Monday, July 5, 2021

டெல்லி யமுனா விஹாரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து சட்ட உதவிகளை வழங்கிய SDPI

 


டெல்லியின் யமுனா விஹாரின் 2021 ஜூன் 11 இரவு வன்முறையால் படுகாயமடைந்தவர் வீட்டிற்கு 14 ஜூன் 2021 அன்று SDPI யினர்  வருகைபுரிந்தனர்.

நான்கு சகோதரர்களின் குடும்பங்கள் இரண்டு வீடுகளில் அடுத்தடுத்து வசித்து வருகின்றனர். சகோதரர்களின் அம்மா கடுமையான நோய்வாய்பட்டிருந்ததால் நான்கு கும்பத்தை சேர்ந்த பெண்களும் குழந்தைகளும் அந்த தாயை காண ஒரே வீட்டில் குழுமியிருந்தனர். 

1 மணிக்குப்பிறகு வெளியில் வெளியில் தவறான பேச்சுக்குரல் கேட்டதை அடுத்து இரண்டு சகோதரர்கள் வெளியே விரைந்து சென்று பார்த்தபோது ஒரு கும்பல் காலனியின் பாதுகாப்பு காவலரை தாக்க முற்பட்டனர், காரணம் அந்த காவலர் காலனியின் கதவை திறக்கமுடியாது என்று சொன்னதால்.  

கூட்டத்தில் இருந்த ஒருவர் காவலரை தவறான வார்த்தைகளால் பேசி காவலரின் தாடியை பிடித்து வம்புக்கு இழுத்து வாழ்நாளில் மறக்கமுடியாத படி பாடம் புகட்டுகிறோம் ன்னு என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டனர். அவர்கள் பொய் விட்டனர் என்பதால் இரண்டு சகோதரர்களும் தங்களின் வீட்டிற்கு திரும்ப வந்துவிட்டனர். ஆனால் முப்பது நிமிடங்களுக்குள், சுமார் இரண்டு டஜன் இளைஞர்கள் கொண்ட ஒரு கும்பல் குச்சிகள், ஹாக்கி, இரும்பு கம்பிகள் மற்றும் துப்பாக்கிகளுடன் வந்தனர், அவர்கள் இந்த வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தனர். கண்மூடித்தனமாக ஆயுதங்களைக் கொண்டு அனைத்து நபர்களையும் தாக்கினார்கள். வயதானவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மொத்தம் பத்து பெரியவர்கள் மற்றும் நான்கு குழந்தைகள் உள்ளிட்டவர்களை தாக்கிவிட்டு சென்றுவிட்டனர். காவல்துறையினர் பாதுகாப்பு காவலர் (செக்யூரிட்டி கார்ட்) சார்பில் FIR  ஆரை பதிவு செய்தனர், மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.

கடந்த ஐந்து நாட்களாக சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யவில்லை. பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் இந்த சம்பவத்தை அப்பகுதியின் உயர் போலீஸ் அதிகாரியிடம் சந்தித்து விவரித்தனர். யமுனா விஹார் பகுதி பிரபலமற்ற வடகிழக்கு டெல்லியின் ஒரு பகுதியாகும், இது பிப்ரவரி 2020 இல் மிகப் பெரிய வன்முறையில் வீழ்ந்தது, இதில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் பெஞ்சின் கடுமையான உத்தரவு இருந்தபோதிலும் பெயரிடப்பட்ட குற்றவாளிகளை  இன்னும் கைது செய்யவில்லை. மேலும், வகுப்புவாத வன்முறைக்கு பலியானவர்கள், அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் உள்ளவர்கள் போலி மற்றும் தவறான குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

கடந்த ஆண்டு வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட சமூகத்தின் அதே பிரிவைச் சேர்ந்தவர்கள் தான் இந்த வன்முறையிலும் ஈடுபட்டுள்ளனர்.  வெறுப்பு மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து சட்ட மற்றும் அரசியல் உதவிகளையும் வழங்குவதற்காக SDPI யின் பிரதிநிதிகள் குழுவில் துணைத் தலைவர் ஷர்புதீன் அஹ்மத் வழக்கறிஞர் திரு.நவேத் அஸிம் அஃப்ரிடி, ஹபீஸ் முகமது ஹாஷிம், முகமது இலியாஸ், டாக்டர் ஷாமூன் மற்றும் பலர் அந்த குடும்பத்தை சந்தித்தனர். குடவாலிக்கு தாக்க தண்டனையை வாங்கி தர எல்லா உதவிகளையும் செய்வோம் என்று எஸ்.டி.பி.ஐ உறுதியளித்தது.

டெல்லி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள் வகுப்புவாத சம்பவங்களின் கேந்திரமாக மாறியுள்ளன, அங்கு பாதிக்கப்பட்டவர்கள் மீது காவல்துறை வழக்கு தொடுக்கிறது. மேலும் குற்றவாளிகள் அரசியல் மற்றும் மத காரணங்களால் தண்டிக்கப்படாமல் காவல்துறையால் பாதுகாக்கப்படுகின்றனர்.

Source : DELEGATION OF SDPI VISITS MUSLIM FAMILY OF YAMUNA VIHAR, DELHI TO OFFER LEGAL AND POLITICAL HELP TO VICTIMS – Social Democratic Party of India

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...