Friday, January 11, 2019

8. இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறதா?-2

இஸ்லாமிய பெண்களைப்பற்றி கவலைப்படாத எதிரிகள், அதாவது இஸ்லாமிய பெண்களை கற்பழித்து, வயிற்றில் இருந்த குழந்தையை வயிற்றை கீறி எடுத்து தீயில் இட்டு பொசுக்கியவர்கள் இஸ்லாமிய பெண்களைப்பற்றி கவலைப்படுவதுபோல சில விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்.

அதில் முக்கியமானவை


  1. பள்ளிவாசலுக்குள் அனுமதிப்பதில்லை
  2. இமாமாக நியமிப்பதில்லை
  3. சொத்தில் பாதியே பெண்களுக்கு
  4. சாட்சி கையெழுத்துக்கு இரண்டு பெண்கள் தேவை
  5. மற்றவரோடு கை குலுக்குவதில்லை


1. பள்ளிவாசலுக்குள் அனுமதிப்பதில்லை

இஸ்லாம் ஒருபோதும் பெண்களை பள்ளிக்குள் சென்று தொழ தடை விதிக்கவில்லை, மாறாக சென்று தொழத்தான் செல்கிறது, ஆனால் வீடுகளே சிறந்தது என்று கூறுகிறது, மக்கா மதினாவில் பெண்கள் திரளாக தொழுகையில் கலந்து கொள்வதை காணலாம், நமது ஊர் பள்ளிவாயில்களிலும் ஏராளமாக காணலாம். பல பள்ளிவாயில்கள் அனுமதிக்காததற்கு காரணம், போதிய கழிப்பறை வசதி பெண்களுக்கென தனியாக இல்லாத காரணத்தாலும், ஆண் பெண் கலப்பு இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்ற காரணத்தாலும் தான்.


2. இமாமாக நியமிப்பதில்லை

இஸ்லாத்தில் ஆண் பெண் கலப்படம் கூடவே கூடாது, அந்நிய பெண்ணுடன் தனித்திருப்பதைவிட இரும்பால் ஆன ஆணியால் கீறிக்கொள்வதையே விரும்புகிறேன் என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஒரு பெண் மணமுடிக்கக்கூடாத ஆணுடனும், கணவனனுடனும் தான் தனித்திருக்க இஸ்லாம் அனுமதிக்கிறது, இன்று பல பெண்கள் கற்பழிக்கப்படுவது தெரிந்தவர்கள் மற்றும் சொந்தக்காரர்களால் தான் என்பது மறுக்கமுடியாத உண்மை, அந்த வெறுக்கத்தக்க விஷயத்தை களையவே இஸ்லாம் ஆணையும் பெண்ணையும் கலக்க அனுமதிப்பதில்லை. 

யாரை திருமணம் செய்யலாம், யாரை செய்யக்கூடாது

4:23. உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்: உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும்; உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள்; அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது; ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது - இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான்.

86 % வல்லுறவுக்கு காரணம் தெரிந்தவர்ர்களும் சொந்தக்காரர்களுமே என்று ஒரு ஆய்வு சொல்கிறது, வேலியில் போற ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டுடவிட்டு குத்துதே குடையுதேன்னு சொல்றமாதிரி, தெரிந்தவர்தானே, சொந்தக்காரத்தானே என்று நம் பெண்களை பழகவிடுவதால் இதுபோன்ற துக்ககரமான சம்பவங்கள் நடக்கின்றன, இதை முளையிலேயே கிள்ளியெறியத்தான் இஸ்லாம் ஆன பெண் கலப்பை தடுக்கிறது.

https://timesofindia.indiatimes.com/india/86-of-rapes-were-committed-by-people-known-to-victims-NCRB/articleshow/48544137.cms


இப்படி இருக்கின்ற சூழ்நிலையில் பெண்ணை ஆணுடன் கலக்கச்செய்யும் செயலான பெண்ணை இமாமாக நியமித்தல் தகுமோ?

3. சொத்தில் பாதியே பெண்களுக்கு

பெண்களுக்கான சொத்துரிமை இன்னும் எட்டாக்கனியாக இன்று இருக்கிறது, ஆனால் 1400  வருடங்களுக்கு முன்னே சொத்தில் பங்கு தந்தது இஸ்லாம் மட்டுமே, இன்றும் இந்தியாவில் ஐந்து மாநிலங்கள் தவிர (தமிழ்நாடு, ஆந்திர, கேரளா, மஹாராஷ்டிரா, கர்நாடக) மற்ற மாநிலங்களில் பெண்களுக்கு சொத்துரிமை இல்லை, சமூகநீதி பேசக்கூடிய பெரியாரும், அம்பேத்காரும் கலைங்கரும் தான் இதற்க்கு பாடுபட்டனர், ஆனால் இன்று அவர்களை ஏன் சங்க பரிவார கும்பல் எள்ளி நகையாடுகிறது என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

பெண்களைப்பொறுத்தவரை, தந்தையின் சொத்தில் பாதி பங்குண்டு, அதே நேரத்தில் கணவனாகப்போறவனிடம் மஹரை கேட்டுப்பெறலாம், பல நேரங்களில் பரம்பரை சொத்தைவிட பல மடங்கு மஹராக கிடைக்க சாத்தியமுண்டு.

ஆனால் பெண்களை தெய்வமாக மதிக்கும் சமுதாயம், பெண் பிள்ளைகளை கள்ளிப்பால் கொடுத்து கொன்றதே வரதட்சணை கொடுக்கமுடியாததால் தான் என்பது நிதர்சனம். வரதட்சணை வாங்கி திருமணம் செய்யுபவருக்கு இஸ்லாம் சொல்லும் சொத்துரிமையை பற்றி விமர்சிக்க தகுதி ஏது?

4. சாட்சி கையெழுத்துக்கு இரண்டு பெண்கள் தேவை

அதாவது ஒரு ஆணுக்கு பதில் இரண்டு பெண்கள் சாட்சிக்கு தேவை என்று இஸ்லாம் கூறுகிறது,

(நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது; (2 :282).


இங்கே இறைவன் கூறும் காரணம் ஒருவள் மறந்துவிட்டால் மற்றவர் நினைவூட்டக்கூடும் என்பதால். சரி இங்கே பெண்கள் ஆணைவிட நியாபகசக்தியில் குறைந்தவர்களா என்ற கேள்வி எழக்கூடும், ஆம் பெண்களுக்கு நியாபகசக்தி ஆண்களைவிட குறைவே.



https://projects.iq.harvard.edu/files/banaji/files/1987_loftus_mqr.pdf

சிறிய சிறிய விஷயங்களைத்தான் பெண்கள் நியாபகம் வைத்திருப்பார்கள், ஆனால் கொடுக்கல் வாங்கல், கொலை போன்ற சாட்சி போன்ற விசயத்திற்கு ஆண்களே நியாப சக்தியில் சிறந்தவர்கள் என்பதற்கு மேலே ஆதாரம் உள்ளது.


5. மற்றவரோடு கை குலுக்குவதில்லை

புகாரி ஷரீபில் வரும் ஹதீஸ் இதற்கு ஆதாரமாகும். அன்னை ஆயிஷh(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 ’பெருமானாரின் கை, தனக்குச் சொந்தமான மனைவியரின் கையைத்தவிர்த்து எந்த பெண்ணின் கையையும் தொட்டதில்லை’

இன்றும் பல பெண்கள் இஸ்லாத்துக்காக வேலையையும் பொருளாதாரத்தையும் இழக்க தயாராக இருக்கிறார்கள். கூட வேலைபார்ப்பவர்களோடு கைகுலுக்க சொன்னதற்காக வேலையை விட்ட சம்பவமும் நடந்துள்ளது, ஆதாரம் கீழே


https://www.independent.co.uk/news/world/europe/muslim-woman-leaves-job-after-being-told-to-shake-hands-with-male-colleagues-a7324591.html


பிற்சேர்க்கை






மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...