இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாகட்டும்.
49:6 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ جَآءَكُمْ فَاسِقٌ ۢ بِنَبَاٍ فَتَبَيَّنُوْۤا
اَنْ تُصِيْبُوْا قَوْمًا ۢ بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلٰى مَا فَعَلْتُمْ نٰدِمِيْنَ
49:6. முஃமின்களே!
ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத்
தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால்
(குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர்
நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.
BJP ன் B team அஸதுத்தீன் உவைஸி (AIMIM)
உத்திர பிரதேச தேர்தல் பற்றி மட்டுமல்ல மற்ற 4 மாநில தேர்தல்
பற்றியும் ஒரு கட்டுரை எழுதவேண்டும் என யோசித்து நேரம் இல்லாமல் எழுதமுடியவில்லை. ஆனால்
இன்று கட்டாயம் இந்த கட்டுரையை எழுதவேண்டிய நிர்பந்தம் உள்ளதால் எழுதுகிறேன்.
நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலின் முடிவு கடந்த 10 ந்தேதி வெளியானது. தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இன்றுவரை
AIMIM கட்சியை பிஜேபி யின்
பி டீம் என்ற வசைபாடுதல் நிற்கவில்லை. AIMIM கட்சியின் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும்
அவர்கள் பி டீமாக செயல்படவில்லை என்ற உண்மையை உரைக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
முஸ்லிம்களை பொறுத்தவரையில் எதிரியாக இருந்தாலும் வசைபாடுதல், அவதூறு கூறுதல் மற்றும் அநியாயம் செய்தல் கூடாது. பாதிக்கப்பட்டவனின்
இறைஞ்சுதலுக்கு அல்லாஹ்விடம் பயந்துகொள்ளுங்கள் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.
ஒரு முஸ்லிமுக்கு ஒரு செய்தி கிடைத்தால் அதை சரிபார்க்காமல் பரப்பமாட்டான், அதுவும் இன்றைய மோசமான காலகட்டத்தில் மிகவும் விழிப்போடு இருக்கவேண்டும்.
சரி விடயத்துக்கு வருவோம், உத்திர பிரதேச தேர்தலை சந்திக்க AIMIM , பாபு சிங் குஷ்வாஹாவின் ஜன் அதிகார் கட்சி, வாமன் மேஷ்ராமின் ராஷ்ட்ரிய பரிவர்தன் மோர்ச்சா, பகுஜன் முக்தி கட்சி,
பாரதிய வஞ்சித் சமாஜ் கட்சி மற்றும் ஜனதா கிராந்தி கட்சி ஒன்றிணைத்து
Bhagidari
Parivartan Morcha என்ற கூட்டணியை உருவாக்கியது. மேலும் Peace party
of India கட்சியை இந்த கூட்டணி ஆதரிக்கும் என்றும் முடிவுசெய்யப்பட்டது.
AIMIM உத்திரப்பிரதேசில் 100 இடங்களிலும் Peace party
of India 100 இடங்களிலும் போட்டியிட்டது. 0.49% ஓட்டுக்களை AIMIM பெற்றது. 2017 ல் 312 இடங்களை பெற்ற பிஜேபி 255 இடங்களை பெற்றும் ஆட்சி அமைக்கப்போகிறது, அதே நேரத்தில் சமாஜ்வாதி பார்ட்டி 2017 ல் 64 இடங்களை பெற்றது, 2022 ல் 111
இடங்களை பெற்றுள்ளது. பிஜேபி க்கு சரிவு என்றாலும் தனிப்பெருன்பான்மையுடன் ஆட்சி
அமைக்கப்போகிறது. அவர்களின் வெற்றிக்கு பல காரணிகள் இருந்தாலும் மிக முக்கிய காரணி பிஜேபி யை எதிர்க்கும் எவரும்
ஒன்று இணையாததுதான். மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி, இந்திய காங்கிரஸ், அகிலேஷ்
யாதவின் சமாஜ்வாதிபார்ட்டி என்று எல்லோரும் பிரிந்து நின்றுவிட்டு பிஜேபி வென்றதும்
AIMIM
தான் காரணம் என்பது கேடுகெட்ட அய்யோக்கியத்தனம்.
அதிலும் சிவ சேனா சொல்லும் (AIMIM க்கும் மாயாவதிக்கும் விருதுகள் தரவேண்டும்) அரசியல்
அறிவற்றது காரணம், மராத்தியில்
ஆட்சியை ருசிக்க காங்கிரசின் உதவி தேவை ஆனால் பிஜேபி யை வெற்றிகொள்ள காங்கிரசுடன் சேர்ந்து
போட்டியிடமாட்டமாட்டோம் என்ற நிலைப்பாடு நகைப்புக்குரியது மட்டுமல்ல, கடைந்தெடுத்தெடுத்த அய்யோக்கியத்தனமும் ஆகும். 0.03% ஓட்டுக்களை
பெற்ற சிவசேனா காங்கிரஸோடு சேராமல் நிறத்துக்கு காரணம் என்ன? பிஜேபி யை வெற்றிபெறவைக்கத்தான்.(நோட்டாவை விட குறைவு, நோட்டா 0.69%).
No comments:
Post a Comment