Thursday, January 9, 2020

PFI எல்லோருக்குமான இந்தியாவை உருவாக்க பாடுபடும் இயக்கம் என்று ஜெர்மன் அறிஞர் புகழாரம்


பி.எஃப்.ஐ (Popular Front of India) பற்றிய ஜெர்மன் அறிஞரின் வேறுபட்ட கண்ணோட்டம்

 கோழிக்கோடு: CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது நடந்த வன்முறையை மேற்கோள் காட்டி மத்திய அரசு இந்திய முன்னணி (PFI) ஐ தடை செய்யவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில், ஆக்ஸ்போர்டு சர்வதேச மேம்பாட்டுத் துறையுடன் ஜெர்மன் ஆராய்ச்சி அறிஞர் PFI  பற்றி மேற்கொண்ட ஆய்வு, இந்திய அரசு சொல்லும் குற்றச்சாட்டுக்கு முற்றிலும் எதிராக உள்ளது.

 அரசாங்கமும் உளவுத்துறையும் PFI ஐ யை ஒரு ‘தீவிரவாத அமைப்பு’ என்றும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் இயக்கம் என்றும் முத்திரை குத்தும்போது,  ​​இந்த அமைப்பானது சட்டக் கல்வி மூலம் முஸ்லிம்களுக்கான அதிகாரம் குறித்தும், அவர்களின் அரசியலமைப்பு உரிமைகள் குறித்தும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது என்று ஜெர்மன் அறிஞர் Arndt Emmerich இந்த அமைப்பை பற்றி கூறுகிறார்.

 அரசியல், கல்வி மற்றும் இந்திய முஸ்லீம் அமைப்புகளின் சட்ட நடைமுறைவாதம்: முஸ்லீம் சிறுபான்மையினரின் அரசியலின் தன்மை  பற்றிய ஒரு ஆய்வு (Political Education and Legal Pragmatism of Muslim Organizations in India; A Study of the Changing Nature of Muslim Minority Politicsஎன்ற தனது கட்டுரையில், PFI இந்திய முஸ்லிம்களுக்கு அரசியலின் தேவையை குறித்து தேவையான விழிப்புணர்வை வழங்கி அடைப்படை மாற்றத்தை கொண்டு வரும் என்று கூறியுள்ளார்.



 கல்வி, அரசியல் மற்றும் அதிகாரத்தை  இந்திய முஸ்லீம் சமூகம் அடைவதற்கான வழியை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது என்றும், இவர்களின் செயல்பாடுகள் சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாகவும், ஆராச்சியாளர் ஒப்புக்கொள்கிறார்.

 இந்துத்வ தீவிரவாதிகளிடம் இருந்தும், காவல் துறையின் அதிகார துஸ்பிரயோகத்தில் இருந்தும் எவ்வாறு தங்களை தற்காத்து கொள்வது என்றும், முஸ்லீம் சமுதாயத்தை எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பது குறித்தும் PFI எங்களுக்கு பயிற்சி அளிப்பதாக PFI ஐ சேர்ந்த போராளிகள் அறிஞரிடம் PFI ன் செயல்பாடுகள் குறித்து விளக்கியுள்ளனர்.

 Arndt Emmerich  இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் புது தில்லி நகரங்களுக்கு மூன்று முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல பி.எஃப்.ஐ தலைவர்கள் மற்றும் பணியாளர்களுடன் உரையாடி இந்த தகவல்களை பெற்றுள்ளார்.

 "அல்-கைதா தோன்றியதிலிருந்தும், செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களிலிருந்தும், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய இயக்கங்களும் முஸ்லீம் அமைப்புகளும் ஆட்சிகளை ஜனநாயக முறைப்படி ஒன்றிணைக்க  விரும்பவில்லை என்றும், மதமும் அரசியலும் ஒன்றே என்றும் அதை பிரிக்கக்கூடாது என்றும் கூறிவருவதாக அறிஞர் சொல்கிறார்.

 “இந்தியாவில் ஒரு இஸ்லாமிய கிலாபாத்தை ஊக்குவித்து சமூக மற்றும் அரசியல் மாற்றத்தை உண்டாக்க விரும்பிய சிமி போல் அல்லாமல், இஸ்லாமியர் அல்லாதவர்களையும், யோகா, உடற்பயிற்சி, ஆயுர்வேதம், இந்தி & சமஸ்கிருத கோஷங்கள் மற்றும் தேசியக் கொடி  போன்ற பொது விஷயங்களையும் ஒருங்கிணைத்து எல்லோருக்குமான சம உரிமை உள்ள இந்தியாவை உருவாக்க PFI  நினைக்கிறது என்று அறிஞர் கூறுகிறார்.

 2009 இல் மைசூரில் நடந்த வன்முறையின் போது ‘காவல்துறை பாகுபாட்டை’ எதிர்த்துப் போராடுவதற்கான சட்ட வழிகளையும், அரசியலமைப்பு தொடர்பான கல்வியைப் பரப்புவதிலேயும் வெற்றிகண்ட இயக்கம் மக்களுக்கான இயக்கமாக மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது என்று அறிஞர் பாராட்டுகிறார்.

 அரசியல் மற்றும் சட்ட நிறுவனங்களின் அரசியல் விழிப்புணர்வை மேம்படுத்தவும், அவர்களுக்கு அரசியல் ரீதியாக உதவி செய்து ஜனநாயகத்தை மேம்படுத்தவும் பிபி செயற்பாட்டாளர்கள் உழைத்துவருகின்றனர். இந்த முக்கிய செயல்பாடுகளின் மூலமாக சாதாரண மக்களும் அரசியல் அதிகாரத்தை அடையமுடியும் என்று PFI  நம்புகிறது.

 புத்தகத்திற்க்கான இணைப்பு கீழே, அமேசானில் வாங்கி படித்து பயன் பெறுங்கள்.



ஆராய்ச்சி கட்டுரைக்கான இணைப்பு


அறிஞரை பற்றி அறிய 

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...