா?

மது நல்லதா? 

தவறான வழியில் கிடைக்கும் பொருளாதாரத்தால் கெடுதல் அதிகம் என்பதற்கு சரியான உதாரணம் மதுமூலம் கிடைக்கும் வருமானம். மதுவை வள்ளுவர் கூடவே கூடாது என்கிறார், மதுவை குடிப்பது விஷத்தை குடிப்பதற்கு சமம். 

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்ளுண் பவர். (திருக்குறள் 926)

 என்று மது அருந்துபவருக்கும் நஞ்சு அருந்துபவருக்கும் வேறுபாடில்லை என்கிறார்  திருவள்ளுவர்.

அரசே குடிமக்களைக் குடிகார மக்களாக்கி நாளும் நஞ்சுஊட்டுவது கொடுமையினும் கொடுமையன்றோ! இக்கொடுமையை ஒழிக்க மன்பதை ஆர்வலர்களும் மக்களும் சில கட்சிகளும் பல அமைப்பினரும் போராடி வருகின்றனர். ஆனால், மது ஒழிப்புப் போராளிகளை மடியச் செய்யும் அரசு நாடகமாடுகிறது.

2:219. (நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது” (நபியே! “தர்மத்திற்காக) எதைச் செலவு செய்ய வேண்டும்” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர் “(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்” என்று கூறுவீராக; நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) இவ்வாறு விவரிக்கின்றான்.

தீய குணங்கள் அனைத்திற்கும் மதுப்பழக்கம் தான் வழிகாட்டி என்று எடுத்துரைப்பதுடன் மதுபானம் அருந்தக்கூடாது எனவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன

மது எல்லா தீமைக்கும் ஆணிவேர் - முஹம்மது நபி (ஸல்)

இப்படி எல்லா வேதங்களும் அறிவியலும் மதுவை கூடாது என்கிறது, ஆனால் தமிழக அரசோ மதுமூலம் மக்களை யோசிக்கவிடாமல் செய்து பணம் ஈட்டுகிறது. 

தமிழக அரசின் மொத்த பட்ஜெட் 2020 ல் 20,54,000 கோடிகள், மதுமூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானம் 31,000  கோடிகள். ஆக 15%  பட்ஜெட் பணம் மதுமூலம் தமிழக அரசுக்கு வருகிறது. மதுவினால் தமிழகம் அடையும் நன்மையை விட தீமையே அதிகம், ஏதோ சில அதிகார வர்க்கத்தினர் பலனடைய தமிழக மக்களை மதுவுக்கு அடிமையாக்குகிறது இந்த அரசுகள்.   

தமிழகத்தில் மதுவிலக்கின் வரலாறு.

1. 1937 ஆம் ஆண்டு அது. காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் ஒன்றாக இருந்த மதுவிலக்கின் மீது பற்றுக் கொண்டிருந்தார் அப்போதைய சென்னை மாகாண முதலமைச்சர் ராஜாஜி. முதல்கட்டமாக திருச்செங்கோட்டை சுற்றியுள்ள 31 கடைகளில் மட்டும் முதலில் மதுவிலக்கை அமல்படுத்தி அதற்குக் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மற்ற பகுதிகளுக்கு நீட்டிப்பதை பற்றி யோசிக்கலாம் என்று பரிந்துரைத்தார். அது அமலுக்கு வந்தது, அடுத்து (இப்போதைய நாமக்கல் மாவட்டத்தின் ராசிபுரம் பகுதியில் ) 22 மதுக்கடைகள் மூடப்பட்டன. மேலும், சேலம், சித்தூர், கடப்பா, வட ஆற்காடு ஆகிய பகுதிகளிலும் மதுவிலக்கை அமல்படுத்தினார்.ஆனால், அண்டைப் பகுதிகளில் இயங்கிக்கொண்டிருந்த மதுக்கடைகளாலும், அதிகரித்த கள்ளச் சாராயப் பிரச்சினகளாலும் இந்த மதுவிலக்கைக் கைவிட நேர்ந்தது. எப்படியானாலும், இந்தியாவில் முதன்முறையாக அமல்படுத்தப்பட்ட மதுவிலக்கு இது என்பது கவனிக்கத்தக்கது.


2. இதனைத் தொடர்ந்து 1948ஆம் ஆண்டுதான் அடுத்த மதுவிலக்குக்கான நேரம் வந்தது. இது மதுவிலக்கின் பொற்காலம் என்றும் இதுதான் பூரண மதுவிலக்கு என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர். காரணம், ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 23 ஆண்டுகள் இந்த மதுவிலக்கு அமலில் இருந்தது. 1948 முதல் 1971 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் மதுவிலக்கு அமலில் இருந்தது. இதனைச் செயல்படுத்தியவர் 1948ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்.

3. அதற்குப் பிறகு, 1971 முதல் 74, 1983 முதல் 87, 1990 முதல் 91 ஆகிய சிறு சிறு கால இடைவெளிகளில் மதுவிலக்கு அமலில் இருந்தது. ஆனால், மதுக் ‘குடி’மக்கள் இதை ஏற்றுக்கொள்வதில் சிக்கல்கள் இருந்தன. கள்ளச் சாராய விற்பனை அதிகரித்தது.

4. தமிழக அரசியலில் நீண்ட நாள்களாய் மதுவிலக்கு அமலில் இருந்தது. அண்ணா முதல்வரான பிறகும் அது தொடர்ந்தது. இந்தியாவில் 1970-ம் ஆண்டுக்குப் பிறகு நிதிநெருக்கடி ஆரம்பித்தது. அப்போது மத்திய அரசு புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. அது என்னவெனில் ``மதுவிலக்கைப் புதிதாய் அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மட்டுமே உதவிப்பணம் நஷ்ட ஈடாக வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்தத்திட்டம் வரும் முன்பே குஜராத்திலும், தமிழகத்திலும் மதுவிலக்கு அமலில் இருந்தது. இச்சட்டத்தில் விலக்கு அளித்து தமிழகத்துக்கு உதவிப்பணம் கோரினார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. ஆனால் மத்திய அரசு மறுத்துவிட்டது.

5. தமிழகத்தின் நிதி நெருக்கடியை சமாளிக்க மதுவிலக்கை ஒத்திவைக்க ஆலோசித்தனர். கொள்கை சார்ந்த பிரச்னை என்பதால் பல கருத்துகள் கட்சியிலும் வந்தன. நடிகர் எம்.ஜி.ஆரும் நீண்ட யோசனைக்குப் பின் கோவையில் நடந்த தி.மு.க பொதுக்குழுவில் ஆதரவு தெரிவித்ததோடு.. அரசு தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது.. நிரந்தரமாக அல்ல என மக்களிடம் தெரிவித்தார். பின்பு 1971-72ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கும்போது 30.8.1971 முதல் மதுவிலக்கு தமிழகத்தில் ரத்து செய்யப்படுவதாக (தற்காலிகமாக) அறிவித்தார். அந்த அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் கே.கே ஷா ஒப்புதல் அளித்தார். இதன்மூலம் ஆண்டுக்கு 26 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து சுதந்திரா கட்சி எம்.எல்.ஏ-க்கள் டாக்டர் ஹண்டே, வி.எஸ் ஸ்ரீகுமார், வெங்கடசாமி நாயுடு ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது.

6. ராஜாஜியும், காயிதேமில்லத்தும் முதல்வரின் இல்லத்துக்கே சென்று மதுவிலக்கை வலியுறுத்தினர். அதற்கு தமிழகத்தின் நிதி ஆதாரத்துக்காக, மத்திய அரசு மானியம் கொடுக்காமை, அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு இன்மை ஆகியவையினால் கைவிடப்பட்டது என்றார். மேலும் ``நெருப்பு வளையத்துக்குள் கொளுத்தப்படாத கற்பூரமாக தமிழ்நாடு எத்தனை நாளைக்குத்தான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என சட்டப்பேரவையில் கேட்டார். பின்பு நிதிநிலை சீரானபின் மீண்டும் 1973-ல் மதுவிலக்கு கொண்டு வரப்பட்டது. செப்டம்பர் 1-ம் தேதி 7000 கள்ளுக்கடைகள் மூடப்பட்டன.

7. எம்.ஜி.ஆர் தி.மு.க-வை விட்டு வெளியேறிய பின் கருணாநிதி மீது சுமத்திய குற்றச்சாட்டில் மதுவிலக்கை நீக்கியதும் ஒன்று.

இவர் பொறுப்பேற்ற (1977-80) காலகட்டத்தில் மதுவிலக்கு அமல்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டபோது. ஆனால், மதுவிலக்கு தளர்த்தப்பட்டது. 30 வயதுக்கு மேற்பட்டோர் ரூ.25 கட்டணம் செலுத்தி தாசில்தார் அலுவலகத்தில் மது பெர்மிட் பெறலாம் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது. பின்பு 2003-ம் ஆண்டில் ஜெயலலிதா அரசு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மூலம் மொத்த விற்பனை விநியோகம் செய்தது.


8. தமிழகத்தில் மதுவிலக்கு வந்தும் வராமல் போய்விட்டது. தமிழக வருவாயில் (30,000 கோடி) பெரும்பாலான வருவாயை இது ஈட்டித்தருவதாலும் பல முக்கியப் புள்ளிகளின் மதுபானத் தொழிற்சாலைகள் இயங்குவதாலும் சாத்தியம் இல்லாமல் போய்விட்டது. ஒவ்வோர் ஆண்டும் இதில் எளிதாய் அதிக வருவாய் வருவதால் பிற வருவாய் ஈட்டும் வழிகளைக் காண சுணக்கம் ஏற்படுகிறது. பல தொழிலாளர்கள் இதில் பணிபுரிவதால் மதுக்கடைகளை மூடும்போது வேலையிழக்கும் அபாயமும் உள்ளது. நிச்சயம் மாற்றுவழி கண்டறிந்து வருவாயை பெருக்க வேறு வழி காணப்பட வேண்டும்.


இப்படி மாறி மாறி தமிழக அரசை நடத்த பொருளாதாரம் இல்லை என்று மதுவிலக்கை அமல்படுத்தி நீக்கி என்று அரசியல்வாதிகள் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். கடைசியில் கொரோனாவை காரணம் காட்டி சென்னையில் நான்கு மாதம் மதுக்கடைகளை மூடி வைத்திருந்தனர். 


அந்த நான்கு மாதத்தில் பலரின் வாழ்வில் ஒளி வீசியது, சில எடுத்துக்காட்டுகள் கீழே.


1. வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறும்போது, ‘‘மது இல்லாமல் வாழவே முடியாது என, எந்த வேலைக்கும் போகாமல் எப்போதும் போதையிலேயே இருக்கும் என் கணவர் இதுநாள் வரை வீட்டுக்கு சுமையாகத்தான் இருந்தார். கடந்த 4 மாதங்களாக மதுக்கடைகள் இல்லாததால், அவரிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மது இல்லாமலும் வாழ முடியும் என்பதை உணர்ந்து, தற்போது வீட்டுக்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்கள் வாங்கி வருவது என பொறுப்புள்ள குடும்பத் தலைவராக மாறிஉள்ளார். மதுவிலக்கை அமல்படுத்த இதுவே சரியான நேரம். சென்னையில் இருந்து இந்தப் பணியை அரசு ஆரம்பிக்கலாம்’’ என்றார்.


2. கொடுங்கையூர் எழில் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறும்போது, ‘‘எப்போதும் போதையிலேயே இருக்கும் என்மகன், மதுவில் இருந்து மீள்வான்என்ற நம்பிக்கையே இல்லை. மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால், மதுப் பழக்கத்தில் இருந்து மீண்டுள்ளான். அவனுக்கு திருமணம் செய்துவைக்க திட்டமிட்டுள்ளோம். சென்னையில் இனி மதுக்கடையை அரசு திறக்கக் கூடாது’’ என்றார்.


3. தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மது குடிக்கும் பழக்கம் உள்ள ஒருவர் கூறும்போது, ‘‘இதுநாள் வரை காலை எழுந்தவுடன் கை, கால்கள் உதறும். எப்போது பிற்பகல் 12 மணி ஆகும்.. மதுக்கடை திறப்பார்கள் என்று காத்திருப்பேன். இப்போது அந்த எண்ணமே இல்லை. அதனால், குடும்பத்தை பற்றி சிந்திக்க நேரம் கிடைக்கிறது. மது அருந்துவோரின் செயல்பாடுகளால் மதுக்கூடங்கள் மட்டுமின்றி சுற்றுப்புறமும் வழக்கமாக துர்நாற்றமாக இருக்கும். சென்னையில் அந்த துர்நாற்றம் கடந்த 4 மாதமாக இல்லை. இந்த நிலை நீடிக்க வேண்டும் என்றால், மதுக்கடைகளை திறக்கக் கூடாது’’ என்றார்.


கண்ணுக்கு தெரியாத பல குடும்பம் இதன்மூலம் நிம்மதியாக வாழ்ந்து வந்தது, ஆனால் மீண்டும் தமிழக அரசு திறந்துவிட்டது. புதிதாக பதவி ஏற்று இருக்கும் திமுக அரசு மதுக்கடைகளை நிரந்தரமாக மூடுமா? 


வாகன விபத்தில் (குடியின் காரனாக) சென்னை இந்தியாவில் மூன்றாம் இடத்தில் உள்ளது.


குடித்துவிட்டு வாகனகளை ஓட்டுவதன் மூலம் அதிகமாக விபத்துகள் நடக்கிறது, சென்னை மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஒரு பாவமும் அறியாத அடுத்த வண்டிக்காரனை குடித்துவிட்டு  வண்டி ஓட்டுபவனால் மரணம் அடைவதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? ஆக எப்படி பார்த்தாலும் மது என்பது சாபக்கேடே. 


இந்தியாவில் ஒவ்வொரு 96 நிமிடத்திற்கும் குடியினால் ஒருவர் இறக்கிறார்.


மதுவிலக்கு சாத்தியமா?


மதுவிலக்கு உடனடியாக சாத்தியம் இல்லை, ஆனால் என் சிறிய அறிவுக்கு எட்டியவரை கீழே உள்ளதுபோல செய்தால் சாத்தியமே. 


1. தமிழகத்தில் நடக்கும் ஊழல், லட்சத்தை ஒழித்து, கனிம வளங்களை சரியாக நிர்வகித்தாலே மதுவில் கிடைக்கும் வருமானத்தை விட பல மடங்கு வருமானம் கிடைக்கும். 


2.  தேவையற்ற இலவசங்களை நிறுத்தி அந்த பணத்தை பயன்படுத்தலாம். 


3. மதுக்கடைகளில் உள்ள பார்களை மூடவேண்டும்.


4. ஆதார் கார்டை மதுக்கடைகளில் இணைத்து குறிப்பிட்ட அளவு மதுவை விற்க வேண்டும் & 21 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும் விற்க வேண்டும். பின்பு 


5. மதுவின் விலையை உயர்த்தவேண்டும். பிறகு 


6. மதுபானத்தில் உள்ள எத்தனாலின் அளவை குறைக்கவேண்டும்.


7. மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டினால் ஓட்டுநர் உரிமத்தை பறிக்கவேண்டும். 


8. பள்ளிக்கூடத்திற்கு அருகில், ஊரின் நடுவில், வழிபாட்டு இடங்களுக்கு அருகாமையில் உள்ள மதுக்கடைகளை மூடவேண்டும். 


9. மதுபோதையில் செய்யும் தவறுகளுக்கு இரட்டிப்பு தண்டனை வழங்கப்படவேண்டும்.


இந்த நடவடிக்கைகளை 3-4 வருடங்களுக்குள் எடுத்தால், 5 வது வருடம் பூரண மதுவிலக்கை அமல்படுத்தலாம். அல்லது மதுவின் விலையை பலமடங்கு உயர்த்தி எத்தனாலின் அளவை குறைத்தால் மக்கள் தானாகவே மதுவை வாங்காமல் விட்டுவிடுவார்கள்.


மக்களுக்கான அரசு மதுவிலக்கை அமல்படுத்தும்.

Sunday, May 9, 2021

2021 தமிழக சட்டமன்ற தேர்தல் மூலம் இஸ்லாமிய சமுதாயம் கற்ற பாடம்

I. தேர்தலுக்கு முன் இஸ்லாமியர்களின் நிலைப்பாடு

சட்டமன்ற தேர்தல் காலம் சூடுபிடித்துக்கொண்டு இருந்த சூழ்நிலையில் இஸ்லாமியர்கள் அனைவரும் யாராவது நமக்கு நல்லது செய்துவிடமாட்டார்களா என்று ஏக்கத்தோடு இருந்தார்கள். கடந்த கால அதிமுகவின் பிஜேபி கூட்டணி, மக்களை விரோத போக்கின் விரக்தியால் முஸ்லீம் சமுதாயத்திற்கு இருந்த ஒரே போக்கிடம் திமுக மட்டுமே. 

கடந்த காலங்களின் திமுக இஸ்லாமிய சமூகத்திற்கு சில நல்லதையும் சில தீமைகளையும் செய்திருந்தாலும், அதிமுக விடம் செல்லமுடியாத காரணத்தால் திமுக தான் நமது தீர்வாக இருந்தது.

நம்மை கவர திமுக கொடுத்த அல்லது திமுக செய்யும் என்று நாம் நினைத்த வாக்குறுதிகள்

1. பிஜேபி யை தமிழகத்தில் காலூன்றவிடாமல் எங்களால் மட்டுமே தடுக்கமுடியும்.

2. CAA  NRC & NPR போன்ற சட்டங்களை ஆட்சிக்கு வந்தால் நீக்கிவிடுவோம்.

மேலே சொன்ன இரண்டு காரணங்களால் பெரும்பான்மை இஸ்லாமிய சமுதாயம் திமுகவை தானாக சென்று ஆதரவை அளித்தது. வெள்ளிக்கிழமை ஜும்மா மேடைகள் திமுகவிற்க்கான மேடைகளாக மாறியது. பாம்பு, உப்புமா மற்றும் இளநீர் கதைகள் சொல்லப்பட்டது. அரசியலில் அரிச்சுவடி தெரியாதவர் கூட திமுக தான் நமக்கான பாதுகாவலன் என்று வம்படித்தார்கள்.

எல்லா பள்ளி இமாம்களும் திமுகவிற்கு தான் வாக்கு செலுத்தவேண்டும் என்று கட்டாய கடைமை போல சொன்னார்கள். அரசியல் ஹராம் தேவையற்றது என்று இதுவரை சொல்லிய சமூகம் இன்று அரசியல் தேவை என்று மாறியுள்ளதை வரவேற்போம், ஆனால் அரசியல் பற்றி இன்னும் படிக்கவேண்டும் என்பதே நமது ஆவல்.

உண்மையிலேயே திமுக தான் தீர்வா?

திமுகவிற்கு வாக்குச்செலுத்த இஸ்லாமிய சமுதாயம் தயாராக இரண்டு காரணம் மேலே சொன்னது, அதை திமுகவால் தடுக்கமுடியுமா? தடுக்க முடிந்ததா? தடுக்கவும் இல்லை, தடுக்கவும் முடியாது என்பதுதான் அதற்க்கான பதில்.

1. பிஜேபி யின் வளர்ச்சியை திமுகவால் தடுக்கமுடியாது, தடுக்கவும் இல்லை.

பெரும்பான்மை மக்கள் பிஜேபி யை பற்றி தெரிந்த அளவுக்கு ஆர் எஸ் எஸ் பற்றி தெரியவில்லை. ஆர் எஸ் எஸ் என்ற நாசகார சக்தி மக்களின் மனநிலையை திட்டமிட்டு மாற்றிக்கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டுகளில் இருமடங்கு தன் செயல்பாடுகளை அதிகரித்துள்ளது. மக்கள் விரோத செயல்களை திட்டம் தீட்டி செயல்படும் RSS அமைப்பின் அரசியல் பிரிவுதான் பிஜேபி, ஆக பிஜேபி யை அழித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்பது முற்றிலும் தவறான வாதம். 

தமிழ்நாட்டில் பிஜேபியுடன் திமுக கூட்டணி வைத்தது நாமெல்லாம் அறிந்த ஒன்றே, ஆனால் இன்று பிஜேபி யை எதிர்ப்பதுபோல திமுக தன்னைக்காட்டிக்கொண்டு வெற்றிபெறவேண்டும் என்று செயல்பட்டது, வெற்றியும் பெற்றுவிட்டது. 

எல்லா கட்சியும் வேட்பாளரை அறிவித்தவுடன் தான் திமுக வேட்பாளர்களை அறிவித்தது, பிஜேபி போட்டியிட்ட தொகுதிகளில் பிஜேபியை எதிர்த்து தோல்வியுறச்செய்யும் அளவுக்கு திமுக வேட்பாளர்களை தேர்வு செய்யவில்லை, பிரச்சாரமும் சரியாக செய்யவில்லை. இதிலிருந்தே பிஜேபி யின் வருகையை திமுகவால் தடுக்கமுடியாது/தடுக்கவும் செய்யாது என்பது திண்ணம். 

2. CAA, NRC & NPR சட்டங்களை திமுகவால் மட்டுமல்ல எந்த மாநில கட்சியாலும் திரும்ப பெறவைக்கமுடியாது.

மத்திய அரசு கொண்டுவந்த பல திட்டங்களை (வேளாண் மசோதா, நீட் தேர்வு, குடியுரிமை சட்டம்) எந்த மாநில கட்சியாலும் தடுத்தநிறுத்தவோ, திரும்ப பெறவைக்கவோ முடியாது. நீதிமன்றத்தை அணுகி சட்டத்தை தடுத்தநிறுத்த முடியும் ஆனால் அந்த வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து எடுத்த நடத்த நீதிமன்றங்கள் தயாராக இல்லை, காரணம் பிஜேபி மற்றும் ஆர் எஸ் எஸ். 

ஆக முடியாத இரண்டு காரங்களை காட்டி முஸ்லிம்களை பயமுறுத்தி பயன்படுத்திக்கொண்டது என்பதை விட பயன்படுத்தவிட்டுவிட்டோம் என்பதே சரியான வாதம். 

SDPI மற்றும் மற்ற கட்சிகளின் நிலைப்பாடு

SDPI இந்திய முழுக்க உள்ள ஒடுக்கப்பட்டவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி, இஸ்லாமியர்களை பெரும்பான்மையினராக கொண்டு வளர்ந்துவரும் கட்சி. இந்த கட்சியின் தேர்தல் நிலைப்பாடு பிஜேபி தவிர மற்ற கட்சிகளோடு கூட்டணிவைக்கலாம் என்பதே. கூட்டணி வைப்பது கேவலமான காரியம், தவறான காரியம் என்றால் திமுகவே இன்று கூட்டணி மூலம் தான் ஆட்சியை பிடித்துள்ளது. கூட்டணி என்பது வெற்றிக்கான தேர்தல் வியூகமே தவிர தவறான காரியமல்ல.  

ஆக திமுக மற்றும் மக்கள் நீதிமய்யத்திடம் கூட்டணி பேசியது அல்லது அ ம மு க விடம் கூட்டணி வைத்ததோ தவறில்லை.

மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர்களும் அவர் அவர் அரசியல் பாதையில் சென்றபோது SDPI  க்கு ஓட்டுப்போட்டால் மட்டும் பிஜேபி வந்துவிடும் என்று பொய்யை பரப்பியது ஏன்?

தேர்தல் முடிவுக்கு பிறகு SDPI டெபாசிட்டை இழந்தது, பிஜேபி யும் வந்தது. 

II. இஸ்லாமிய சமூகம் என்ன செய்திருக்கவேண்டும்?

திமுக தான் முஸ்லிம்களின் போக்கிடம் என்றால் ஒட்டுமொத்த சமுதாயமும் ஒன்றாகி நமது தேவைகளை கேட்டு, பிரதிநிதித்துவத்தை அடைய முற்பட்டிருக்கவேண்டும், அதை செய்யாமல் தானாக சென்று ஆதரவு தந்து நம்மை நம்மை நாமே தாழ்த்திக்கொள்வது போலாகும். இஸ்லாமியர்கள் என்றால் மற்றவருக்கு நன்மை செய்யக்கூடியவர்கள், இன்று தமிழகத்தில் லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடிக்கொண்டு இருக்கிறது, முஸ்லிம்களே இன்று குடிகாரர்களாக மாறிக்கொண்டு வருகிறார்கள். சிறையின் எந்த பாவமும் அறியாத பலர் விசாரணைக்கைதியாகவே இருக்கிறார்கள். இந்த பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு? இஸ்லாமிய சமுதாயம் எல்லோரும் ஒற்றைக்கட்டாக நின்று இந்த பிரச்சனைகளை தீர்ப்போம் என்று வாக்குறுதி கொடுத்தால் திமுகவை ஆதரிப்போம், இல்லையென்றால் தேர்தல் நிலைப்பாட்டை எடுக்கமாட்டோம் என்று சொல்லியிருக்கலாம், அதை உலமா சபை முன்னின்று செய்திருக்கவேண்டும். ஆனால் ஏதோ ஒரு பலனை மனதில் வைத்துக்கொண்டு பிஜேபி வந்துவிடக்கூடாது என்ற ஒற்றை ஓட்டை காரணத்தை கொண்டு திமுகவை ஆதரிப்பது நமக்கு நாமே குழிபறிப்பது போலாகும்.

இஸ்லாமிய சமூகத்தின் மொத்த பிரச்சனைகளையும் தீர்ப்போம் என்று தேர்தல் வாக்குறுதியில் கொடுத்தால் ஆதரிப்போம் என்று சொல்லி நெருக்கடியை கொடுப்பதற்கு பதில், தமுமுக இரண்டு சீட்டில் உதயசூரியன் சின்னத்தில் நின்றது. லீக் மூன்று இடத்தில் ஏணி சின்னத்தில் நின்றது. 

தமுமுக வென்றது, லீக் தோற்றது. லீக்கின் தமிழக சகாப்தம் முடிந்தது. 

திமுக ஒன்றும் இஸ்லாமியர்களின் காவலர்கள் அல்ல, இறைவன் மட்டுமே நமது காவலன். குடியுரிமை சட்டத்தை திமுக செயல்படுத்தவிடாது என்று நாம் நம்பினால் அதுதான் நமது அரசியல் அறியாமை, அதை திமுக பயன்படுத்திக்கொண்டது. 

தான் வெற்றிபெற எதையும் ஒரு அரசியல் கட்சி செய்யும், திமுக பிஜேபி+குடியுரிமை சட்டத்தை காட்டி நம்மை பயன்படுத்திக்கொண்டது.

III. நமக்கான பிரச்சனைக்கு என்ன தீர்வு?

இனியாவது நாம் அரசியலில் மட்டுமல்ல எல்லா விடயத்துக்கு ஒன்று இணைய வேண்டும். தேசிய அளவில் முஸ்லிமாக மட்டுமல்ல, ஒடுக்கப்பட்டவர்களாக தேசிய கட்சியான சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் (SDPI) கீழ் ஒன்றிணைந்து பசியற்ற பயமற்ற இந்தியாவை படைக்கப்படுபடவேண்டும். 

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...