Friday, June 4, 2021

விசாரணைக்கைதிகளின் விடுதலையும் திமுக அரசின் மௌனமும்

 பொய் வழக்கு

காலம்காலமாக அரசுக்கு எதிராக மக்களுக்கு சாதகமாக நடந்துகொள்ளும் சாதாரண மனிதன் முதல், கட்சி மற்றும் இயக்கங்கள் வரை ஆளுங்கல்ட்சியாள பல வகையில் தண்டிக்கப்படுவார்கள். அதில் முதன்மையானது பொய் வழக்கு.பொய் வழக்கு போடுவதில் எல்லா அரசுகளும் ஒன்றாகவே செயல்படுகிறது. எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் அரசை விமர்ச்சித்தாலே, அரசின் தவறை தட்டிக்கேட்டாலோ முதலில் பாய்வது பொய்வழக்கு தான். எல்லா அரசுகளும் இந்த விடயத்தில் ஒன்றுபோல செயல்பட்டாலும் பாசிச பிஜேபி அரசு ஒருபடிக்கு மேல் போய் சாதாரண சுவரொட்டி ஒட்டியதெற்க்கெல்லாம் போய் வழக்கு போட்டது. இந்திய அளவில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் கல்வி, வெளிவாப்பில் குறைவாக இருந்தாலும், சிறையில் % க்கு அதிகமாக விசாரணைக்கைதிகளாக முஸ்லிம்கள் உள்ளனர். இந்திய விடுதலைக்கு & அதிகமாக முஸ்லிம்கள் பாடுபட்டனர், ஆனால் இன்றோ % அதிகமான முஸ்லிம்கள் விசாரணை கைதிகளாக இந்தியா முழுக்க உள்ள சிறையில் இருக்கிறார்கள். 

விசாரணை கைதிகளாக முஸ்லிம்கள்:

இந்தியாவில் 2018  ன் தரவுப்படி 18.81 % முஸ்லிம்கள் விசாரணை கைதிகளாக இருக்கிறார்கள் என்று டெக்கான்ஹெரால்டு என்ற செய்தித்தாள் தெரிவிக்கிறது (Majority prisoners in Indian jails are Dalits, Muslims | Deccan Herald). இந்திய மாநிலங்களில் உத்திரபிரதேசத்தில் தான் அதிக % முஸ்லிம்கள் விசாரணை கைதிகளாக இருக்கிறார்கள்.

இந்தியா முழுக்க உள்ள விசாரணை கைதிகளின் எண்ணிக்கை 2015 வரை.

Hindus    -    2,11,335

Muslims  -    63,626

Sikhs       -    10,413

Christian  -    9,193

Others     -     2,072.

இஸ்லாமிய விசாரணை கைதிகளை பொறுத்தவரை உத்திரபிரதேசத்தில் 27,459 பேரும் (நாட்டின் மொத்த முஸ்லீம் விசாரணை கைதிகளில் 31.31% ), மேற்கு வங்கத்தில் 8,401 பேரும் உள்ளனர். இந்த தொகை கர்நாடகாவில் 2,798 ஆக உள்ளது. 

தாழ்த்தப்பட்ட விசாரணை கைதிகளை பொறுத்தவரை உத்திரபிரதேசத்தில் 24,489 பேரும் (நாட்டின் மொத்த தாழ்த்தப்பட்ட விசாரணை கைதிகளில் 25.39% ), மத்தியப்பிரதேசத்தில் 8,935 பேரும் உள்ளனர். இந்த தொகை கர்நாடகாவில் 2,803 ஆக உள்ளது. 

வருடந்தோறும் அதிகரிக்கும் விசாரணை கைதிகள்:

வருடங்கள் தோறும் விசாரணைக்கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது, அதற்க்கு மிக முக்கிய ஆளும் பாசிச பிஜேபி அரசும் சங்கபரிவார அமைப்புகளும் தான். 2017 

2017 ல் 3,08,718 ஆக இருந்த விசாரணை கைதிகளின் எண்ணிக்கை 2018 ல் 3,23,537 ஆகவும் 2019 ல் 3,30,487 ஆகவும் உயந்துள்ளது. 2017 க்கும் 2019 க்கும் இடையே அதிகரித்த  % 7.

இன்றுவரை விசாரணை கைதிகளாக, போலி முதல் அறிக்கையை சமர்ப்பித்து, முதல் அறிக்கையை பிரதி எடுத்து, முதல் அறிக்கை சமர்பிக்காமல் பல முஸ்லிம்கள் உள்ளனர். தலைவர்களின் பிறந்த நாள், இறந்த நாள் என்று பல விசாரணை கைதிகளை விடுதலை செய்தாலும், முஸ்லிம்களுக்கு அது எட்டாக்கனியாகவே உள்ளது. கடந்த தடவி 1500 பேரை விடுதலை செய்த தமிழக அரசு 4 முஸ்லிம்களை மட்டுமே விடுதலை செய்தது. (https://hindmuslim.blogspot.com/2019/02/1500-4.html). 

முஸ்லிம்களின் பாதுகாவலராக தன்னை பீற்றிக்கொள்ளும் திமுக அரசில் தான் கோவை குண்டுவெடிப்பில் பல குற்றமற்றவர்கள் விசாரைக்கான கைது செய்யப்பட்டு 23  வருடங்களாக சிறையில் உள்ளனர். சமீபத்தில் நடந்த திருபுவனம் ராமலிங்கம் கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்ட 12 பேரும் விசாரணை கைதிகளே. 

1,212 பெண்கள் விசாரணை கைதிகளாக இந்தியா முழுக்க உள்ளை சிறைகளில் உள்ளனர், இந்த பெண்களுடன் 1409 குழந்தைகளும் விசாரணை கைதிகளாக உள்ளனர். 

விசாரணை கைதிகளின் நிலவரம். 

விசாரணை கைதிகளாக 5 வருடத்திற்கு மேலாக உள்ள நபர்கள் 5011. இதுவரை விடுதலை செய்யப்பட விசாரணை கைதிகளின் எண்ணிக்கை (2019  வரை) 635. 


தமிழகத்தின் நிலை:

கடந்த மக்கள் விரோத அதிமுக அரசு தருமபுரி பேருந்து எரிப்பில் ஈடுபட்டவரை கூட விடுதலை செய்தது, ஆனால் விசாரணை கைதிகளாக இருக்கும் சிறைவாசிகளை விடுதலை செய்யவில்லை. திமுக அரசும் இந்த விடயத்தில் ஒன்றும் மாறப்போவது இல்லை. ஜூன்-3  அன்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விசாரணை கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தும் இன்றைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அதை பற்றி வரை கூட திறக்கவில்லை.  

தமிழகம் முழுவதும் விசாரணைக்கைதிகளாக இருப்பவர்களின் எண்ணிக்கை
அதில் 
ஆண்கள் 8703
பெண்கள் 541
மொத்தம் 9244.
படிக்காதவர்கள் 2764
பத்தாவது வரை படித்தவர்கள் 3399
ஹிந்துக்கள் 7247
முஸ்லிம்கள் 1015
கிருத்துவர்கள் 982
SC 2466
ST 218
OBC 6399
Others 161.

ஆக தமிழகத்தில் அதிகமாக விசாரணைக்கைதிகளாக இருப்பவர்களை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழக திமுக அரசு விடுதலை செய்து மக்களுக்கான அரசு என்று நிரூபிக்கவேண்டும். ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்றால் ஹிந்துக்களையும், சிறுபான்மையினரின்  பாதுகாவலன் என்றால் முஸ்லிம்கள் மற்றும் கிருத்துவர்களையும் விடுதலை செய்யவேண்டும். திமுக அரசு தமிழர்களுக்கான அரசு என்றால் தமிழர்களை விடுதலை செய்யவேண்டும், தெலுங்கர்களுக்கான அரசு என்றால் விடுதலை செய்யவேண்டாம். 

தவறே செய்யாமல் விசாரனையில் பெயரில் மக்களை வஞ்சிக்கும் அரசுகள் மாறவேண்டும், அரசியல் காழ்ப்புணர்வு மற்றும் சரியான குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாத போது அப்பாவிகளை கைது செய்து விசாரணை கைதிகளாக வைத்திருப்பதை நீதிமன்றம் தண்டிக்கவேண்டும், இந்த குற்றத்திற்கு துணைபோகும் ஒவ்வொரு அதிகாரியையும் தண்டிக்கவேண்டும்.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், அனால் ஒரே ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது என்பது போல விசாரணை கைதிகள் கட்டாயம் விடுவைக்கப்படவேண்டும், இது அரசின் கடமை மட்டுமல்ல, பெருமையும் கண்ணியமும் கூட ஆகும்.

கண்ணியம் காக்கப்படுமா என்று பொறுத்து இருந்து பார்ப்போம். 

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...